இரண்டு குறும்படங்கள்

This entry is part 28 of 33 in the series 27 மே 2012

யூ டியூப்பில் அருமையான குறும்படங்கள் காணக்கிடைக்கின்றன. நல்ல நடிப்பு, துல்லிய ஒளிப்பதிவு என அமர்க்களப்படுத்துகின்றன அவைகள். சில காதலில் சொதப்பும் ரகம். சில பிரச்சார நெடி. இனி நான் பார்த்த இரண்டு குறும்படங்கள் பற்றிய எனது பார்வை. ஹரியின் “ 1680 “ தினமும் தண்ணியடித்துக்கொண்டு வெட்டியாகச் சுற்றிக் கொண்டிருக்கும் முன்று இளைஞர்கள். அதில் ஒருவனுக்கு காது கேட்காது, ஆனால் சினிமா பைத்தியம். இன்னொருவன் மேலைநாட்டுச் சங்கீதத்துக்கு குத்து நடனம் ஆடுபவன். அவனுக்கு அது மட்டும்தான் தெரியும். […]

பிரேன் நிசாரின் “ இஷ்டம் “

This entry is part 27 of 33 in the series 27 மே 2012

முதலில் ஒன்று சொல்லியாக வேண்டும். விமலுக்கு இந்தப் படத்தில் தொள தொள பேண்ட் இல்லை. அழுக்குச் சட்டை இல்லை. சார்லி சாப்ளின் நடை இல்லை. ஆள் மாநிறத்திலிருந்து, சிகப்புக்கு மாறி இருக்கிறார். வரவேற்கத்தக்க மாற்றம். கதாநாயகி நிஷா அகர்வால், காஜல் அகர்வாலின் தங்கை. வனப்பில் அக்கா என்றே சொல்லி விடலாம். அதாவது, அவரை விட இன்னமும் வாளிப்பாக இருக்கிறார். கண்கள் பெருசாக,அக்காவை பின்னுக்கு தள்ளி முன்னேற கட் ஆப் மார்க்கை விட கூடுதல் தகுதி இவரிடம். சந்தானம் […]

ஆவணப்படம்: முதுமையில் தனிமை

This entry is part 24 of 33 in the series 27 மே 2012

சீனாவில் தற்போதைய மக்கள் தொகையில் 32 மில்லியன் பையன்கள் பெண்களைவிட அதிகமாக ( இருபது வயதிற்குட்பட்டவர்களில்) அதிர்ச்சியைத் தருகிறது. கருச்சிதைவும், குழந்தைகளின் வளர்ப்புச் சிரமங்களும் பெண் குழந்தைகளின் எண்ணிக்கையை வெகுவாகக் குறைத்திருக்கிறது. திருமண வயதையொட்டிய ஆண்களின் பெண் தேடலில் இது சிக்கல்களை ஏற்படுத்தி உள்ளது. பெண் குழந்தைகளை வீட்டில் பள்ளி வயதிற்கு முன் பூட்டி வைத்து பாதுகாப்பது, பள்ளிக்குப் போக விடாமல் வீட்டிலேயே இருக்கச் செய்வது, என்று பல அசாதாரண நடவடிக்கைகளும் சில சமயங்களில் காணப்படுகிறது. பள்ளி […]

கே.எஸ்.தங்கசாமியின் “ ராட்டினம் “

This entry is part 10 of 29 in the series 20 மே 2012

இப்போதெல்லாம் டிஜிட்டலில் எடுப்பது சர்வ சாதாரணமாகி விட்டது. வழக்கு எண்ணை ரெட் 1ல் எடுத்ததாக வேதம் புதிது கண்ணன் சொன்னார். பிலிம்மில் எடுப்பதில் 70 விழுக்காடு ரிசல்ட்தான் வரும் என்று அறிந்தவர்கள் சொல்கிறார்கள். 70க்கு 100 என்றால் கசக்குமா என்ன? கருப்பட்டியைக் கேட்பரீஸ் ரேப்பரில் கொடுத்த கதைதான். அப்படிப்பட்ட ஒரு படம்தான் ராட்டினம். தூத்துக்குடி களம். கயிறு விற்பனைக்கடையில் நாயகன். நாயகி துறைமுக அதிகாரியின் மகள். அவளது மாமா பப்ளிக் பிராசிகுயூட்டர். நாயகன் அண்ணன் உள்ளூர் கட்சித் […]

சுந்தர் சி யின் “ கலகலப்பு “

This entry is part 7 of 29 in the series 20 மே 2012

சிறகு இரவிச்சந்திரன். ‘உள்ளத்தை அள்ளித்தா’வுக்குப் பிறகு இன்னொரு வெற்றியைத் தொட்டிருக்கிறார் சு.சி. வெற்றிக்குக் காரணம்? இவரிடம், ஏதோ உலகமகா சினிமா காட்டப்போகிறேன், என்கிற பாசாங்கு எல்லாம் இல்லை. பெரிய நட்சத்திரப் பட்டாளம் இல்லை. எல்லாம் இரண்டாம் வரிசை, மூன்றாம் வரிசை நடிகர்கள், நடிகைகள். வசனம் எழுதிய பத்ரிக்கு நகைச்சுவை நன்றாக வருகிறது. சுந்தருக்கு ஸ்லாப்ஸ்டிக் காமெடி பலம் உண்டு. முகத்தை, அஷ்டகோணல் ஆக்கிக் கொள்ளாமல், இயல்பாக நடிக்க, நடித்தவர்களுக்குத் தெரிகிறது. பிறகென்ன? சூப்பர்டூப்பர் ஹிட் தான். அதிலும் […]

