திருடன்

This entry is part 10 of 10 in the series 13 ஆகஸ்ட் 2017

குருமூர்த்தி பழனிவேல் “இவனா, இவன் ஒரு திருடன்ல…..!!”, ஜோசப் தைவோ தன் அருகில் இருந்த சக பயணியிடம் அவர் படித்துகொண்டிருந்த கார்டியன் செய்தித்தாளை பார்த்து சொன்னார். அவர் சுட்டிய படம் ஒரு மத்திய அமைச்சருடயது. அவருடைய வெளிநாட்டு பயணம் பற்றிய செய்தியில் அவர் நைஜீரிய பாரம்பரிய உடையில் சிரித்துக்கொண்டிருந்தார். ஜோசப் தைவோவுக்கு டிசம்பர் வந்தால் நாற்பத்தைந்து வயது முடிகிறது. ஜோசப் நைஜீரியாவில் லாகோஸ் நகரில் இசல்லோ இண்டஸ்ட்ரியல் பகுதியில் ஒரு பிளாஸ்டிக் கம்பெனியில் டெலிவரி வாகன ஓட்டியாக […]

கவிதைகள்

This entry is part 2 of 10 in the series 13 ஆகஸ்ட் 2017

எஸ்.எம்.ஜுனைத் ஹஸனீ சூழல்   அலை நீர் காலுராய அந்த கடற்கரையில் பின்னிப் பிணைந்து அமர்ந்திருந்தார்கள் அந்த யுவனும் யுவதியும் அவர்களைப் பொருத்தமட்டில் அது அவர்களுக்கான உலகம் அவர்களின் உலகை அவர்கள் இரும்புக் கதவு கொண்டு அடைத்திருந்தார்கள் ஊடலும் கூடலும் பின்னர் சின்னதாய் சில சில்மிஷங்களென எல்லாம் முடிந்த தருவாய் தன் துப்பட்டாவை உதறியபடி அந்த யுவதி எழ நிறைய பேர் துரித கணத்தில் அந்த இரும்புக் கதவின் வாயிலாக வெளியேறலானார்கள். புது வீடு   இந்த வீட்டிற்கு வந்து […]

கம்பனின்[ல்] மயில்கள் -1

This entry is part 3 of 10 in the series 13 ஆகஸ்ட் 2017

எஸ். ஜயலக்ஷ்மி எத்தனை தடவை பார்த்தாலும் யானை, கடல், மயில் முதலியவை அலுப்புத் தருவ தில்லை. குழந்தைகள் முதல் பெரியவர் வரை இவற் றைப் பர்ப்பதில் ஆர்வம் காட்டுகிறார்கள். அதிலும் மயில் ஆடுவதைப் பார்க்கும் போது ஆனந்தம் ஏற் படுகிறது. அருணகிரிநாதர் ஆடும் மயிலை ஆடும் பரி என்று போற்றுகிறார். அநேகமாக கலைமகளின் படங் களில் கலைமகளுக்கு அருகில் மயில் இருப்பதைப் பார்க்கிறோம். மயிலுக்கு மஞ்ஞை, கபாலம், தோகை, மயூரம், சிகண்டி, கூழை, பீலி, தொங்கல், குக்குடம், […]

சூரியனின் உட்புறக்கரு மேற்புறக் கோளத்தை விட நான்கு மடங்கு மிக வேகமாய்ச் சுழல்கிறது

This entry is part 4 of 10 in the series 13 ஆகஸ்ட் 2017

  Posted on August 11, 2017 சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா “பிரபஞ்சத்தின் நுட்பங்களைப் புரிந்து கொள்ளும் திறமை மனித உள்ளத்துக் கில்லை !  பெரிய நூலகத்தில் நுழையும் சிறு பிள்ளை போன்றுதான் நாமிருக்கிறோம்.  யாராவது ஒருவர் அந்த நூல்களை எழுதியிருக்க வேண்டும் என்று சிறுவனுக்குத் தெரிகிறது.  ஆனால் யார் அதை எழுதியவர், எப்படி அது எழுதப் பட்டுள்ளது என்று அதற்குத் தெரிய வில்லை.” ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் (1879-1955) +++++++++++++++++++++ கதிரவனின் சினம் எல்லை […]

நபிகள் நாயகம் வரலாற்றுச் சிறப்புமிக்க 57 கவிதைகளின் தொகுப்பு நூல் வெளியீடு

This entry is part 5 of 10 in the series 13 ஆகஸ்ட் 2017

‘நபிகள் நாயகம்’ எனும் மகுடத்தை நாமமாகக் கொண்டு 57 வரலாற்றுச் சிறப்புமிக்க கவிதைகளைத் தன்னகத்தே உள்ளடக்கியிருக்கும் கவிதைகளின் தொகுப்பு நூல் எதிர்வரும் 20.08.2017 ஆந் திகதி ஞாயிற்றுக் கிழமை காலை 9.00 மணியளவில் கிண்ணியா பொது நூலக மண்டபத்தில் வெளியீடு செய்யப்படவிருக்கிறது. முன்னோடிகள் கலை இலக்கிய வட்டத்தின் வெளியீடான இந்நூலுக்கு கலாபூஷணம் பீ.ரீ. அஸீஸ் தொகுப்பாசிரியராகவும் கவிஞர் ஏ.எம். கஸ்புள்ளா உதவியாளராகவும் இருந்து நெறிப்படுத்தியிருக்கின்றனர். மேலும் தொகுப்பாக்க ஆலோசனை கலாபூஷணம் ஏ.எம்.எம். அலி, பிரதம நூலகர் எம்.ரீ. […]

தொடுவானம் 182. தலையில் விழுந்த இடி.

