தலை பாறையில் தாக்கியதும், மயக்கமே வந்து விட்டது சானுக்கு. உலகமே இருண்டு தலை சாய்ந்தான். சானைத் தள்ளிச் சாய்த்தச் அந்தச் சிறுவன் ஒரு தூதுவரின் மகன். சான் பேச்சு மூச்சற்று விழுந்து கிடைந்ததைக் கண்டு பயந்து போன அந்தச் சிறுவன், தன் தந்தையிடம் விசயத்தைச் சொல்ல ஓடினான். மற்ற சிறுவர் சிறுமியர்கள் இங்கொருவர் அங்கொருவராய் சிதறி ஓடினார்கள். சிறுவனின் தந்தை சானின் நிலையைக் கண்டு ஆடிப் போய்விட்டார். சான் இறந்திருந்தால் அது இரு […]
பாவ் தந்தையின் நேரடிப் பார்வையில் பல விஷயங்களைக் கற்றுக் கொண்டான். தந்தையுடன் அதிகாலையில் செய்யும் கஷ்டமான உடற்பயிற்சிகள் உடல் வலியைத் தரும். இருந்தாலும், இருந்த இடத்தின் வனப்பும், காலைச் சூரியனின் மிதமான சூடும், தகதகக்கும் கடலின் எழிலும் எத்தனை முறை பார்த்தாலும் அலுக்கவே அலுக்காது. அந்த நேரங்களையே தன்னுடைய சந்தோஷமான நாட்களாக இன்றும் ஜாக்கி சான் நினைவு கூர்கிறார். அதே வீட்டிலேயே, தாய்க்கு உதவி செய்து கொண்டும் தந்தை காய்கறியை வெட்டிக் […]
நம் சாகச நாயகன் ஜாக்கி சான் மக்கள் உள்ளங்களைக் கவரக் காரணமான குங்பூ பற்றி இந்தத் தொடரில் கொஞ்சம் தெரிந்து கொள்ளலாம். சீனத் தற்காப்புக் கலையான குங்பூ என்ற சொல்லிற்கு “நீண்ட பயிற்சியினால் பெறப்படும் திறமை” என்பது பொருள். இந்தக் கலையில் இருக்கும் சண்டைப் போக்கு, ஸ்டைல் மிகவும் சிக்கலானது, கடினமானதும் கூட. குங்பூவின் வரலாறு என்று பார்க்கும் போது, அது ஹ_னான் மாகாணத்தில் இருந்த சொங் ஷான் ஷவோலின் மடத்தில் […]
அதிகாலை நேரம். சார்லஸ் தூக்கிக் கொண்டருக்கும் மகனின் பக்கம் சென்று, “பாவ் பாவ், விடிச்சிடுச்சு. எழுந்திரு, எழுந்திரு!” என்று உரக்கக் கத்தினார். பாவ்வுக்கோ நல்ல உறக்கம். எழலாமா வேண்டாமா என்று எண்ணிக்கொண்டு இருக்கும் வேளையிலேயே, போர்வை வேகமாக இழுக்கப்பட்டது. பல முறை இப்படி இழுக்கப்பட்ட போது பாவ் தலை குப்புற விழுந்திருக்கிறான். பல முறை தலை தரையில் படாமல் தப்பிக்கப் பல சாகசங்களைச் செய்யதிருக்கிறான். இப்போது பழகிவிட்டிருந்ததால், தன்னை ஸ்திரப்படுத்திக் கொண்டு […]
சார்லஸ் தன் மனைவி லீ லீயுடன் பேசிக்கொண்டு இருந்தார். “இன்னிக்கு உடம்பு எப்படி இருக்கு?” “பரவாயில்லை. என்னைக்கு குழந்தை பிறக்குமோ? இதோட பெரிய பாடாய் இருக்கு..” “என்ன செய்யறது? குழந்தைங்கன்னா பத்து மாசத்துல பொறந்துடும். நம்ப குழந்தை என்னன்னா.. பன்னென்டு மாசமாகியும் பிறக்கலையே..” “ஆமாங்க.. குழந்தை ரொம்பவே படுத்துது ..” — மருத்துவமனையில் லீ லீக்கு ஆண் குழந்தை பிறந்தது. “அப்பாடா.. குழந்தை பொறந்தாச்சு. உனக்கு உடம்பு […]