திரைப்படம்: ஹாங்காங்கின் இரவுகள்

This entry is part 6 of 29 in the series 20 மே 2012

ஆண்கள் மீதான பெண்கள் வன்முறை நகைச்சுவைக்கான் விசயமாகவும், பட்டிமன்ற கிசுகிசுவிற்காகவும் பயன்படுகிற விசயமாகிவிட்டது. அவ்வகையான் விடயங்களும் , வழக்குகளும் சமீபத்தில் அதிகரித்து வருகின்றன. குடும்ப வன்முறையில் 90 சதம் இந்தியப் பெண்கள் பாதிக்கப்படுகிறார்கள். பாக்கிஸ்தான் போன்ற நாடுகளிலும், முஸ்லீம் நாடுகளிலும் இந்தியாவிற்கு ஒத்த புள்ளி விவரங்கள் உள்ளன. முஸ்லீம்நாடுகளில் ஆண்களின் பாலியல் இச்சைக்கு உடன்படாத குடும்ப்ப் பெண்கள் மீதான குடும்ப வன்முறை உச்சத்தில் இருக்கிறது. பாலியல் வேட்கையை நியாயப்படுத்துகின்றன அவை. இன்னும் சந்தேகத்தன்மையும், ஒத்துவராத குணமும் குடும்பத்தில் […]

வஞ்சிக்கப்பட்ட வழக்கு வஞ்சிக்கப்பட்ட வாழ்க்கை – பாலாஜி சக்திவேல் இயக்கிய ’வழக்கு எண் 18/9’

This entry is part 15 of 41 in the series 13 மே 2012

(இயக்குனர் பாலாஜி சக்திவேல் இயக்கிய ’வழக்கு எண் 18/9’ திரைப்படத்தை முன் வைத்து) சில ஆண்டுகளுக்கு முன்னர் ‘காதல்’ என்னும் வெற்றிப் படமொன்றைத் தந்த இயக்குனர் பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் வெளிவந்திருக்கும் படம் ’வழக்கு எண் 18/9’. இன்றைய சூழலில், ஒரு குற்றப் பின்னணி எவ்விதம் வழக்காக மாறி, சட்டத்தின் பாதையில் பயணித்து, தீர்ப்பாய் மாறுகிறது என்பது கதை. அதனினும் முக்கியமானது, அதனால் நிகழும் எதிர்வினை. எந்த எதிர்வினையின் தீவிரமும், அதற்கான காரணத்தின் தீவிரத்தைப் பொருத்தே அமையும்.எதிவினைக்கான […]

பாலாஜி சக்திவேலின் “ வழக்கு எண் 18 / 9

This entry is part 5 of 41 in the series 13 மே 2012

“ என்னண்ணே இந்தப் பொம்பள இவ்ளோ அசிங்க அசிங்கமா பேசுது? “ “ ஆம்பள இல்லாத குடும்பம். ஒத்தப் பொட்டப்புள்ளைய வச்சிக்கிட்டிருக்குது.. பேசலேன்னா ஒன்னிய மாதிரி பசங்க வுட்டு வப்பீங்களா? “ ஒரு ஏழைத்தாயின் பாதுகாப்பு வளையத்தைப் பற்றி, இவ்வளவு தெளிவாக, இதற்கு முன்னால், வேறு ஏதாவது படங்களில் வசனம் வந்திருக்கிறதா என்று தெரியவில்லை. கேட்டவுடன் பொட்டில் அறைவது போலிருந்தது. என்னைப் பொருத்தவரை, பாராட்டுகள் நடிகர்களுக்கு முன்னால், திரைக்கதைக்கும், இயக்கத்துக்கும் போய்ச் சேரவேண்டும். அடுத்தது அறிமுக இசையமைப்பாளர் […]

சமஸ்கிருதம் கற்றுகொள்வோம் – 57

This entry is part 37 of 40 in the series 6 மே 2012

Samaskritam kaRRukkoLvOm 57 சமஸ்கிருதம் 57 சென்ற வாரம் अपेक्षया (apekṣayā) என்ற சொல்லை இரண்டு பொருள்களுக்கிடையில் ஒரு குறிப்பிட்ட பண்பைக் கொண்டு ஒப்பிடும்போது உபயோகிக்கவேண்டும் என்று அறிந்து கொண்டோம். கீழேயுள்ள கதையை உரத்துப் படிக்கவும். कः बलवान्? पुरातनकाले गङ्गातीरे एकः आश्रमः आसीत्। तत्र याज्ञवल्क्यः नाम महर्षिः वसति स्म। सः श्येनमुखात् पतिताम् एकां मूषिकां दृष्टवान् | करुणया सः तां मूषिकाम् आश्रमं प्रति नीतवान् | तत्र […]

அகஸ்டோவின் “ அச்சு அசல் “

This entry is part 12 of 40 in the series 6 மே 2012

கார்த்திக் பைன் ஆர்ட்சின் கோடை நாடகவிழாவில் ஞாயிற்றுக்கிழமை (22.4.2011) அன்று அரங்கேறிய நாடகம் “ அச்சு அசல்.” முதலில் ஒரு விசயத்திற்கு அகஸ்டோவைப் பாராட்டியாக வேண்டும். தொழில் ரீதியாக மூக்குக் கண்ணாடிக் கடை வைத்திருப்பவர் அவர். ஆனால் இலக்கிய ரீதியாகவும், படைப்பு ரீதியாகவும் தன்னை வித்தியாசப்படுத்திக் கொள்ள, அவர் எடுத்துக் கொள்ளும் அக்கறை, அலாதியானது. நாடகம் கொஞ்சம் சமூக நீதிக் கதை கொண்டதுதான். அதைத் தன் பாணியில் ஒரு திரில்லராகப் படைக்கும் வழியைத் தேர்ந்தெடுத்திருக்கிறார் அகஸ்டோ. வெற்றி […]