ஒரு செடியின் கதை

பொத்திக் கிடந்த பூவித்து புறப்பட்டது-மண் வழிவிட்டது   நாளும் வளர்ச்சி நாலைந்து அங்குலம் ஆறேழு தளிர்கள் அன்றாடம் பிரசவம்   தேதி கிழித்தது இயற்கை புதுச் சேதி சொன்னது செடி   முகம் கழுவியது பனித்துளி தலை சீவியது காற்று மொட்டுக்கள்…

ஒரு தாதியின் கதை

  புரையோடிய புண்ணையும் புன்னகையால் கழுவி களிம்பிட்டுக் கட்டுவார்   ஆறேழு நாளில் ஆறிவிடு மென்று நம்பிக்கை விதைப்பார் நலம் கூட்டுவார்   அந்த மருத்துவ மனையில் புண்ணாற்றும் பிரிவில் இது பதினேழாம் ஆண்டு அந்தத் தாதிக்கு   ஒரு நாள்…

பணிவிடை

காலையும் மாலையும் செல்ல நாயோடுதான் சிறு நடை வார்ப் பட்டை ஒரு கையில் கழிந்தால் கலைய ஒற்றுத் தாட்கள் மறு கையில் அந்த ‘இனிய’ பணிவிடையில் அலாதி இன்பம் அம்மாவுக்கு ஆனால் பெற்ற குழந்தைக்கு ‘பெம்பர்ஸ்’ கலைவது எப்போதுமே பணிப் பெண்தான்…

தண்டனை யாருக்கு?

14 டிசம்பர் 2012ல் நியூயார்க்கில் நியூடவுன் நகரில் சாண்டி ஹூக் பள்ளியில் 27 குழந்தைகள் சுட்டுக் கொலை. இது செய்தி. இனித் தொடருங்கள் அறிவு பெருக்கு மிடத்தில் குருதிப் பெருக்கு குறுத்துக்கள் 27 குருதிச் சேற்றில் இனி குண்டு துளைக்காக் கவசங்கள்…

காதல் அன்றும் இன்றும்

ஆயிரம் முகில்கள் கடக்கும் – ஆனால் ஒன்றுதான் மழையை இறக்கும் ஆயிரம் பார்வைகள் தொடுக்கும் – ஆனால் ஒன்றுதான் காதலைப் பதிக்கும் சிக்கி முக்கியாய் உரசும் அந்தத் தீப்பொறியில் காதல் உயிர்க்கும் மின்னல் ஒன்று சொடுக்கும் காதல் மின்சாரம் உடம்பெங்கும் நிறைக்கும்…

தீபாவளியின் முகம்

  நீலம் புயலால் தரை தட்டியிருக்கிறது வாழ்க்கைக் கப்பல்   கொஞ்சம் படுத்துக் கொள்ள பாய் தேடுகிறது உலகப் பொருளியல்   வலிகள் இவைகளுக் கிடையேதான் சுகப் பிரவேசமாய்த் தீபாவளி   ஒரு சிரிப்பை எழுதத்தான் மையாகிறது கண்ணீர்   ‘சுபம்’…

தபால்காரர்

1960ல் ஆறாம் வகுப்பு நாட்கள் தண்ணீரும் தாகமுமாய்க் கலந்த நண்பனைப் பிரிகிறேன் ஈரம் சேர்த்துச் சொன்னான் ‘போய்க் கடிதம் எழுதுகிறேன்’ ஏழெட்டு நாட்களாய் என்னைக் கிழித்துப் போட்ட அந்தக் கடிதம் வந்தது இந்த நாட்களில்தான் தபால்காரர் எனக்குள் இன்னொரு இதயமானார் தொடர்ந்தன…

6 ஆகஸ்ட் 2012

    செவ்வாய் கிரகத்தைச் சதுரஅடி சதுரஅடியாய்ச் சலித்துச் சலித்துச் சொல்லி  விட்டோம்   கணினியில் ‘செவ்வாய்’ என்று தட்டினால் கொத்துக் கொத்தாய்ச் செய்திகள் இறங்கிக் ‘குறித்துக் கொள்’ என்கிறது   ஆனாலும் நாம் சும்மாவா இருக்கிறோம்?   சூரியக் குடும்பத்தில்…

தாவரம் என் தாகம்

துவக்கப் பள்ளியில் தோட்டம் போட்டோம் நான் கத்தரி வைத்தேன் சாணமும் சாம்பலுமாய் சத்துர மிட்டேன் கண்காட்சியானது என் கத்தரிச் செடிகள் வாத்தியார் சொன்னார் ‘செடியைக் குழந்தையாய் வளர்க்கிறாய் சிறந்த தந்தையாவாய் நீ’ பத்தாம்வகுப்பில் வாத்தியார் கேட்டார் ‘பார்த்ததில் ரசித்தது எது?’ ‘பூவோடும்…

பிடுங்கி நடுவோம்

விசாலமான வீடுகள் வினாக் குறியாய்க் குடும்பங்கள் மாமா என்கிறோம் அம்புலியை யாரோ என்கிறோம் அண்டை வீட்டாரை எல்லாரும் திறனாளிகள் எல்லாரும் பட்டதாரிகள் எல்லாரும் கடனில் அனைவர் கையிலும் அறிவுச் சாவி திறக்கத்தான் நேரமில்லை மருந்துகள் ஏராளம் நோய்கள் அதைவிட ஏராளம் ஆதாயம்…