21. ஹாங்காங் பயணம் – பழைய நினைவுகள் மறுபடியும் பெற்றோரை விட்டுப் பிரிவது கஷ்டமாகவே இருந்தது. தாய் சானுக்கு ஹாங்காங்கில் தான் எதிர்காலம் இருக்கிறது என்று அறிந்த போதும், பிரிய மனமின்றி அழுதார். சானுக்கு இரண்டு வருட கெடு வைத்தார் தந்தை. அந்த இரண்டு வருடங்களில் அவனால் வெற்றி பெற முடியாவிட்டால், ஆஸ்திரேலியாவிற்கே திரும்பி விட வேண்டும் என்ற நிபந்தனையை வைத்தார். வெற்றி பெற இரண்டு வருடங்கள் போதவில்லையென்றாலும், தோல்வியைச் சந்திக்க அதுவே போதுமானது என்று சான் […]
20. ஹாங்காங்கில் மறுபடியும் வாய்ப்பு வில்லி சான் என்பவர். அவர் அனுப்பிய தந்தி சானுக்கு ஒரு புதிய வாழ்க்கைக்கு திறவுகோலாக அமைந்தது. அவர் காதே நிறுவனத்தின் உதவி மேலாளராக இருந்தார். காதேயின் பழைய ஸ்டூடியோவை கோல்டன் ஹார்வெண்ட் வாங்கியிருந்ததால், இரு நிறுவனத்திற்கும் நெருங்கிய தொடர்பு இருந்தது. அதனால் வில்லி கோல்டன் ஹார்வெண்ட் படப்பிடிப்புகள் நடக்கும் போது அங்கே வருகை தந்த நடப்பனவற்றை பார்த்துக் கொண்டு இருப்பார். அவர் விநியோகத்திற்கான படங்களைத் தெரிவு செய்பவர் என்பதால், படம் எப்படி […]
19. ஆஸ்திரேலிய வாழ்க்கை 19. ஆஸ்திரேலிய வாழ்க்கை Jackie-Chan-jackie-chan-5468506-553-800ஆஸ்திரேலியா திரும்பிய மகனைக் கண்டதும் தாய் பெரிதும் மகிழ்ந்தார். வெற்றிக்காக வாழ்த்துத் தெரிவித்தார். பரிசாகத் தந்த கடிகாரத்தைக் கண்டதும், ஆனந்தக் கண்ணீர் வடித்து மகனின்திறமையைக் கண்டு மகிழ்ந்தார். தந்தை பரிசைப் பார்த்து விட்டு அத்தனை மகிழ்ச்சி கொள்ளவில்லை. எப்படி இந்தக் குறைவான காலத்தில் இத்தனைப் பணம் சம்பாதித்திருப்பான் என்று ஐயம்கொண்டரோ என்னவோ. “அப்பா.. என்னுடைய ஒப்பந்தம் மூன்று படங்களில் நடிக்க இருந்தது. அதை மிகவும் சிறப்பாகவும் வேகமாகவும் முடித்ததால், எனக்கு […]
குருவின் பாராமுகம் சானை வெகுவாக பாதித்தது. குரு ஒரு நாள் எல்லா மாணவர்களையும் அழைத்துப் பேசினார். “உங்கள் நெடு நாளையப் பயிற்சி முழுமை பெறும் தருவாயில் இருக்கிறது. நீங்கள் என்னை மகிழ்விக்க இதைச் செய்யவில்லை. இன்னும் பெரிய சாதனை செய்யவே இந்தக் கடுமையான பயிற்சி. பார்வையாளர்கள் முன்னால் அதுவும். என் முன்னால் தவறு செய்தால், தண்டனை மட்டுமே கிடைக்கும். ஆனால் அவர்கள் முன் தவறு செய்தால், உங்கள் பெயர் மட்டுமல்லாது, நம் […]
