This entry is part 19 of 24 in the series 9 ஆகஸ்ட் 2015
ரமணி வெய்யிலின் உக்கிர மஞ்சளில் தோய்ந்து கொண்டிருந்த ஒரு பகலில்தான் மாரித்தாத்தா அந்த மரக்கிளையை நட்டுவைத்தார். யார் யாரோ ஊற்றிய தண்ணீரில் மேல் படர்ந்த முள் பாதுகாப்பில் ஒரு பெண்பிள்ளையைப் போலத்தான் வளர்ந்து கொண்டிருந்தது அது. பெயர் தெரியாத பறவைகளின் கீதத்தில் வேறுவேறு அணில்களின் ஸ்பரிசத்தில் பசுமையேறிக் கொண்டிருந்தது அதன் மேல் ஒரு கவிதையாய். வசந்தத்தின் பாடல்கள் மழை நாளின் புதுமைகள் பனியின் உறைந்த ரகஸ்யங்கள் எனப் பருவங்கள் வீசிய மாயங்களைக் காற்றில் எழுதிக்கொண்டிருந்தது அது. ஊரின் […]
இசை: தமிழ்மரபு இசையில் ஒரு தனித்வமான தமிழ் மரபைப் பற்றிப் பேசுவது கடினம். மிக பழம் காலத்திலிருந்து தமிழ் இசையின் சரித்திரத்தை தேடிப் செல்வோமானால்,நமக்குக் கிட்டும் இலக்கியச்சான்றுகள் அதைத் தமிழ் இனம் மற்றும் பண்பாட்டின் விளைபொருளாகக் காட்டும் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் அதே சமயம் அது ஒரு பரந்த பெரிதான அகில இந்திய (Pan-Indian)மரபின் ஒரு பகுதியாகவும் இருப்பதைப் பார்ப்போம் அப்படிப் பார்க்கையில் அதில் முழுதுமாய் தமிழ் மரபு சார்ந்தது மட்டுமே எனச் சொல்லக் கூடியதாய் தனித்வம் […]
Nagasaki Peace Statue சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா அணு ஆயுதங்கள் உண்டாக்கிய முதல் பிரளயம்! ‘உலகத்தைத் தூள் தூளாகத் தகர்க்கும் மரண உருவெடுத்து விட்டேன், நான்! என்று கிருஷ்ண பரமாத்மா பகவத் கீதையில் அர்ஜூனனுக்கு அருளிய ஓர் வேத மொழியை, நியூ மெக்ஸிகோ சோதனைத் தளமான டிரினிடியில் [Trinity], 1945 ஜூலை 16 நாள் சரித்திரப் புகழ் பெற்ற முதல் ஆய்வு அணுகுண்டு, பயங்கர வெடிப்பை உண்டாக்கிய போது, ராபர்ட் ஓப்பன்ஹைமர் [Robert Oppenheimer] கூறினார். அவர்தான் […]