author

துருக்கி பயணம்-3

This entry is part 31 of 33 in the series 27 மே 2012

  அண்ட்டால்யா – கொன்யா – கப்படோஸ் – நாகரத்தினம் கிருஷ்ணா மார்ச்-28 காலை 7.30க்கு பேருந்தில் இருக்கவேண்டுமென சொல்லப்பட்டிருந்தது. எங்கே உறங்கினாலும் இரவு எத்தனை மணிக்கு உறங்கப்போனாலும் அதிகாலை நான்கு மணிக்கு முன்பாக விழித்துக்கொள்வதென்பது பள்ளிவயதிலிருந்தே பழகிப்போனது. விழித்துக்கொண்டபோதும் அறையில் இணையத் தொடர்பு ஒழுங்காக கிடைக்காதென்பதை மூளை தெரிவித்தால் சோர்வுடன் படுத்திருந்தேன். ஐந்து மணிக்கு குளித்து முடித்ததும், லி·ப்ட் பிடித்து கீழே இறங்கினேன் லாபியில் ஒருவருமில்லை. வரவேற்பு முகப்பு அரை உறக்கத்தில் கிடந்தது. தனியே லாபியில் […]

மலைபேச்சு -செஞ்சி சொல்லும்கதை – 27

This entry is part 25 of 33 in the series 27 மே 2012

30. நள்ளிரவைக் கடந்து மூன்று சாமங்கள் கழிந்திருக்கலாம். செண்பகம் மொட்டைமாடியில் உறங்காமல் குட்டிபோட்ட பூனைபோல உலாத்தினாள். குளிர்ந்தகாற்றுடன் கரிய இருளும் உடலைத் தொட்டுக் கடந்து சென்றாலும் மனதைபோலவே உடலும் அனலாய்க் கொதித்தது. கவிழ்ந்திருந்த வானத்தில் நட்சத்திரங்கள்கூட மெருகு குலைந்த கற்கள்போல பொலிவிழந்திருந்தன. அண்மையில்தான் எங்கோ மல்லிகைபூத்திருக்கவேண்டும். மல்லிகை பூக்களின் மணத்தோடு, தேனுண்டு அம்மலர்களில் உறங்கிபோன தேனீக்களின் மணமும் கலந்து வீசியது. கண்களை மூடி மல்லிகை மணம் முழுதும் தனக்கே தனக்கென்று நினைத்தவள் போல சுவாசக்குழலில் அவற்றைத் திணித்தாள். […]

துருக்கி பயணம்-2 அண்ட்டால்யா – கொன்யா – கப்படோஸ்

This entry is part 29 of 29 in the series 20 மே 2012

– நாகரத்தினம் கிருஷ்ணா மார்ச்-27   முன்னாள் இரவு விமானநிலையத்திலிருந்து ஓட்டலுக்குச்செல்லும்போதே எங்கள் குழுவினருக்கென பணியாற்றிய வழிகாட்டி காலை 9.30க்குப் பேருந்தில் இருக்கவேண்டுமெனக் கேட்டுக்கொண்டார். ஐரோப்பியர்கள் நேரத்தை பெரும்பாலும் ஒழுங்காக கடைபிடிப்பவர்கள். பிரான்சில் நம்மவர்களோடும்  பயணம் செய்திருக்கிறேன், ஐரோப்பியர்களோடும் வாய்ப்புகள் அமைந்திருக்கின்றன. நாம் அலட்சியப்படுத்துகிறவற்றில் அவர்கள் அக்கறை கொண்டவர்களாக இருப்பார்கள். இந்த அக்கறையே அவர்களின் முன்னேற்றத்திற்கும் காரணமாகவும் இருக்கின்றன. முதல்நாள் பாரீஸ் விமானதளத்தில் எங்கள் வரிசையில் பின்னால் நின்றிருந்த மூவரும் ஒரு டாக்டர் தம்பதியும் அவர் சகோதரியும் (இவருமொரு […]