16. தத்துப் பிள்ளையாய் கழகத்தில் இருந்த போது மாணவர்களுக்கு வெளி உலக விசயங்கள் மேல் கவனம் செலுத்த வாய்ப்பே இல்லாமல் போனது. தினப்படி காரியங்கள், பயிற்சிகள், வகுப்புகள் என்று தினம் போவதேத்தெரியாது. ஆசிரியர்களை மகிழ்விக்க மட்டுமே இந்தப் பயிற்சிகள் நடத்தப்படவில்லை. உலகப் புகழ்பெற்ற சீன நாடகம் ஒபராவில் பங்கேற்கவே இத்தனைக் கடினமான பயிற்சிகள் செய்ய வேண்டியிருந்தன. வித்தைகள், மேடை சாகசங்கள், நடிப்பு, பாட்டு என்று அனைத்து விசயங்களையும் கற்க வேண்டியிருந்தது. அதை உணரும் வகையில் சானும் அவனது உடன் […]
15. நரகமாகிப் போன மாயலோகம் சார்லஸ் குடும்பத்தினர் சீன நாடகக் கழகத்தை அடைந்த போது, குரு அவர்களுக்காகக் காத்திருந்தார். சானின் பெற்றோரை வரவேற்று விட்டு, அவனது தோளைத் தொட்டு நடத்தி, “வா.. கொங் சாங்”என்று அன்புடன் கூறி, கூடத்திற்கு அழைத்துச் சென்றார். “நீ இங்கு வரும்போதெல்லாம் நன்றாக இருந்ததல்லவா.. நீ இங்கே தங்குவதை விரும்புவாய் என்று எண்ணுகிறேன்” என்று பேசிக் கொண்டேநடந்தார். உடனே தந்தையின் பக்கம் திரும்பி, “அப்பா.. நான் நிஜமாகவே இங்கேத் தங்கலாமா?” என்று கேட்டான் சான். “ஆமாம் பாவ்.. உனக்கு எவ்வளவு நாள் வேண்டுமோ.. அவ்வளவு நாள்” என்றார் தந்தை. உண்ணும் மேசை மேல் ஒரு காகிதச் சுருள் வைக்கப்பட்டு இருந்தது. அதில் ஏதோ எழுதப்பட்டிருந்தது. அதைப் படிக்கத் தெரியாத காரணத்தால், சான் அதைக் கண்டு கொள்ளவில்லை. சார்லஸ்அதைப் படித்துப் பார்த்தார். தாயும் அவரது கைகளைப் பிடித்துக் கொண்டு எட்டி எட்டிப் பார்த்துப் படித்தார். “சான் அவர்களே.. எல்லாம் சரியாக இருக்கிறதா?” என்று கேட்டார் குரு. “இதில் இருப்பது தான் நடைமுறைபடுத்தப்படும். நீங்கள் கையெழுத்திட்ட பின், இங்கு இருக்கும் வரை உங்கள் மகன் என்முழுப் பொறுப்பில் இருப்பான். நான் என் செலவில் உணவு, உடை, தங்கும் இடம் கொடுத்து விடுவேன். அவனது பாதுகாப்பிற்கு நான் உத்தரவாதம். நான் உலகின் மிகச் சிறப்பான பயிற்சியைஅவனுக்குக் கொடுத்துப் பெரியாளாக்குவேன். அவன் மிகப் பெரிய நட்சத்திரமாகும் வாய்ப்பும் உண்டு” என்று உறுதி கூறினார். தந்தை சொல்வதனைத்தையும் கேட்டுவிட்டு, “அவன் சம்பாதிப்பது கழகத்தைச் சேர்ந்தது என்று பத்திரம் சொல்கிறதே?” என்று கேட்டார். “நாங்கள் கழகத்தை குழந்தைகளின் நிகழ்ச்சிகளின் மூலமாகத் தான் நடத்தி வருகிறோம். அதனால் நாங்கள் சொல்லித் தருவனவற்றை தொடர்ந்து கற்று, தங்கள் திறமைகளை வளர்த்துக் கொள்ளவேண்டும். சரி தானே..” சார்லஸ் குருவின் கூற்றை ஆமோதித்துவிட்டு, “இன்னொரு விசயம். பையனை