ரவி அல்லது “பிஸ்மில்லாஹ் ரஹ்மானிர் ரஹீம்.” உம்மா சின்ன வயதிலேயே சொல்லிக் கொடுத்தது. எது செய்யும்போதும் ‘பிஸ்மில்லாஹ்’ சொல்லி ஆரம்பிச்சா சைத்தான் ஓடிருவான். சொல்லலைன்னா இவர்களோடதான் நம்ம வேலைன்னு கூடவே இருந்திருவான் என்றார்கள்.பல முறை மறந்து போய்விடுகிறது. உம்மா வாங்கிய செருப்பு பண்ணு கணக்கா மெத்து மெத்துன்னு இருக்கு. நாளைக்கு பள்ளிக்கூடத்தில் எத்தனைப் பேர்கள் போட்டுப் பார்க்கிறேன் என்று கேட்பார்களோ என இப்போதே கவலையாக இருக்கிறது. யாருக்கு வேண்டுமானாலும் போடக் கொடுக்கலாம் ரபீக்கு மட்டும் கொடுக்கக்கூடாது. அவனுக்கு […]
மீனாட்சி சுந்தரமூர்த்தி. மாமரத்துக் குயில் கூவிக் கொண்டிருந்தது.பாகீரதி சீக்கிரமே விழித்துவிட்டாள். அலாரம் ஒலிக்க இன்னும் ஒருமணிநேரம் இருந்தது. அருகில் உறங்கிக் கொண்டிருந்த மகள் நிஷாவிற்குச் சரியாகப் போர்வையைப் போர்த்திவிட்டு வெளியில் வந்தாள். மார்கழி மாதத்துக் குளிர் பனிப்படலமாக விரிந்திருந்தது. அடுத்த அறையில் உறங்கிக் கொண்டிருந்த விஸ்வத்தின் உறக்கம் கலைந்து போகும் என்று விளக்கைப் போடாமலே உள்ளே வந்தாள். மெல்லிய நீல விளக்கொளியில் கனமான புத்தகம் ஒன்று மார்பில் கவிழ்ந்திருந்தது. அதை மெதுவாக எடுத்து அருகிலிருந்த […]
ஆர் சீனிவாசன் மூன்று நிமிடங்கள். திகில் நிறைந்த மூன்று நிமிடங்கள். அம்மூன்று நிமிடங்களில் பல விஞ்ஞானிகளின், பொறியாளர்களின் கனவு நினைவாகலாம் அல்லது இதற்கு முன் நடந்ததைப்போலத் தோல்வியைத் தழுவலாம். மூன்றே நிமிடங்கள். விண்கலம் நிலவின் பரப்பிற்கு மேல் சுமார் ஏழு கிலோமீட்டர் தொலைவில் இருந்தபோது விண்வெளிவீரர்கள் குமார் மற்றும் குப்தா தங்கள் விண்வெளி உடைக்குள் பதட்டத்துடன் விண்கலத்தின் கணினியை நோக்கினர். அனைத்து அமைப்புகளும் சரியாகத்தான் இயங்கிக்கொண்டிருந்தன. “இறங்கும் செய்முறையைத் துவக்கலாம். வெற்றி கைகூடட்டும். நன்றி ” என […]
-ரவி அல்லது இப்போது ஏற்பட்டிருக்கும் இந்த மன நெருக்கடிக்கு இவர்களை மட்டும் குறை சொல்ல முடியாது. கடந்த ஒரு மாதமாக எல்லோரிடமும் விவாதங்கள் நடந்தபடிதான் இருக்கிறது. இன்னும் ஒரு சில நாட்களில் தேர்வு முடிவுகள் வந்துவிடும். அடுத்து என்ன படிக்க வைப்பது அதை எங்கு படிக்க வைப்பது என்கிற ஆலோசனைகளுக்கு கொஞ்சமும் பஞ்சமில்லை. இவ்வளவிற்கும் பெருமாள் பள்ளியின் தலைமை ஆசிரியர். அவர் மனைவி மல்லிகா படித்தவர். படிக்கப்போகும் மதியரசி விவரமான பிள்ளை. இங்கு அறிவாளியாக இருந்தாலும் எதிர்காலம் […]
–பாலமுருகன்.லோ நிறுவனத்திலிருந்து பேருந்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்த கணேசனுக்கு ஏனோ அவரது மனது ஒரு நிலையில் இல்லை.பேருந்தில் ஜன்னல் ஓரமாக அமர்ந்தவர் ஆழ்ந்த சிந்தனையில் மூழ்கியவராக மற்றவர்களுக்குக் காட்சியளித்தார். அவர் இது போன்று என்றுமே இருந்ததில்லை, ஆனால் இன்று கணேசனின் மனதில் ஒருவித படபடப்பு. ஜன்னல் கம்பியில் தலையைச் சாய்த்தவர் அன்று காலையில் நிறுவனத்தில் நடந்தவற்றை எண்ணிய வண்ணமாகத் திரும்பத் திரும்ப யோசித்துக்கொண்டிருந்தார். என்றும் போல் அன்று கணேசன் அலுவலகம் சென்ற போது, அங்கிருந்த நண்பர்கள் சக […]