மலைப்பேச்சு -செஞ்சி சொல்லும் கதை-26

This entry is part 19 of 29 in the series 20 மே 2012

29. – காலமேயிருந்து ஒருவாய் நீர் கூட அருந்தாமலிருந்தால் எப்படி. அரன்மணைக்குப்போகும் உத்தேசமில்லையா? – இல்லை. நந்தகோபால் பிள்ளை இல்லம். பிள்ளை கூடத்திலிருந்த ஊஞ்சலில் அமர்ந்திருந்தார். ஊஞ்சல் அசைவுக்கு இடம்விட்டு வாசலையொட்டி தூணில் சாய்ந்திருந்தாள் கோவிந்தம்மாள்- அவர் பாரியாள். அதிகாலை வெயில் வீட்டில் பாதி வாசலை விழுங்கியிருந்தது. அண்டாவிலிருந்த தண்ணீரில் நீலவானத்தின் துண்டொன்று கிடந்தது. வாசலில் ஈரம் உலராத தரையில் நாற்றுபாவியதுபோல மரகதப்பச்சையில் பாசி. கூரையிலிருந்து ஊசலாடிய நூலாம்படையில் சிலந்தியொன்று ஊசலாடியது. அரசாங்கத்தின் பிரதானியென்றாலும் அவர்கள் இடையர்குலமென்பதால் […]

துருக்கி பயணம்-1

This entry is part 8 of 41 in the series 13 மே 2012

அண்ட்டால்யா – கொன்யா -துருக்கி மார்ச்-26 [துருக்கியைப்பற்றிய சிறுகுறிப்பு: 1923ம் ஆண்டிலிருந்து முஸ்தபா கேமால் ஒட்டொமான் பிடியிலிருந்து மீட்டு சுதந்திர துருக்கியை உருவாக்கினார். 1982ம் ஆண்டு அரசியலமைப்பு சட்டம் திருத்தி எழுதப்பட்டது. பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 550. ஐந்து ஆண்டுகளுக்கொருமுறை மக்களால் நேரடியான வாக்கெடுப்பில் உறுப்பினர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். இஸ்லாம் பெரும்பானமை மக்களின் மதம். கிறித்துவம், யூதம் போன்றவற்றுள் நம்பிக்கைகொண்ட மக்களும் நாட்டிலுண்டு. பல மொழிகள் பேசப்படினும் பெரும்பான்மையினரின் மொழி துருக்கி. நவீன துருக்கியின் தந்தையெனக் கருதப்படும் […]

மலை பேச்சு – செஞ்சி சொல்லும் கதை- 24

This entry is part 30 of 40 in the series 6 மே 2012

26 – எனது புத்திரனை கணத்தில் பார்க்கவேணும். – நேரம் காலம் கூடிவரவேணாமா? அந்தரப்பட்டாலெப்படி? அரசாங்க மனுஷர்களிடத்தில் அனுசரணையாக நடந்துகொள்ள தெரியவேணும். உனக்கிங்கே என்ன குறை வைத்திருக்கிறோம்? நீ கேட்டதுபோல எல்லாம் நடக்கிறது. கமலக்கண்ணியென்று நம்பி உனது விண்ணப்பங்களை தங்குதடையின்றி பூர்த்திசெய்யவேணுமாய் மஹாராயர் ஆக்கினைபண்ணியிருக்கிறார். அதைக் கெடுத்துக்கொள்ளாதே. நாளையே உன்னை சிரசாக்கினைசெய்யவோ மரணக்கிணற்றில் தள்ளிப்போடவோ¡ எமக்கு எத்தனை நாழிகை ஆகும்?. கண்விழித்தபோது பகலுக்கு முதுமை தட்டியிருந்தது வெகுதூரத்தில் யாரோ இருவர் உரையாடுவதைபோலக் கேட்ட குரல்கள் இப்போது அண்மையில் […]

இந்திய நவீன இலக்கியம் பிரெஞ்சு அறிமுகம் : வலைத்தளம்

அன்புடையீர், ஏற்கனவே தங்களுக்கு எழுதியதுபோன்று இந்திய நவீன இலக்கியத்தை குறிப்பாக தமிழ்படைப்புகளை பிரெஞ்சு மட்டுமே அறிந்த நண்பர்களுக்கு அறிமுகம் செய்யவேண்டுமென்ற வகையிலும், எதிர்காலத்தில் இயலுமாயின் சிறந்த சில படைப்புகளை பிரெஞ்சுமொழியில் கொண்டுவரவேண்டுமென்ற ஆதங்கத்துடன் ஒரு பிரெஞ்சு வலைத்தளத்தை: http://franceindechassecroise.wordpress.com நண்பர் பாவண்ணன் சிறுகதையுடன் தொடங்கியுள்ளோம். மொழிபெயர்ப்பு செய்தவர் நண்பரும் பேராசிரியருமான வேங்கட சுப்புராய நாயக்கர். நண்பர் எஸ்.ராமகிருஷ்ணன் புதுச்சேரியில் தெரிவித்த யோசனையின் படி மாதம் ஒரு சிறுகதையை எழுத்தாளர்கள் சம்மதத்துடன் வெளியிடுவதென்று திட்டம். இறுதியில் அத்தொகுப்பை பிரெஞ்சு […]