ஒழுங்குப்படுத்துவதாயும், அதுவும் இறக்கும் அளவிற்கும் கூட சென்று ஒழுங்குப்படுத்துவதாய் உள்ளதே..” என்றுபயத்துடன் கேட்டார். “ஆம்.. கலைக்கு ஒழுக்கம் ஆத்மா. மனித இனத்தின் வேரே ஒழுக்கம் என்று சொல்லப்படுகிறதல்லவா?” என்று எதிர் கேள்வி கேட்டார். சார்லஸ் அதை ஏற்றுக்கொண்டு, சானை அழைத்து, “பாவ் கவனமாக் கேள்..” என்றார். “என்னப்பா?” “உனக்கு இங்கு எவ்வளவு காலம் இருக்க வேண்டும். ஐந்து வருடம், ஏழு வருடம்..?” என்று கேட்டார். “எப்போதும்” என்று மகிழ்ச்சியுடன் உரக்கக் கத்தினான். தாய் சார்லஸின் கைகளை பலம் கொண்ட மட்டும் அழுத்தினார். “அதிகபட்சம் பத்து ஆண்டுகள் இருக்க முடியும்” என்றார் குரு. பத்திரத்தில் பத்தாண்டு காலம் என்று எழுதி சார்லஸிடம் நீட்டினார். கையெழுத்திட்டுப் பெயர் பதித்த முத்திரையை இட்டார் சார்லஸ். சானுக்கு நடப்பது ஏதும் புரியவில்லை. அடுத்த பத்து ஆண்டுகள் கழகத்தின் சொத்தானான் சான். கையெழுத்தான சிறிது நேரத்திலேயே, அங்கு விளையாடிக் கொண்டிருந்த சான் அழைக்கப்பட்டான். “விடை கொடுக்க எங்களுடன் வா பாவ்..” என்று தாய் கூறினார். அப்போது சானுக்கு அது புரியவில்லை. இப்போதே விடைபெற வேண்டியது தானே என்று எண்ணினான். தாய் சொன்ன விதத்தை உணர்ந்து, சான் மறு பேச்சு பேசாமல் அவர்களுடன் நடந்தான். “நான் சீக்கிரமே வந்து விடுவேன்” என்று அங்கிருந்தவர்களிடம் சொல்லிவிட்டு சான் கிளம்பினான். வீட்டிற்குச் சென்று பொருள்களை எடுத்துக்கொண்டு கப்பல் துறைமுகத்திற்கு வந்தனர். சிறிது நேரத்தில் தந்தை கிளம்ப எல்லா ஏற்பாடுகளையும் செய்தார். தாயிடமிருந்து விடைபெற்றுக் கொண்டு சானிடம் வந்தார். “கொங் சாங்.. நீ இப்போது பெரியவன். உன்னைப் பார்த்துக் கொள். நீ எங்களுக்குப் பெருமை சேர்ப்பாய் என்று நன்றாகத் தெரியும்” […]
14. மாய லோகத்தின் அறிமுகம் பணம் இருந்த தைரியத்தில் உடனே தந்தைக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டான். தன்னுடைய இயலாமையைச் சொல்ல வெட்கமாக இருந்தது. அதனால் மறுபடியும் பொய் சொல்லத் தீர்மானித்தான். “அப்பா நான் அங்கே வரப் போகிறேன்..” “அப்படியா.. ரொம்ப சந்தோஷம். ஒப்பந்தம் முடிஞ்சிட்டதா?” என்றார் ஆவலுடன். “ஊம்.. முடிஞ்சிட்டது. இருந்த கொஞ்ச நாள்ல்லயே.. நான் ரொம்ப கஷ்டப்பட்டு உழைச்சி, நிறைய சம்பாதிச்சேன். கொஞ்ச பணத்த சேர்த்தும் வைச்சிருக்கேன். அதனால உங்களப் பார்க்க வரலாம்ன்னு இருக்கேன்” என்று […]