This entry is part 1 of 10 in the series 13 ஆகஸ்ட் 2017

            பதிவுத் திருமணமும் விருந்தும் நடந்து முடிந்தது. எங்களுக்கு சட்டப்படி திருமணம் நடந்துவிட்டது. அவள் பெயர் ஜெயராணி.வீட்டில் அனைவரும் செல்லமாக ” ஆச்சி ” என்று அழைக்கின்றனர். அதற்குக் காரணம் அவளின் அப்பாவின் தாயாரான அன்பாயியை அப்படியே அச்சாக ஓத்திருக்கிறாள் என்பதற்காகத்தான் . அந்த அன்பாயி கிறிஸ்துவராக மாறியபின்பு அவருக்கு ஜெயராணி என்று பெயர் வைத்துள்ளனர். அந்த பெயரைத்தான் அவளுக்கு வைத்து ” ஆச்சி ” என்று அழைக்கின்றனர். நாம் […]

இலக்கியச் சோலை, கூத்தப்பாக்கம், கடலூர் 20—08—2017 ஞாயிறு மாலை 5.30 மணி

This entry is part 6 of 10 in the series 13 ஆகஸ்ட் 2017

  நிகழ்ச்சி எண்: 171   வரவேற்புரை : வளவ. துரையன், தலைவர், இலக்கியச் சோலை   திருக்குறள் விளக்கம்: திரு வெ. நீலகண்டன் பொருள் : புல்லறிவாண்மை   கவியரங்கம் ”பை”கள் பாடுகின்றன   தலைவர்: திரு க. எழிலேந்தி   பாடுபொருள்                            பாடுவோர்   கருப்பை             ———–      திருமதி சுபா அருணாசலம்   இரைப்பை           ————      திருமதி கவிமனோ   அகப்பை             ————      திருமதி மஞ்சு முருகவேல்   பாலிதீன்பை         ————–      திரு இரா. […]

நெய்தல்—தாய்க்கு உரைத்த பத்து

This entry is part 7 of 10 in the series 13 ஆகஸ்ட் 2017

  நெய்தல் என்பது கடலும் கடல் சார்ந்த நிலமும் ஆகும். இங்கு வாழும் மக்கள் பரதவர் ஆவர். மீன் பிடித்தலும் உப்பு விற்றலும் அவர்களது தொழில்கள். உள்ளம் ஒருங்கிணைந்த காதலர் பின்னர் கடமை காரணமாகப் பிரிந்த காலத்து ஒருவரை ஒருவர் நினைத்து இரங்குவதே நெய்தல் திணைக்கு உரிய பொருள் ஆகும். இப்பகுதியில் உள்ள பத்துப் பாடல்களை எழுதியவர் அம்மூவனார் ஆவர். இவர்தம் இயற்பெயர் மூவன் என்பதாகும். தாய்க்குரைத்த பத்து—1 இதில் இருக்கற பத்துப் பாட்டுகளுமே தோழி சொல்றதுதான்; […]

ஏனென்று கேள் !

This entry is part 8 of 10 in the series 13 ஆகஸ்ட் 2017

  மூலம் : பீட்டில்ஸ் பாடகர் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா   நேசிப்பது நான் உன்னை ! நீ மொழிய மாட்டாயா நான் விழைவதை ! எனக்குத் தெரியும், உண்மை, அது காட்டப் போகுது ஒரு போதும் நான் கவலை யுறக் கூடாது. இப்போது நீ என்னவள் ! அந்த மகிழ்ச்சி என் கண்ணை நிரப்புது ! கால நேரத்தில் உனக்கதன் காரணம் புரியும் ! கவலையா என்னை அழ வைக்கும் ? இல்லை […]

வெறி

This entry is part 9 of 10 in the series 13 ஆகஸ்ட் 2017

கவிமுகை மகிழினி “நிஷு அறைக்குள்ள போம்மா சீக்கிரம்” “ஏம்மா?” “அங்க போய் வெளையாடு இதோ வந்துடுறேன்” “சரிம்மா”  என்று நிஷா படுக்கை அறைக்குள் போனதும் அம்மா அகிலா கதவைச் சாத்திக்கொண்டது பற்றியெல்லாம் நிஷா அலட்டிக்கொள்ளவில்லை. வீட்டினுள் திமு திமு என்று சிலர் நுழைந்த காலடிச்சத்தமும் கலவரப் பேச்சுக்குரலும் கலவரப்படுத்தவில்லை அவளை. கட்டிலில் ஏறி அமர்ந்து எதிரே இருந்த கண்ணாடியுடன் கதை பேசத் தொடங்கியிருந்தாள். “டூமீல் டுமீல்” இரண்டுமுறை கேட்ட அதிர்வு ஒலி நிச்சயமாக துப்பாக்கி வேட்டுத்தான். கொஞ்சமாய்த் […]