மலை பேச்சு – செஞ்சி சொல்லும் கதை -23

This entry is part 19 of 28 in the series 29 ஏப்ரல் 2012

“மனிதர்கள் என்றால் கவலைகள் இல்லாமலா? கேள்விகள் இல்லாமலா? ஏராளமாக இருந்தன. கூண்டுவண்டியிலும், கட்டைவண்டியிலும் வைக்கோலை தெளித்து ஜமுக்காளத்தை விரித்து, பெண்கள் கால்களை துறட்டுகோல்போல மடித்துக்கொண்டு உட்கார்ந்திருக்க ஆண்கள் வண்டிக்குப்பின்புறம் அமர்ந்து வார்த்தைகளைக் கோர்த்து கேள்விச் சரடை தயார்செய்துகொண்டுவருவார்கள்.” 25.     ‘கிருஷ்ணபுரத்தை காக்கவே மானுடவடிவில் வந்திருக்கிறேன்’ என்ற கமலக்கண்ணியின் வார்த்தைகளைகேட்டு ஐந்து ஆண்டுகளுக்கு முன் மெய்யுருக கைகூப்பி தண்டமிட்டவர்களில் கிருஷ்ணப்ப நாயக்கரும் ஒருவர்.  கமலக்கண்ணியின் பேச்சு அவரைக் கட்டிபோட்டது. தம்மை தெய்வமென்று அவள் அறிவித்துக்கொள்ளாதிருக்கும் பட்சத்தில் கல்யாணமகாலில் அவளுக்கென்று […]

மலைபேச்சு – செஞ்சி சொல்லும் கதை -22

This entry is part 29 of 44 in the series 22 ஏப்ரல் 2012

“வருகின்றவனையெல்லாம் தம்பி அண்ணன் என்று சொல்லிக்கொண்டிருந்தால் உருபட்ட மாதிரிதான். எல்லாவற்றையும் விற்றாகிவிட்டது. இனி விற்பதற்கு என்ன இருக்கிறது. போதாக்குறைக்கு திண்ணையில் ஒரு பைத்தியத்தை சேர்த்துவைத்திருக்கிறாய். அதை என்றைக்கு துரத்துகிறாயோ அன்றைக்குத்தான் உனக்கு விமோசனம்” 24. கிணற்றுநீர் பாசிபோல அரையிருட்டு மிதக்கிறது. துரிஞ்சலொன்று ஒவ்வொரு அறையாய் நுழைவதும், யாரோ துரத்தி அடித்ததுபோல பின்னர் வெளியேறுவதுமாய் இருக்கிறது. தெருக்கோடியில் மேளசத்தமும் தொடர்ந்து நாதஸ்வர சத்தமும் கேட்கிறது. மேளச்சத்தத்தின் அதிர்வினைத் தாங்கிகொள்ள இயலாமல் வீட்டின் சுவரிலிருந்து பெயர்ந்து விழுந்த காரை வீட்டின் […]

மலைபேச்சு- செஞ்சி சொல்லும் கதை-21

This entry is part 21 of 44 in the series 15 ஏப்ரல் 2012

பாதரே பிமெண்ட்டா! எனது பேச்சின் முக்கியமான பகுதிக்கு வந்திருக்கிறேன். நான் காத்திருந்ததற்கு பலன் கிடைத்திருக்கிறது. கன்னிப்பெண்ணின் பிள்ளையை கடவுளாக ஏற்றுக்கொண்ட உங்களையன்றி வேறுயார் என்னையும் என்பிள்ளையையும் புரிந்துகொள்வார்கள் சொல்லுங்கள். நீங்கள் மட்டுமே சிசு வயிற்றுக்குள் வந்தவிதத்தைப்பற்றி கேள்விகேட்கமாட்டீர். அது தெய்வ குற்றமென்று நீங்கள் அறியமாட்டீரா என்ன? 23. எனது குரலை இனம்கண்டு புருஷ குரலா ஸ்த்ரீயின் குரலா என்று தீர்மானித்திருப்பீர்கள். பெண்சொல்லும் கதைக்கு பெண்ணைபோலவே வனப்பும் வசீகரமுமுண்டு. மாமாவைக் காட்டிலும் அத்தையோ; தாத்தாவைக்காட்டிலும் பாட்டியோ கதை சொல்லும்போதுதான் […]