“ஓட்டல் முதலாளி அனுப்பி வெச்சாரு. இந்த லெட்டரை உன்னாண்ட குடுத்துப் பணத்தை வாங்கிட்டு வரச் சொன்னாரு….நோட்டிசு குடுக்காம திடீனு நின்னுட்டியாமே? அதான்… லெட்டர்ல எல்லாம் வெவரமா எளுதியிருக்காரு…இந்தா…” என்ற அவன் லுங்கியை உயர்த்தி அரைக்கால்சரராயிலிருந்து நான்காக மடிக்கப்பட்டிருந்த ஒரு கடிதத்தை எடுத்து அவனிடம் கொடுத்தான். அதைப் பிரித்து ராமரத்தினம் படித்தான். கடிதம் எந்த விளிப்பும் இன்றி மொட்டையாக எழுதப் பெற்றிருந்தது: `என்னடா நினைச்சிண்டு இருக்கே? இந்த லெட்டரைக் கொண்டு வர்ற ஆளு கையில உன் ஒரு […]
அன்புமிக்க திண்ணை ஆசிரியர் அவர்களுக்கு வணக்கம். 3069 ஈரடிப் பாடல்களில் நான் எழுதிய ஆங்கில மகாபாரதம் வெளிவந்துவிட்டது. Cyberwit.net Publishers, Allahabad (info@cyberwit.net) இதனை வெளியிட்டுள்ளது. இத் தகவலைத் திண்ணையில் வெளியிட வேண்டுகிறேன். மிக்க நன்றி. அன்புடன் ஜோதிர்லதா கிரிஜா
Dear editor, My Mahabharatha Epic Retold in 3069 rhyming couplets is going to be released shortly by Cybetwit.net publishers, Allahabad. I will be thankful if you could kindly publish this in Thinnai. Thanks a lot. Regards. jyothirllata@gmail.com
முதன்முறை அவனும் ராமரத்தினமும் கடற்கரையில் சந்தித்ததற்குப் பிறகு, அவன் மீண்டும் ஒரு முறை தற்செயலாய் ராமரத்தினத்தைச் சந்திக்க வாய்த்த போது, தன் அப்பா முறுக்கிக்கொண்டிருப்பது பற்றி அவனுக்குச் சிரித்துக்கொண்டே தெரிவித்தான். அவன் அது பற்றிக் கவலையே கொள்ள வேண்டியதில்லை என்றும், எப்படியாவது தன் விருப்பத்துக்கு அவரைச் செவிசாய்க்க வைக்க வேண்டியது தன் பொறுப்பு என்றும் அவன் ராமரத்தினத்துக்கு வாக்களித்தான். அவர் மனம் மாறுவதற்குத் தான் காத்துக்கொண்டிருப்பது தவிர வேறு வழியே இல்லை என்றும் அவன் தெரிவித்தான். […]
21 சேதுரத்தினம் தன் மனைவியின் இறுதிச் சடங்குகளையெல்லாம் முடித்துவிட்டே தன் பணிக்குத் திரும்புவான் என்பதை அவனது அலுவலகத்தோடு தொலைப்பேசியில் தொடர்புகொண்டு அறிந்த ராமரத்தினத்துக்கு ஒரு நடை கோயமுத்தூருக்குப் போய்விட்டு வரலலாமே என்று தோன்றியது. எனவே, சேதுரத்தினம் வந்ததன் பிறகு அவனைப் பார்த்தால் போதும் என்று முதலில் தான் செய்திருந்த முடிவை மாற்றிக்கொண்டான். அவனது கோயமுத்தூர் முகவரியையும் கேட்டுப் பெற்றுக்கொண்டான். எனவே, மறு நாளே அவன் ஓட்டல் முதலாளியைப் பார்த்துத் தன் விடுப்பு பற்றிப் பேசினான்: “சார்!” […]