ஆஸ்திரேலியாவில் தனிமையில் எந்த வேலையும் செய்யாமல் இருக்கப் பிடிக்காமல் தந்தையிடம் ஒப்பந்தம் இருக்கிறது என்று பொய் சொல்லி ஆறு மாதம் கழித்து ஹாங்காங் திரும்பினான் சான். அந்த ஆறு மாதங்களில் பல மாற்றங்கள் ஏற்பட்டிருந்தன. விட்டுச் சென்ற வீடு தூசும் தும்புமாக இருந்தது. வீட்டைச் சுத்தம் செய்யவே ஒரு நாள் பிடித்தது. தங்குவதற்கு வசதிகளைச் செய்த பின்ஸ்டுடியோ பக்கம் சென்றான். அவனைப் பலரும் மறந்து விட்டிருந்தனர். வேலை தேடிச் சென்ற போது அவன் பெயரைக் கூட பலர் […]
ஆஸ்திரேலிய மண்ணைத் தொட்ட பின் தான் வாழ்க்கை என்ன என்பதை உணர முடிந்தது. விமான நிலையத்தில் பையை வைத்துக் கொண்டு பெற்றோரைத் தேடி அலைந்தான். அவர்கள் சொன்னஎந்தக் குறியீடுகளும் அங்கு இருக்கவில்லை. கூட்டம் அதிகமாக இருந்தது. சீன மொழி பேசுவோர் ஒருவரும் இருக்கவில்லை. சின்ன சீட்டில் வீட்டு முகவரியை வைத்துக் கொண்டு அலைந்தான். அங்கிருக்கும் மனிதர்களிடம் கேட்கலாம் என்றால், நீண்ட முடியும், ஆசிய உருவமும் சாதாரண உடையும் அவர்களை ஓட வைத்தன. அங்கே தனித்துவிடப் பட்டான். அதுவும் அன்னிய நிலத்தில். இறுதியில் ஒரு விமான பணிப்பெண், சீன மொழி தெரிந்திருந்ததால், அவனிடம் வந்து பேசினாள். “எங்கே போக வேண்டும்?” “நான் இந்த முகவரிக்குப் போக வேண்டும்” என்று கூறிவிட்டு, சீட்டைக் கொடுத்தான். அவள் அதை வாங்கிப் பார்த்தாள். “இந்த இடம் சிட்னி. இந்த முகவரி கான்பராவில் இருக்கிறது” என்று சொன்னதும் அதிர்ந்து போனான். தவறான இடத்திற்கு வந்து விட்டோமோ .. இனி என்ன செய்வது? என்று யோசித்துக்கொண்டிருக்கும் போதே, “நீங்கள் இன்னொரு விமானத்தில் அங்கு போக வேண்டும்” என்று கூறினாள். அதைக் கேட்டதும், “அது எங்கே இருக்கும்?” என்று உடனே கேட்டான். விமானப் பணிப்பெண் அவன் செல்ல வேண்டிய விமானம் நிற்கும் இடத்தைக் காட்டி விட்டுச் சென்றாள். பயந்து கொண்டே சென்றான். இன்னும் என்னவெல்லாம் பட வேண்டுமோ? ஆங்கிலம் தெரியாமல் திண்டாட வேண்டியிருக்கிறதே என்று வருந்தினான். கான்பரா சென்று சேர்ந்ததும், அங்கும் தன் பெற்றோரைத் தேடினான். அரைமணி நேரம் தேடினான். அவர்களைக் காணவில்லை. தான் வந்த இடம் சரிதானா என்ற ஐயம் ஏற்பட்டது. இனி தன் கதிஅதோ கதி தான் என்று எண்ணி, மிகச் சோர்வுடன், வெறுத்துப் போய் ஒரு நாற்காலியில் தன் பையை தொப்பென்று போட்டு விட்டு, முகத்தை மூடிக் கொண்டு என்ன செய்வதென்று யோசிக்கத்தொடங்கினான். ஹாங்காங் தான் மோசம் என்றால், இங்கு அதை விடவும் மோசமல்லவா? யார் என்னைப் புரிந்து கொள்வார்கள்? பெற்றோரிடம் கொண்டு