ரவி அல்லது இரயில் கிளம்ப நேரம் சமீபித்திருந்தது. எனக்கு ஒதுக்கப்பட்ட கீழே உள்ள படுக்கையில் நான் உட்கார்ந்து இருந்தேன். ஆறாவது நபர் மேலே ஏறி படுத்து விட்டார். நான் ரொம்ப நாளாக தேடிக் கொண்டிருந்த புத்தகத்தை வாங்கி ஆறு மாதமாக படிக்க நேரம் இல்லாததால் இந்தப் பயணத்தில் படித்துவிட வேண்டும் என்று பாதிக்கு மேல் படித்து அந்த புத்தகத்திற்குள் நான் பயணித்துக் கொண்டு இருந்தேன். அவர்கள் அவசரமாக பெட்டி மற்றும் பைகளை கொண்டு வந்து கீழே தள்ளினார்கள் […]
-ரவி அல்லது. கோடைக்காலங்களில் குறைந்தபட்சம் இரண்டு முறையாவது குளித்துவிடுவேன். அதற்குமேல் குளிப்பது என் வேலைகளையும் மனோநிலையையும் பொருத்தது. “தலையில தேய்ச்சி எவ்வளவு நேரம் வச்சிருப்பீங்க. சீக்கிரம் குளிங்க நான் குளிக்கனும்.” என்றார்கள் வழக்கம்போல மனைவி. பெண்கள் தலையில் முடிகள் கொட்டுவதற்கு நரைக்காமல் இருப்பதற்கென்று ஏதாவது இலைகளை அரைத்து தலையில் தடவுவார்கள். சின்ன வயதிலிருந்தே அக்காமார்கள் ஆறு பேருக்கு ஒரு தம்பி என்பதால் அவைகள் எனக்கு இலவச இணைப்பாக கிடைக்கும். அப்போது அவைகளை நான் விரும்பாவிட்டாலும் கையில் […]
வளவ. துரையன் அந்தத் தெருவின் தொடக்கத்திலேயே இருந்த வேப்ப மரத்தின் நிழலில் தன் இருசக்கர வாகனத்தை நிறுத்தினான் சங்கரன். இதுபோன்ற விசாரணைகளுக்கெல்லாம் நேராகப் பாதிக்கப்பட்டவரின் வீட்டுக்குப் போகக் கூடாது என்பது அவன் பணியில் சேர்ந்தபோது சொல்லப்பட்ட பாலபாடம். வேப்பமர நிழல் சற்றுப் பெரியதாகவே இருந்தது. அங்கு ஒரு சர்பத் கடையும் இருந்தது. நீண்டநாள் பழகியவர் போல அந்தக் கடைக்காரர் ”வாங்கய்யா சர்பத் சாப்பிடுங்க” என்றார். சங்கரன் கடைக்கு வெளியே இருந்த பெஞ்சில் உட்கார்ந்தான். “சர்பத்தா; ஜூஸா” என்று […]
முகுந்தன் பெங்களூரிலுள்ள அந்தக் கல்லூரியில், அந்தப் பிரிவில் சேர்ந்ததற்குக் காரணம் இருந்தது. முதல் நிலையில் தேர்ச்சி பெற்றால் நியூயார்க்கில் வேலை செய்யலாம். அந்தச் சுதந்திரச் சிலையைப் பார்த்தபடி ஒவ்வொரு பொழுதும் விடியலாம். அந்தக் கல்லூரியில் படித்த பலர் அங்கு வேலை செய்கிறார்கள். அவர்களே வேலை வாங்கித் தந்துவிடுவார்கள். அதுமட்டுமல்ல. தன் நெருங்கிய நண்பன் இப்போது நியூயார்க்கில்தான் இருக்கிறான். சொந்தச் செலவில் நியூயார்க் சென்றுவிட்டால் போதும். * எல்லாம் சுமுகமாகவே நடந்தது. நியூஜெர்சியில் மூன்று நண்பர்களோடு இப்போது முகுந்தன் […]
மீனாட்சி சுந்தரமூர்த்தி. நகரின் மையப்பகுதியில் வானளாவ வளர்ந்திருந்த அந்த மருத்துவமனை வாயிலில் சிவப்பு சைரன் ஒலிக்க வந்து நின்றது ஆம்புலன்ஸ். காத்திருந்த அந்த வெள்ளைச் சீருடைப் பணியாளர்கள் . வண்டியிலிருந்தப் பெண்மணியை ஸ்ட்ரெச்சரில் மாற்றிப் படுக்கவைத்து வேகமாக அவசர சிகிச்சைப் பிரிவிற்குக் கொண்டு சென்றனர்.அங்கிருந்த மருத்துவர் ஓடி வந்து பார்த்தார், அந்தப் பெண்ணின் மகளும், மருமகனும் கவலை தேக்கிய முகங்களுடன் நின்றனர். மருத்துவர் , ‘ என்ன ஆச்சு சொல்லுங்க’ ‘டாக்டர் அம்மாவுக்கு ஒரு வாரமா […]