author

1. சாகசச் செயல் வீரன்

This entry is part 1 of 27 in the series 4 ஆகஸ்ட் 2013

ஒரு படப்பிடிப்பு அரங்கம். நாயகன் சண்டையிடும் காட்சி. படப்பிடிப்புக் குழுவினர் தயாராய் இருக்கின்றனர். காட்சி சற்றே ஆபத்தானது என்பதால் கதாநாயகனுக்கு பதிலாக ஸ்டண்ட் நடிகர் அழைக்கப்பட்டார். இயக்குநர் காட்சியைப் பற்றி ஸ்டண்ட் கலைஞர்களின் ஒருங்கிணைப்பாளரிடம் விவரித்தார். “நாயகன் வில்லன் நடிகருடன் சண்டையிட்டுக் கொண்டே பதினைந்தடி உயரத்திலிருந்து கீழே விழ வேண்டும், அதுவும் பின் பக்கமாக” என்று தன் திட்டத்தைச் சொன்னார் இயக்குநர். “இதை எளிதில் செய்துவிடுவார் என் ஆள்” என்றார் ஒருங்கிணைப்பாளர் வேகமாக. “காட்சிக்குத் தயாராகச் சொல்லுங்கள்” […]

உறவுப்பாலம்

This entry is part 14 of 27 in the series 30 ஜூன் 2013

சித்ரா சிவகுமார் ஆங்காங் ஆங்கிலேயர்களின் 100 ஆண்டுகளுக்கு மேலான ஆட்சிக்குப் பிறகு 1997இல், ஆங்காங் சீனாவிடம் ஒப்படைக்கப்பட்டது.  1996லிருந்து இங்கு வாழ்ந்து அதன் வளர்ச்சியைக் கண்கூடாகக் காணும் வாய்ப்பு எனக்குக் கிட்டியது.  பற்பல வளர்ச்சிப் பணிகள் நடந்த வண்ணம் இருக்கின்றன.  அதில் மிகவும் பிரம்மாண்டமான திட்டம் தான் சீனாவின் மூன்று முக்கிய நகரங்களுக்கு உறவுப்பாலம் அமைப்பது. பேச்சு வார்த்தைகளால் அல்ல.  கடல் வழி பாலம் அமைத்து, அவற்றை இணைப்பது.  ஆம்.. ஆங்காங், மக்காவ், ஜூஹாய் ஆகிய மூன்று […]

மந்திரமும் தந்திரமும் – ஜப்பானிய நாடோடிக்கதை

This entry is part 14 of 33 in the series 14 ஏப்ரல் 2013

மந்திரமும் தந்திரமும் ஒரு காலத்தில், ஒரு பெரிய மலைக்கு அருகே, ஒரு அழகிய கல்விக்கூடம் இருந்தது. அதில் ஒரு இளைஞன் பயிலச் சேர்ந்தான்.  அவன் மிகவும் குறும்புக்காரன்.  எப்போதும் ஏதாவது சில்மிஷம் செய்து கொண்டே இருப்பான்.  அடுத்தவர்களுக்கு தொந்தரவுகளைக் கொடுத்து மகிழ்ச்சி கொள்வான்.  கடினமான பயிற்சிகளைச் செய்ய விரும்ப மாட்டான். அடிக்கடி குட்டித் தூக்கம் போட விரும்புவான்.  எப்போதும் முயல்களை துரத்திப் பிடித்து இம்சை செய்வான்.  குருவிற்கு அவனை எப்படித் திருத்துவது என்று புரியவில்லை.  அவருக்கு அவன் […]

பொன்விழா காணும் தமிழ்ச் சீன வானொலி

This entry is part 1 of 31 in the series 7 ஏப்ரல் 2013

“தேமதுரத் தமிழோசை உலகமெங்கும் பரவும் வகை செய்தல் வேண்டும்” கவியின் கனவினை மெய்பிக்க எத்தனையோ ஆயிரம் தமிழ் மக்கள் இருக்க, வேற்று நாட்டினர் மொழியினைக் கற்று, திறம்படக் கையாண்டு, தமிழோசையைப் பரப்புவது சிறப்பான விஷயமல்லவா? அதைத் தான் தொடர்ந்து ஐம்பது வருடங்களாக செம்மையாக செய்து வருகின்றனர் சீன வானொலியின் தமிழ்ப் பிரிவினர். 56 உலக மொழிகளில், ஹிந்தி, வங்காளம், தமிழ் என்ற மூன்று இந்திய மொழிகளில் நாள்தோறும் குறிப்பிட்ட நேரங்களில் நிகழ்ச்சிகளை தருகிறது சீன வானொலி. தமிழ் […]

மூன்று அரிய பொக்கிஷங்கள்

This entry is part 8 of 26 in the series 17 மார்ச் 2013

ஒரு காலத்தில் ஒரு ஏழை விதவை தன் இரு மகன்களுடன் ஒரு கிராமத்தில் வாழ்ந்து வந்தாள். அவளது மூத்த மகன் மிகவும் புத்திசாலி. சம்பாதிக்கும் வழி தெரிந்தவன். அதனால் தாய் விரும்பும் மகனாக இருந்தான். சுற்றி உள்ளவர்களும் அவனுக்கு மதிப்பும் மரியாதையும் தந்தனர். ஆனால் அவளது இளைய மகன் மிகவும் எளியவன். நேர்நோக்கு கொண்டவன். எப்படிச் சம்பாதிப்பது என்று தெரியாத இளைஞன். அவனை எதற்கும் லாயக்கற்றவன் என்று தாய் அழைக்கும் அளவிற்கு எதுவும் தெரியாத அப்பாவியாக இருந்தான். […]