சேர்ப்பார்கள்? அப்போது யாரோ தோளைத் தொட்டது போல் தோன்றியது. நிமிர்ந்து பார்த்தான். அதீத மகிழ்ச்சி. நின்றிருந்தது அவனது தாய். “அம்மா..” அப்படியே மகிழ்ச்சியில் கத்தினான். தாய்க்குப் பின்னால் அவனது தந்தை நின்றிருந்தார். சான் தன் தந்தையைப் பல வருடங்களுக்குப் பிறகு பார்க்கிறான். அவர் சற்று தளர்ந்து காணப்பட்டார். தலைமுடி முழுவதுமாக நரைத்திருந்தது. “அம்மா.. எங்கே போனீங்க?” என்று கோபத்துடன் கேட்டான். “நாங்கள் இங்கே தான் இருந்தோம்” “அப்போ ஏன் என்னிடம் வரல்லை..” “நீ ஆளே மாறிட்டே போ.. உன்னை அடையாளம் கண்டு கொள்ள முடியாமல் நாங்களும் உன்னை தேடிக் கொண்டிருந்தோம். கடைசியில் நீ இங்கே வந்து உட்கார்ந்ததும் தான் உன்னைத் தெரிந்துகொண்டு இங்கே வந்தோம்..” என்றார் தாய். பத்து வருடங்கள் அவனைப் பெரிதும் மாற்றியிருந்தது என்பது உண்மை. குண்டாக இருந்தது மாறி ஒல்லியாகி விட்டருந்தான். உயரமும் கூடியிருந்தது. ஆள் அடையாளம் தெரியாமல்உருமாறியிருந்தது உண்மை தான். தந்தைக்கு அவன் அங்கு வந்தது மகிழ்ச்சியைக் கொடுத்தது. ஏனென்றால் பத்தொன்பது வயதில் அங்கு குடியுரிமைப் பெறுவது மிகவும் எளிது. ஹாங்காங்கை 1997லில் சீனாவிற்கு கொடுத்த பின்னர் என்ன நடக்குமோ என்பது தெரிந்திராத நிலையில் ஹாங்காங்வாசிகள் இன்னொரு நாட்டின் குடியுரிமையை வாங்கி வைத்துக் கொள்வதைநல்லது என்று எண்ணியிருந்த காலம் அது. அதையே சானின் தந்தையும் எண்ணினார். கான்பராவில் தந்தை பணி செய்து கொண்டிருந்த அமெரிக்க தூதுவர் அலுவலக குடியிருப்புப் பகுதியில் சான், தன் பெற்றோருடன் தங்கினான். சான் அங்கேயே சிறிது காலம் தங்கியிருந்து குடியுரிமையைப் பெற்றான். அதைப் பெற்ற பின், அவனுக்கு தான் மேலும் அன்னியமாகிப் போனதைப் போல் தோன்றியது. பிறந்து வளர்ந்த ஹாங்காங்கிலேயே தன்னால் சாதிக்க முடியாத போது, இந்த அன்னிய மண்ணிலா சாதிக்கப் போகிறோம் என்ற வெறுப்பு தொற்றிக் கொண்டது. […]
சானின் பெற்றோர் அடிக்கடி அவனது எதிர்காலம் பற்றி யோசனை செய்த வண்ணம் இருந்தனர். பிரன்சுத் தூதுவர் வீட்டில் செய்யும் வேலை எல்லாவிதத்திலும் சௌகரியமாக இருந்த போதும், அந்த வேலை மூலம் பணம் சேமிக்க முடியவில்லை. வேறு எந்த எதிர்காலமும் இருந்ததாகத் தோன்றவில்லை. அவர்களது வேலை நேர்த்தி பலருக்கும் தெரிய வந்ததன் காரணமாக, பல விதமான வேலைகள் சார்லஸ் சானைத் தேடி வந்தன. அவற்றை ஒத்துக் கொள்வதா வேண்டாமா என்று எண்ணிக்கொண்டு இருந்த வேளையில், […]