சான் புரூஸ் லீயுடன் நெருக்கமாகப் பழகாவிட்டாலும், அவர் செட்டில் நடந்து கொண்ட விதத்திலிருந்து, அவரைப் பற்றி நிறைய தெரிந்து கொண்டான். அவருக்கு நெருக்கமானோர் மிகச் சிலரே. ஏனென்றால் அவர் மிகப் பெரிய நட்சத்திரமாக இருந்தார். ஆனால் அவர் மிகச் சாதாரண ஸ்டண்ட் கலைஞர்களையும் மதிக்கும் குணம் பெற்றவர். அவர் தன்னுடைய முதலாளிகளை எதிர்த்தும் கூட, தன் கீழ் பணி புரியும் கலைஞர்களை நன்கு கவனித்துக் கொண்டாராம். பிஸ்ட் ஆப் புயூரி படம் வெளிவந்த சில […]
பிஸ்ட் ஆப் புயூரி படத்தின் அனுபவம் சானுக்கு தான் யார் என்பதை உணர வைத்தது. யாரையும் வீணே புகழ்ந்து துதி பாடி வாழ விரும்பாத குணம் தனக்கு இருந்ததைத் தெரிந்து கொண்டான். எத்தனை தான் நல்ல முறையில் ஸ்டண்ட் செய்தாலும், சான் நிச்சயம் இயக்குநர், தயாரிப்பாளர், முக்கியமாக ஸ்டண்ட் ஒருங்கிணைப்பாளரின் கீழ் அவர்களது ஏவலுக்கு பணிந்தே வேலை செய்ய வேண்டி இருந்தது. அடிதடி சண்டைக் காட்சிகள் எடுக்கும் போது ஒருங்கிணைப்பாளரின் கை மிகவும் […]
ஆம். உங்கள் ஊகம் சரியே. அந்தக் கதாநாயகன் புரூஸ் லீ தான். படம் எல்லோர் மனதையும் கவர்ந்த பிக் பாஸ். புரூஸ் லீயின் சண்டையிடும் திறம், அவரது வலிமை, உடற்கட்டு அனைத்துமே திரையுலக ரசிகர்களையெல்லாம் எளிதில் அவர் பக்கம் சாய்த்தது. புரூஸ் லீ யை – லீ சியூ லொங் என்று அழைப்பர். லீ சின்ன டிராகன் என்று பொருள். டிராகன் என்பது சீனாவில் கற்பனையாக வடிக்கபட்ட சிங்கத் தலையும் பாம்பு போன்ற நீண்ட உடலும் கொண்ட […]
நம் சாகச நாயகன் யார் என்று ஊகித்திருப்பீர்கள் என்று எண்ணுகிறேன். அவர் தான் ஜாக்கி சான். அவர் குழந்தை நடிகராகச் சில படங்களில் நடித்திருந்ததால் திரையுலகில் பல பெரிய நட்சத்திரங்களைச் சந்திக்கும் வாய்ப்பு அவருக்குக் கிடைத்திருந்தது. அவர் நட்சத்திரமாக, நாயகனாக நடிக்க முதன்முதலில் கிடைத்த வாய்ப்பைப் பற்றி அறிந்து கொள்வோமா? 1970 ஆம் வருடம். சானுக்கு பதினேழு வயது. சாதாரண ஸ்டண்ட் நடிகனாக தினம் தினம் ஸ்டுடியோ வாசலில் காத்திருந்து காத்திருந்து, […]
ஹாங்காங் வெளியில் ஆட்கள் நடக்கும் சத்தம் கேட்ட வண்ணம், மெங் சியாங் யு நி;ன்றிருந்தாள். அவர்கள் பேரரசரின் ஆட்கள் என்பது அவள் அறிந்ததே. பல மாதங்களாக சீனப் பெருஞ்சுவர் கட்டத் தேவையான ஆட்களைப் பல இடங்களிலிருந்தும் அழைத்துச் செல்லவே அவர்கள் அப்படி அலைந்து கொண்டு இருந்தார்கள். ஒவ்வொரு வீட்டுக் கதவையும் அவர்கள் தட்டாமல் செல்லவில்லை. டொங்! டொங்! கதவு இடிபடும் சத்தம் கேட்கும் போதெல்லாம், மெங் பெரிதும் கவலைப்படுவாள். எந்தக் குடும்பத்தினர் அவர்களிடம் அகப்பட்டார்களோ என்று எண்ணிக் […]