மூன்று வருட தூங்குமூஞ்சி நெதாரோ

This entry is part 27 of 28 in the series 10 மார்ச் 2013

ரொம்ப ரொம்ப காலத்திற்கு முன்பு, ஒரு வயதான பெரியவரும் அவரது மனைவியும் மகனும், ஒரு சிறிய அழகிய கிராமத்தில் வசித்து வந்தனர். அப்போது அவர்களது மகன், வயல்வெளிக்குச் சென்று வேலை செய்து பிழைப்பு நடத்தும் வயதை அடைந்திருந்தான். ஆனால் அவன் அதைச் செய்யாமல், காலை முதல் மாலை வரை தூங்கிக் கொண்டேயிருந்தான். அவன் அப்படியே மூன்று வருடங்கள் வீட்டிற்குள்ளேயே இருந்தான். அவனை அந்த கிராமவாசிகள் அனைவரும், தூங்குமூஞ்சி நெதாரோ என்றே அழைக்கும் அளவிற்கு அவன் பிரபலமாகியிருந்தான். அவனது […]

மந்திரச் சீப்பு (சீனக் கதை)

This entry is part 13 of 33 in the series 3 மார்ச் 2013

மந்திரச் சீப்பு (சீனக் கதை) வெகு காலத்திற்கு முன்பு, சேவல் தான் வயல்வெளியின் அரசனாக இருந்தது.  அது வயல்வெளியில் திரிந்து கொண்டு இருக்கும் கோழிகளையும் குஞ்சுகளையும் காப்பதையே வேலையாகக் கொண்டிருந்தது.  எதிரிகளைக் கண்காணிக்க, ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்குப் பறந்து செல்லும் திறனையும் பெற்றிருந்தது. ஒரு நாள் டிராகனும் புழு ஒன்றும் சேவல் செய்யும் வேலையைக் காண வயலுக்கு வந்தன.  ஒவ்வொரு வீட்டு உச்சியிலிருந்து உச்சிக்குத் தாவிச் சென்று நாய்களையும் நரிகளையும் பயமுறுத்துவதைக் கண்டன.  வயல் மிகவும் பாதுகாப்பாக […]

டப்பா

This entry is part 10 of 26 in the series 24 பிப்ரவரி 2013

சித்ரா சிவகுமார் ஹாங்காங் டப்பா. மதிய உணவு எடுத்துச் செல்லும் டப்பா. அதுவும் ஸ்டான்லி என்கிற பள்ளி செல்லும் சிறுவனின் டப்பா. இது தான் கதையின் கரு. ஒன்றரை மணி நேரம் பள்ளியில் நடக்கும் சம்பவங்களை, இந்த மதிய உணவு டப்பா காரணமாக நடக்கும் நிகழ்வுகளை எடுத்துச் சொல்லுவதே “ஸ்டான்லி கா டப்பா” – ஸ்டான்லியின் டப்பா என்ற ஹிந்தி திரைப்படம். கடந்த வாரம் வரை எப்போதும் விஜய் தொலைக்காட்சியையே நாங்கள் இங்கு ஹாங்காங்கில் பார்த்து வந்தோம். […]

விசுவும் முதிய சாதுவும்

This entry is part 1 of 30 in the series 17 பிப்ரவரி 2013

(ஜப்பானியக் கதை) (ஜப்பானில் வழிபாட்டின் முக்கியத்துவத்தைச் சொல்லும் அதே நேரத்தில், தங்கள் வேலைகளைச் செய்வதும் எவ்வளவு முக்கியம் என்பதை எடுத்துக் காட்டும் கதை) பற்பல வருடங்களுக்கு முன்பு, சுருகா என்ற தரிசு நில வெளியின் நடுவில் காட்டுவாசிகள் வாழ்ந்து வந்தனர்.  அதிலொருவன் விசு.  அவன் உருவம் பெரியது.  அவன் நிலத்தில் பயிர் விளைத்துத் தன் மனைவியுடனும் குழந்தைகளுடனும் வாழ்ந்து வந்தான். ஒரு நாள் அவன் குடிசைக்கு ஒரு முதிய சாது வந்தார்.  அவனது மனைவி பெரியவருக்கு உணவளித்து […]

நிஜமான கனவு

This entry is part 9 of 31 in the series 10 பெப்ருவரி 2013

 (போலந்து கதை) சித்ரா சிவகுமார் ஹாங்காங் ஒரு காலத்தில், போலந்து நாட்டின் கிரகாவ் நகரில், ரபி என்பவன் வாழ்ந்து வந்தான்.  அவன் தன்னுடைய மனைவியுடனும் குழந்தைகளுடனும் வறுமையில் வாடிக் கொண்டிருந்தான்.  எவ்வளவு தான் சிரமங்கள் வந்த போதும், தன்னுடைய குடும்பத்தை நல்முறையில் பார்த்துக் கொள்ள உண்மையாகவும் கடினமாகவும் உழைத்து வந்தான்.  நம்பிக்கையுடன் வாழ்ந்து வந்தான். ஒரு நாள் இரவு அவன் ஒரு கனவு கண்டான்.  அந்தக் கனவு கடவுள் தனக்குக் கொடுத்த வரம் எனறு அதிகமாக நம்பினான். […]