அன்னம் நடராஜனும் ,இலக்கியா நடராஜனும் அவரின் நாகராஜன்கள் கதைகளும்

  சுப்ரபாரதிமணியன்   தமிழ் இலக்கியத்திற்கு நவீன முகம் தந்த பதிப்பகங்களில் ஒன்றான அன்னம், சிவகங்கையின் மேலாளராகவும் அமரர் மீராவின்  உதவியாளராகவும் விளங்கிய நடராஜன் பல எழுத்தாளர்களின் படைப்பூக்கத்திற்கு ஏணியாக இருந்து செயல்பட்டவர், அவர் பின்னால் இலக்கியா நடராஜனாக உருமாறி எழுத்தாளராக விளங்கி வருவதைத் தாமதமாகத்தான் அறிந்து கொண்டேன். இடையிலான பத்திரிக்கையாளர் பணியையும் அறியவைல்லை.எழுத்து இலக்கிய அமைப்பின் செயல்பாட்டின் மூலம் இன்னும் நன்கு அறிந்தவரானார். அவரின் இந்தக்கதைகளை அவ்வப்போது படித்த போது இலக்கிய இதழ்களில் படித்த போது மகிழ்ச்சியடைந்தேன்.  இந்தக்கதைகளின் ஆரம்ப அனுபவங்களில் அவர்  மாற்றம் சார்ந்த  மனிதர்களைப் பற்றி அதிகம் சிந்தித்திருப்பது தெரிந்தது, மனநோயாளி மீதான கருத்தும் அபிப்ராயமும் மாறியிருப்பதையும்,  மீனவர் வழியே  சோர்விலிருந்து மீண்டு மாற்றம் பெறுவதும், சந்தோச கீதங்களாய் இருக்கும் விலைமாதர் பெண்கள் திருந்துவது, வெளிநாட்டில் வசிப்பவன் தாய்மண் சிறந்தது என்று வெளி நாடு போகாமல் மாற்றம் பெறுவது என்று ஆரம்பத்தில் உள்ளக்கதைகள் பட்டன.  அவை மாற்றம் சார்ந்த  மனிதர்களைப் பற்றி அமிந்திருக்கின்றன. பைத்யம் என்று திரும்பத் திரும்பசொல்வதற்கு பதில் மன நோயாளி என்றுக்குறிப்பிட்டிருக்கலாம். மன நோயாளி இயல்பை மீறி அறத்தைக்காப்பாற்ற அவர்கள் வாள் எடுக்கிறார்கள் . நாட்டார் தெய்வங்களாகிறார்கள். மன நோயாளி போல் தோற்றம் அளித்தாலும் பிச்சை எடுத்தாவது முஸ்லீம் பண்டிகை நோன்பு திறப்புக்கு உதவும் மனிதர்களும் இருக்கிறார்கள் எல்லா நேரங்களிலும் எல்லோரும் மனிதர்களே என்று நிரூபிக்கிற     பல கதைகள் இதிலுள்ளன. மனிதம் சார்ந்த யோசிப்பில் இவ்வகை மனிதர்கள் இருக்கிறார்கள் நடராஜனின் பார்வையில்     கடல் பற்றிய அபாரமான வர்ணனையோடு கடல் மனிதர்கள் தரும் பாடமும் இப்படித்தான். விலைமாதர் மனதில் எழும் சிந்தனை மாற்றமும் ஒரு பாடம்தான்.தாய் மண்ணை மதிக்கிறவனின் கதையில் வரும் நாதஸ்வர  கோவில்மணி ஓசைக்குப் பதிலாக மின்கருவியின் வருகை நான் திரைக்கதை எழுதிய “ ஓம் ஒபாமா” படத்தை ஞாபகமூட்டியது. அந்த திரைப்பட பெண்இயக்குனர் செய்த துரோகம் போலத்தான் அந்தக்…
கபுக்கி என்றோர் நாடகக்கலை

கபுக்கி என்றோர் நாடகக்கலை

    அழகர்சாமி சக்திவேல் முத்தமிழை, நாம், இயற்றமிழ், இசைத்தமிழ், நாடகத்தமிழ் என்று மூன்று வகைகளாகப் பிரிக்கிறோம். அந்த நாடகத்தமிழை, வசன நடை குறைந்த, பாடல்கள் மற்றும் ஆடல்கள் நிறைந்த கூத்து என்றும், வசன நடை நிறைந்த நாடகம் என்றும், நாம்…
    வைதீஸ்வரனின் ஆவணப்படம்….

    வைதீஸ்வரனின் ஆவணப்படம்….

