வெங்கடேசன் நாராயணசாமி [ஶ்ரீம.பா.10.87.18] முனிகள் காட்டிய பல வழிகளுள் அடிவயிற்று அக்கினியில் தூலமாய் நும்மைத் தொழுவர் சிலர். சூக்கும நோக்குடை ஆருணிகள் உயிர் நாடிகளின் பிறப்பிடமாம் நுண்ணிய இதயவெளியில் நும்மைத் தொழுவர். முடிவிலியே! அதிசூக்கும யோகிகள் சுழுமுனை நாடி வழி உயிரை மேலேற்றி பரமனுமது உன்னத இடமாம் பிரும்மரந்திரக் கபால வெளியில் கலப்பர். அங்ஙனம் அடைந்தோர் மீண்டும் வீழார் இப்பிறப்பிறப்பு சுழலில். [ஶ்ரீம.பா.10.87.19] பற்பல விசித்திர யோனிகள் பிறப்பித்து அந்தர்யாமியாய் அவற்றுள் நுழைந்து நீக்கமற ஸமமாய் நிறைந்து […]
முருகபூபதி சில வாரங்களுக்கு முன்னர் இலங்கை மலையகத்திலிருந்து எழுத்தாளர் மாத்தளை வடிவேலன் அவர்கள் என்னைத் தொடர்புகொண்டு, சிட்னியில் வதியும் மூத்த இசைக்கலைஞர் திருமதி அருந்ததி ஶ்ரீரங்கநாதனின் தொலைபேசி இலக்கத்தை பெற்றுத்தர முடியுமா..? எனக்கேட்டார். அவரது சில பாடல்களை அருந்ததி ஶ்ரீரங்கநாதன் ஏற்கனவே இலங்கை வானொலிக்காக இசையமைத்து பாடியிருக்கிறார். அவற்றின் ஒலிநாடாக்கள் தொடர்பாக பேசுவதற்குத்தான் வடிவேலன் அருந்ததியின் தொடர்புகளைக் கேட்டிருந்தார். “நான் வசிப்பது மெல்பனில். அருந்ததி சிட்னியிலிருக்கிறார். எவ்வாறாயினும் முயற்சித்து அவரது தொடர்பிலக்கத்தை பெற்றுத் தருகின்றேன். “ […]
(அன்புள்ள ஆசிரியருக்கு, வணக்கம். நீங்கள் நலமாக இருப்பதாக நம்புகிறேன். இந்தக் கடிதம் ஒரு நினைவூட்டலாகவும், என் பணிவான வேண்டுகோளாகவும் இருக்கிறது. என் ஶ்ருதி கீதை (ஸ்ரீமத்பாகவதம் 10.87.1–50) தமிழ் மொழிபெயர்ப்பை திண்ணை இதழில் வெளியிடுமாறு கேட்டுக்கொள்கிறேன். பரீக்ஷித் மன்னரின் கேள்வி – அனைத்து யுகங்களுக்கும் பொருந்தும் ஒரு சிந்தனை! பரீக்ஷித் மன்னர், ஶ்ரீ ஶுக மகரிஷியிடம் கேட்டார்: “மனமும், வார்த்தைகளும் பற்ற முடியாத பரம்பொருளை வேதங்கள் எவ்வாறு வர்ணிக்கின்றன? சொற்களாலும், பொருளாலும் வரையறுக்க முடியாத, முக்குணங்களையும் கடந்து […]
ரவி அல்லது வேகமாக சாலைகளில் பறந்து கொண்டிருக்கும் மனிதக் கூடுகளைப் பற்றி பெரிதாக அலட்டிக் கொள்ளத்தேவையில்லை அவைகள் நிலையாமையில் கால்கோள்வதால். அவைகளின் நிறம் குணம் பெயர் யாவுமே தனித்த அடையாளத்திற்காக முயன்று கொண்டே இருக்கும் ஏதாவதொரு வகையில். நிலை மாறும் பொழுதினில் ஏதோவொரு சுய தேவையின் பொருட்டில் யாருமற்ற இடத்தில் ஏதோவொன்றை வீசி விடுகிறது அற்ப காரணங்களுக்காக அனிச்சைக் கூடுகள் அவ்வப்பொழுது வீசுவதையே வழக்கமாக்கியதால் புரியாதப் புறாக்கள் மட்டும் இரையிடமென பொருள் கொண்டு தனக்கான தங்குமிடமாக்கியது பார்த்து […]
ரவி அல்லது யாவைச் சுற்றியும் நிறைந்திருக்கும் நிம்மதியை திளைக்கப் பழகிடாத துயரத்தில் கோப்பையைத் தூக்கியபடி கொடுந்துயரில் பார தூரம் பயணிக்கின்றேன் நிரப்பிவிடுவார்கள் நிம்மதியையென பருகிப் பரவசங்கள் கொண்டுவிட. ஆச்சரியத்திலும் ஆச்சரியமாக அனைவரும் சொர்க்கப் பானமென சுவைக்க நிரப்புகிறார்கள் வழி வழியாக நம்பியதை இட்டு. மொட்டு குடிக்க வந்தவன் நிரம்பி வழிவதறியாமல். *** -ரவி அல்லது. ravialladhu@gmail.com