தந்தியில் “என் மனைவி ஊர்மிளா இறந்துவிட்டாள். குழந்தை உயிருடன் இருக்கிறது. சேதுரத்தினம்’ எனும் வாசகம் இருந்தது. பத்தாம் வகுப்பில் தவறி யிருந்த மாலாவால் அதைப் படித்துப் புரிந்துகொள்ள முடிந்தது. ராமரத்தினத்துடன் அன்றிரவு தன் வீட்டுக்கு வந்து சென்ற அவனுடைய புதிய நண்பன்தான் அதை அனுப்பியிருந்தான் என்பது அவளுக்குப் புரிந்தது. `தந்தியைப் படித்ததும் மயக்கம் போட்டு விழுகிற அளவுக்கு அண்மையில்தான் அறிமுகமாகி யிருக்கும் ஒருவர் மீது ராஜாவுக்கு இவ்வளவு பாசமா!’ எனும் கேள்வி எல்லாரையுமே அயர்த்தியது. “தெரு […]
கோயமுத்தூரைச் சேதுரத்தினம் அடைந்து நாகவல்லியின் வீட்டுக் கதவைத் தட்டிய போது, பணிப்பெண் கதவைத் திறந்து அன்று சொன்னது போன்றே தன் எசமானியம்மாள் ஊர்மிளாவுடன் அதே மருத்துவமனைக்குச் சென்றிருப்பதைத் தெரிவித்தாள். அவன் ஒரு டாக்சி பிடித்து விழுந்தடித்துக்கொண்டு அங்கே சென்றான். அவனை உள்ளெ விட மறுத்தார்கள். நாகவல்லியே வெளி வராந்தாவில் உட்காரவைக்கப்பட்டிருந்தாள். கலங்கி யிருந்த அவள் விழிகளைப் பார்த்து அவனுக்குப் பதற்றமாக இருந்தது. ஏதோ சிக்கல் என்று புரிந்தது. அவனது உடம்பு தலையிலிருந்து கால் வரை அதிர்ந்தது. […]
மறுநாள் அதிகாலையில் வீடு திரும்பிய ராமரத்தினம், “இன்னைக்கு ரெண்டு மணி நேரம் லேட்டாஆஃபீசுக்குக் கிளம்புவேன்மா….” என்று பருவதத்திடம் தெரிவித்தான். அவனிடம்காப்பியைக் கொடுத்துவிட்டு, “ரமணி டூர்லேருந்து வந்துட்டானா?” என்று பருவதம்விசாரித்தாள். “இன்னும்இல்லேம்மா. இன்னைக்கு விசாரிக்கிறேன் – எப்ப வருவான்னு. நேத்தே வந்திருக்கணும்.” “அவன்கிட்டமாலாவைப் பத்திப் பேசப் போறேதானே?” “ஆமா, ஆமா, ஆமா. அதான் சொன்னேனே அன்னைக்கே?” “ஏண்டாப்பாஉனக்கு இவ்வளவு கோவம் வருது? உனக்கு வேலை ஜாஸ்தி… அதான்…” அவன்ஒன்றும் சொல்லாமல் காப்பியைக் குடித்தான். …. அன்று தன் […]
“ஒருவேகத்துல விபரீதமா ஏதாவது செஞ்சு வம்பிலே மாட்டிக்காதே, ராமு! என்ன செய்யப்போறேஅவன் வீட்டுக்குப் போய்?” என்று சேதுரத்தினம் கவலையுடன் வினவினான். “ஆபத்துலசிக்கிக்கிற மாதிரி அப்படி எல்லாம் எதுவும் செய்ய மாட்டேன், சேது சார். சும்மா நாலுதட்டுத் தட்டினாப் போதும். ஒண்டியாளா நான் மட்டும் அவனைச் சமாளிக்க முடியாதில்லையா? அதுக்குத்தான் உங்களையும் என்னோட துணைக்கு வரச் சொல்றேன்…” என்று ராமரத்தினம்பதில் சொன்னான். “நாலுதட்டுத் தட்டுறதுன்னா? அவனோட கையைக் காலை முறிக்கிற மாதிரியா?” “பயப்படாதீங்க, சேது சார். அப்படி […]
அன்புமிக்க திண்ணை ஆசிரியர் அவர்களுக்கு. வணக்கம். நான் எழுதிய The Story of Jesus Christ Retold in Rhymes, Cyberwit.net Publishers, HIG, 45, Kaushambi Kunj, Kalingapuram, Allahabad 211011 (U.P) இன் வெளியீடாக வந்துவிட்டது. தொடர்புக்கு info@cyberwit.net மிக்க நன்றி Attachments area Preview attachment GetAttachment (2).jpg