         அழகியசிங்கர்               சமீபத்தில் கவிஞர் வைதீஸ்வரனுடைய ஆவணப்படம் ஒன்று அவர் பிறந்த நாள் போது காட்டப்பட்டது.  குவிகம் என்ற இலக்கிய அமைப்பு தயாரித்த ஆவணப்படம். நிழல் பத்திரிகை ஆசிரியரான நிழல் திருநாவுக்கரசு இயக்கிய படம். அறை முழுவதும் கூட்டம் நிரம்பி வழிந்தது. சிறப்பாக எடுத்திருந்தார் நிழல் திருநாவுக்கரசு.ஒரு…
ஆசு என்னும் ஆரவாரமற்ற கவி

ஆசு என்னும் ஆரவாரமற்ற கவி

    லதா ராமகிருஷ்ணன் //*செப்டெம்பர் 10 அன்று சென்னையில் நடந்தேறிய கவிஞர் ஆசு சுப்பிரமணி யனின் முழுக்கவிதைத் தொகுப்பு அறிமுக விழாவில் ஆற்றிய உரையிலிருந்து// https://www.youtube.com/watch?v=hvBn5d6rJTs   சக கவிஞரான திருமிகு ஆசுவுக்கு என் மனமார்ந்த நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்கிறேன்..…

கவிதைப் புத்தகங்களை இலவசமாகக் கொடுத்து விடுங்கள்…

  அழகியசிங்கர்     தமிழில் கவிதைப் புத்தகங்களுக்கு உள்ள நிலையை நான் சொல்லி  யாருக்கும் தெரிய வேண்டு மென்றில்லை.   பலர் அவர்கள் செலவு செய்து கவிதைப் புத்தகங்களைக் கொண்டு வருகிறார்கள்.  அதற்கு எதுமாதிரியான வரவேற்பு இருக்கிறது.   க.நா.சுவின் நூற்றாண்டின்போது அவருடைய சில கவிதைகளை அச்சடித்துப் புத்தகமாகக்…

உணர்வுடன் இயைந்ததா பயணம்? – அத்தியாயம்.3  

  சியாமளா கோபு  அத்தியாயம்.3   வந்தியத்தேவனைப் போல மகாபலிபுரத்தில் இருந்து தான் நானும், என் கணவர் மற்றும் தோழியுடன் அதிகாலையில் என் பயணத்தை தொடங்கினேன். என்ன, என்னிடம் ஆதித்த கரிகாலன்  தன் தந்தை சுந்தர சோழருக்கு எழுதிய ஓலை இல்லை அவ்வளவு…

மதுரை சித்திரைத்திருவிழாவில் நாடோடியினப் பழங்குடிகளின்  பங்கு

  மதுரை சித்திரைத்திருவிழாவில் நாடோடியினப் பழங்குடிகளின்  பங்கு (சித்திரைத் திருவிழாவில் கொண்டாட்டத்தின் உருவங்கள்) பா.மாரிமுத்து முனைவர் பட்ட ஆய்வாளர், நாட்டுப்புறவியல் மற்றும் பண்பாட்டு ஆய்வுகள் துறை, நிகழ்த்துக் கலைப் புலம், மதுரை காமராசர் பல்கலைக்கழகம், மதுரை-625021. முன்னுரை : திருவிழா என்றாலே மக்களின் கூட்டமும்…
கனடா தமிழர் தகவல் இதழின் 30 ஆவது ஆண்டுமலர்

கனடா தமிழர் தகவல் இதழின் 30 ஆவது ஆண்டுமலர்

  படித்தோம் சொல்கின்றோம் கனடா தமிழர் தகவல் இதழின் 30 ஆவது ஆண்டுமலர் புதிய தலைமுறையையும் உள்வாங்கியிருக்கும் இளமகிழ் சுவடு                                                     முருகபூபதி கனடாவின் மூத்த தமிழ் இதழ் என்ற பெயரையும் பெருமையையும் பெற்றிருக்கும்,  தமிழர் தகவல் 30 ஆவது ஆண்டுமலரை…

கு அழகிரிசாமியின் நூற்றாண்டின் போது..

  அழகியசிங்கர்               23.09.2022 அன்று கு.அழகிரிசாமியின் நூற்றாண்டு ஆரம்பமாகிறது.  அதை முன்னிட்டு அவர் கதைகளைப் படிக்கலாமென்று எடுத்து வைத்துக்கொண்டேன்.              முதலில் தம்பி ராமையா என்ற கதையைப் படித்தேன். இந்தக் கதையைப் பற்றிச் சொல்வதற்கு முன், கு அழகிரிசாமி இரண்டு விஷயங்களைக் குறித்து…
இலக்கியத் திறனாய்வாளர் கே. எஸ். சிவகுமாரன்    ( 1936 – 2022 ) நினைவுகள்

இலக்கியத் திறனாய்வாளர் கே. எஸ். சிவகுமாரன்    ( 1936 – 2022 ) நினைவுகள்

                                                    முருகபூபதி எதிர்வரும் ஒக்டோபர் மாதம் தனது 86 ஆவது பிறந்த தினத்தை அமைதியாக கொண்டவிருந்த ஈழத்தின் முன்னணி எழுத்தாளரும், இலக்கியத்திறனாய்வாளருமான கே. எஸ். சிவகுமாரன்,  மகாகவி பாரதி மறைந்த  அதே செப்டெம்பர் மாதமே 15 ஆம் திகதி மறைந்துவிட்டார். கடந்த…