நிலா

நிலா

ஆர் வத்ஸலாநிலவைத் தொட்ட மணித்துளியைசிறைப்படுத்தி காட்டியதுதொலைக்காட்சிசிறு வயதில் நிலாச்சோறு தின்றதைஅசை போட்டார்அப்பாசோஃபாவில் சாய்ந்தபடிகைகொட்டி கொண்டாடினான்மகன்'பாப்கார்ன்' தின்று'கோக்' குடித்தபடி"அம்மா, பசிக்குது" என்றான்நடைபாதையில் உறங்கி எழுந்தசிறுவன்நீரற்ற கண்களுடன்நிலவை வெறித்தாள்பாப்பம்மா
புலித்தோல்

புலித்தோல்

வளவ. துரையன் என் நட்புக் கோட்டைக்குள்சில துரோகிகள்ஊடுருவி விட்டார்கள்.பசுத்தோல் போர்த்திய புலிகள்எல்லாம் அந்தக் காலம்.இப்பொழுதுபுலித்தோலைப் போர்த்தியபசுக்கள் உலவுகின்றன.ஆனால்பசுக்களின் பார்வையும்பண்பும் கொண்டதாகப்பச்சைப்பொய் பேசுகின்றன.பார்வையில் பாசிபோல்தெரிந்தாலும் விலக்கினால்பாதாளத்தில் சுறாக்கள்.குளக்கரையில் கசிவுஏற்படாமல் காப்பதிலும்கோட்டைச் சுவர்களில்விரிசல் விழாமல்பார்த்துக் கொள்வதிலும்தான்வாழ்க்கையின்சாமர்த்தியம்இருக்கிறதாம்.

மழையுதிர் காலம்

ஆர் வத்ஸலா நாள் காட்டியில் அக்னி நட்சத்திரத்தின் முடிவை பற்றின தீர்மானங்களை வெயில் கன்னி ஒதுக்குவதை போல் தினசரியில் தொலைகாட்சியில் வானொலியில் தோன்றும் நிபுணர்கள் மழை பெய்யும் சாத்தியத்தை பற்றிய முன்னறிவுப்புகளை அலட்சியமாக ஒதுக்கும் வானம் நனைய ஆசைப் படும் குழந்தைகளிடம் …

மழை

ஆர் வத்ஸலா  கொட்டுகிறது எனது பால்கனியில் மழை வெளியில் துருத்திக் கொண்டிருக்கும்  ஆஸ்பெஸ்டாஸ் பலகையின் மீது செல்லம் கொஞ்சிக் கொண்டு பாவம்! தெரியும்  அதற்கும் காலம் கடந்த பின்  அன்பை மதிக்கத் தெரியாதவர் மேல் அன்பை சொரிவது தன்மானத்திற்கிழுக்கென்று 

நாட்டுப்பற்று 1

ஆர் வத்ஸலா நிறமிழந்த 'பாலிஸ்டர்' சட்டை அணிந்த அவன் அந்த இடத்தை பெருக்கி சுத்தம் செய்தான் அடுக்கியிருந்த பிளாஸ்டிக் நாற்காலிகளை பிரித்துப் போட்டான் எல்லோரும் நல்லாடைகளில் கூடிய பின் சிறுகொடியும் குண்டூசியும் தந்து  தானும் ஒன்று குத்திக் கொண்டான் பெருமையுடன் புதுக்…

 நட்பு 2 

ஆர் வத்ஸலா நீ இல்லாமல் நான் படும் பாட்டை கவிதையாக வடித்து என்னை வதைக்கும்  தாபத்தை தீர்க்க முயன்றேன் தாபத்தின் அனல் என்னவோ குறையவில்லை  மேலதிகமாக  அந்த 'நீ'  யாராக இருக்கும் என்று என் முகத்தை பார்த்து  அனுமானிக்க முயற்சிக்கும் சிலரும்…

நட்பு 1

ஆர் வத்ஸலா உறவின் மேல் கொட்டிய பாசம் பாறையில் வீழ்ந்த நீராய் ஓடிவிட்டது துணையின் மேல் பொழிந்த காதல் பாலையில் வீழ்ந்த நீராய் காய்ந்துவிட்டது ஆரவாரமில்லாமல் தோன்றின நட்புக்கள் அவற்றில் கணக்குகளில்லை நான் கொடுத்தது நினைவிலில்லை  இருப்பது நினைக்கும்போதேல்லாம் நிறைந்து போகும்…
வலசையில் அழுகை

வலசையில் அழுகை

--வளவ. துரையன் நான்கு கரைகளிலும்  நாணல்கள்  படிக்கட்டுகள் இல்லையெனினும்  சாய்தளப்பாதை. ஆள்குளிப்பதை யாரும் அறியாத அளவிற்கு கண்களை மறைக்கும்  காட்டாமணக்கு. குட்டையோ அல்லது குளமோ  எப்பெயரிட்டு அழைத்தாலும்  எல்லார்க்கும் பொதுவானது. மாடுகளை மேயவிட்டபின்  மத்தியான வேளையில்  மேய்ப்பவர்களுக்கு  அதுதான் சொர்க்கம். இப்போது…
வழி

வழி

வளவ. துரையன் பார்த்துக் கொண்டிருக்கும்போதே  மறைந்து போகின்ற  பச்சைக் கிளிபோல்தான் இது. இரு கைகளையும்  குளம்போல் குவித்துவைத்து  ஏந்தினாலும் விரலிடுக்குகளின்  வழியே கசியும் போகும்  நீர்தான் இது. இறுதியில் ஓர் இலை கூட  இல்லாமல் வீணே  பட்டமரமாய் நிற்கிறது. நன்றாக ஆடிக்கொண்டிருக்கும் …