சோம. அழகு இவ்வார்த்தையை ஒரு முறையேனும் ஏதோவொரு சூழலில் உச்சரிக்கச் சொல்லிப் பணிக்காத வாழ்க்கை அமையப் பெற்ற யாரேனும் இவ்வுலகில் இருக்கின்றனரா? மனதிற்கு நெருக்கமான ஒருவரது கோபங்கள், புறக்கணிப்புகள்; தன்னை விடாது துரத்தும் தன் மீதான பிறரது புரிதல் பிழைகளினின்றும் அவர்களினின்றும் தப்பிக்க விடாமல் தடுக்கும் தவிர்க்க இயலாத (பணியிட/உறைவிட) கட்டமைப்புகள்; கனவுகளும் லட்சியங்களும் மெல்ல மெல்ல காற்றில் கலந்தும் கரைந்தும் போவதை வெறுமனே வெறித்து நோக்கக் கிடைக்கும் மணித்துளிகள்; இவையெல்லாம் ஒவ்வொரு முறையும் கொஞ்சமாகப் பழகிப் […]
-ரவிஅல்லது எனக்கான சாத்தியக்கூறுகள் வாழ்க்கை முழுவதும் விரவிக்கிடக்கையில் உன்னிடம் நான் பேசியிருக்கலாம். எத்தனையோ பேரிடம் எத்தனையோ மணி நேரம் பேசினேன். உன்னிடமும் சிரித்து மகிழ்ந்து என இதில் ஏதோ ஒரு நிமிடத்தை மன்னிப்பிற்காக நான் மாற்றி இருக்கலாம். தயக்கம் என் வாழ்வின் பல போக்குகளை பலியாக்கி மாறியதை நான் அறிந்தே இருக்கிறேன். என் தயக்க வியாதி உன்னிடம் தயக்க அச்சமாய் வாழ்வோடு உள் உறுத்தலாய் இதுவரை என்னை கொண்டு வந்துவிட்டது. என் உயிர் அசைவின் இறுதி துடிப்பு […]
ரவி அல்லது பாயோடு பாயாக படுத்துக்கிடப்பனுக்கு பணிவிடைகள் செய்யும் பாட்டி ஒரு பொழுதும் சொன்னதே இல்லை நான் உன்னைக்காதலிக்கிறேனென எப்பொழுதும். தோல் போர்த்தி துவண்டு கிடக்கும் கிழவனும் மனதாரக் காதலிக்கிறேனென மருகவில்லை வாழ்வில் ஒருபொழுதும். வார்த்தைகளில் வீழாத அவர்களின் வயோதிகத்திலும் நிரம்பி வழிகிறது காதல் அருந்தி மகிழுமாறு அடுத்த தலைமுறைக்கு நேச நெகிழ்வில். *** -ரவி அல்லது. ravialladhu@gmail.com
சோம. அழகு பேரு பெத்த பேரு – அமேஏஏஏரிக்கா! எந்த மாகாணத்திற்குச் சென்றாலும் ஒரே மாதிரியான அறிவியல் பூங்கா, உயிரியல் பூங்கா, மீன்கள் பூங்கா(acquarium), கண்களுக்குச் சலிப்பைத் தரும் தற்கால கட்டிடக் கலையின் கைங்கர்யத்தில் ஒரே மாதிரியாக நிற்கும் பசுங்காரைத் தொகுதிகள் (cement blocks)….! அரிதினும் அரிதாக Grand Canyon போன்ற வித்தியாசமான நிலப்பரப்புகள், சுதந்திர தேவி சிலை, நயாகரா அருவி… அவ்வளவுதான். சுற்றிப் பார்ப்பதற்கோ ரசிக்கத்தக்கதாகவோ ஒன்றும் கிடையாது. இவர்களது அருங்காட்சியங்கள் கூட சுமார் ரகம்தான். […]
மீனாட்சி சுந்தரமூர்த்தி. கமலம் பட்டுச்சேலை பளபளக்க கழுத்தில் காசுமாலையும் வைரக்கல் அட்டிகையும் கலகலக்க, காதில் வைர லோலாக்கு ஊஞ்சலாடப் பேருந்தில் ஏறினாள். பின்னாலேயே முருகேசன் பட்டு அங்க வஸ்த்திரம்,அகலக்கரை போட்ட வேட்டி, ஜிப்பா சிலுசிலுக்க ஏறினார்.. கும்பிடறேனுங்க ஐயா, அம்மா வணக்கம் என்றார் நடத்துநர் ஓட்டுநர் திரும்பிப் பார்த்து,’ அம்மா வணக்கமுங்க, பெரியம்மா வரலியா? ‘.. மாடு, கண்ணுங்களை யாரு பாக்கறது?அதான் கெழவிய பாத்துக்கச் சொல்லி வந்துட்டோம்.’ கிழவி என்றது மாமியாரைதான். ‘பெரியவரு தேங்கா மண்டியை […]