நீரிலிருந்து உப்புத்திரவமான பயணத்தில்..:-

This entry is part 36 of 47 in the series 31 ஜூலை 2011

நீராய் ஏறுகிறீர்கள் ஒருவருக்குள். மனதில் அவர் அருந்தியதும் நிரம்பிய ரத்தச் சகதியில் அழுந்தத் தயாராகுங்கள். ஆரிக்கிள் வெண்ட்ரிக்கிள் தடவி ஆர்வத்துடன் ஓடத்துவங்குகிறீர்கள். உங்கள் உரையாடல் ஆக்சிஜனைப் போல நிரம்புகிறது. ஓட ஓட அழுக்கடைகிறீர்கள். உணவுச் சத்துக் கொடுத்து உப்புச் சக்கையைப் பிரித்து மாசுச் சொல் சுமந்து.. உப்பை எடுத்ததால் நன்றியோடு இருக்கிறீர்கள். என்றும் உயிர்போல ஒட்டிக்கொண்டே இருக்கலாமென.. நிறைய அறைகள் இருக்கின்றன. ஓடிக்கொண்டே இருந்த நீங்கள் ஓய்வெடுக்கப் போகிறீர்கள். சிறுநீரக நெஃப்ரான்களில். அழுக்கடைந்து தேங்கிய உங்களை கனத்த […]

அந்தப் பாடம்

This entry is part 35 of 47 in the series 31 ஜூலை 2011

பூவைப் பறிக்கிறோம், செடி புன்னகைக்கிறது மறுநாளும்.. காயைக் கனியைக் கவர்கிறோம், கவலைப்படவில்லை காய்க்கிறது மறுபடியும்.. கிளைகளை ஒடிக்கிறோம், தளைக்கிறது திரும்பவும்.. தாங்கிக்கொள்கிறது புள்ளினத்தை- ஓங்கிக்கேட்கிறது பலகுரலிசை.. அட மரத்தையே வெட்டுகிறோம், மறுபடியும் துளிர்க்கிறதே ! மீண்டும் வெட்டாதே .. மனிதனே, உனக்கு வேண்டியது ஒரு பாடம்.. அதைநீ கற்றுக்கொள் மரத்திடம்- அழிவை என்றும் எதிர்க்கும் ஆவேசம் ! -செண்பக ஜெகதீசன்..

புதிய பழமை

This entry is part 34 of 47 in the series 31 ஜூலை 2011

எதுவும் புதிதல்ல. சூ¡¢யன் சொடுக்கும் காலச் சுழற்சியில் பழையன எல்லாம் புதிதாய்த் திரும்பும். பெருவெளியில் பொதிந்த வேதமும் நாதமும் கழிக்க முடியாத பழையன தானே! கழிதல் என்பது கணிதத்தின் சாயல். காலக் கணக்கில் மனிதன் கழிவதும் மனிதக் கணக்கில் காலம் கழிவதும் பழையன அன்றிப் புதியன அல்ல. நீயும் நானும் காலத்தின் குழந்தைகள் தொன்மையின் தன்மையில் விளைந்த விருட்சங்கள். ஞாபகப் புதர்களில் மறைந்ததாய்த் தோன்றி மீண்டும் துளிர்த்த பழைய உறவுகள். புதிதாய் எதுவும் வருவது இல்லை வருவது […]

புன்னகையை விற்பவளின் கதை

This entry is part 33 of 47 in the series 31 ஜூலை 2011

– திலினி தயானந்த தமிழில் – எம்.ரிஷான் ஷெரீப், இலங்கை பளபளக்கும் விழிகள், பூக்கும் இதழ்கள் என்பன மகிழ்ச்சி நிரம்பி வழியும் ஒரு வாழ்க்கையின் அறிகுறி. உண்மைதான், நான் இன்று எல்லோர் முன்னிலையிலும் புன்னகைக்கிறேன். இவ்வுலகில் வாழும் ஏனைய எல்லோருக்கும் இருக்கும் பிரச்சினைகள் எதுவுமே எனக்கு இல்லாதது போல பூரிப்புடன் உரையாடுகிறேன். உண்மையில் இன்னுமொருவர் முன்னிலையில் எனது விழிகளில் கண்ணீரைத் தேக்கி வைக்க எனக்கு உரிமையில்லை. உங்களைப் போலவே நானும் துயருவதை சொல்வதற்கும் இயலவில்லை. புன்னகையால் துயரக் […]

சிறகின்றி பற

This entry is part 32 of 47 in the series 31 ஜூலை 2011

கனவுகளே காயம்பட்ட நெஞ்சத்தை வருடிக் கொடுக்கும் மயிற் பீலிகளே வேஷத்துக்கு சில நாழிகை நேரம் விடுதலை கொடுக்க வைக்கும் வடிகால்களே செலவின்றி தேவலோகத்துக்கு சுற்றுலா அழைத்துச் செல்லும் இன்பத் தேன் ஊற்றுகளே இறக்கையின்றி பறக்க கற்றுக் கொடுக்கும் உனது மாயாஜால தந்திரங்களே உறக்கத்திற்கு இனிமை சேர்க்கும் கடவுளின் கொடைகளே கனவுலகச் சாவியை தொலைத்தலையும் பகல் பொழுதே உள்மன ஏக்கங்களுக்கு தீனிபோடும் தேவதையின் பரிசுப் பொருட்களே.

அறிதுயில்..

This entry is part 31 of 47 in the series 31 ஜூலை 2011

ஆயிரம் முறை சொல்லியனுப்பியும் இனிப்புடன் வரமறந்த தந்தையின் மீதான நேற்றைய கோபத்தை ஒரு கண்ணிலும்; .. உடன் விளையாட வரமறுத்த அன்னையின் மீதான இன்றைய கோபத்தை இன்னொரு கண்ணிலும் சுமந்துகொண்டு; கட்டிலிலேறி கவிழ்ந்துகொள்கிறாய்.. என்னுடைய எல்லா சமாதானமுயற்சிகளையும் புறந்தள்ளிவிடுகிறது…. உன்னுடைய செல்லக்கோப கன்னஉப்பல்… அம்மாசித்தாத்தாவின் பஞ்சுமிட்டாய்வண்டி தூதனுப்பிய மணியோசையும் உனது பொய்த்தூக்கத்தை கலைக்கமுடியாமல் வெட்கி; முகம் மறைத்தோடுகிறது இருளில்.. தாயின் குரலும் தந்தையின் சீண்டலும் பலனளியாமல்.. ஊர்ந்துவந்த நண்டும் நரியும்கூட விரல்விட்டு இறங்கியோடிவிடுகின்றன.. இனிப்புப்பெட்டியின் கலகலச்சத்தம் ஏற்படுத்திய […]

மழையைச் சுகித்தல்!

This entry is part 30 of 47 in the series 31 ஜூலை 2011

நள்ளிரவு மழை நண்பகல் கழிந்தும் பெய்தலை இன்னும் நிறுத்தவில்லை. எழுதற்குப் பிரியமின்றிப் புரண்டு படுத்தலிலும், பொழியும் வான் பார்த்திருப்பு கழித்துக் கிடப்பதிலும் தானெத்தனை களி! வினாத்தொடுத்து புரிதலை வினாக்களாக்குவதில் பேரவாக் கொள்ளும் மனது! இயற்கை நோக்கி, வாசித்து, கனவில் மூழ்கி இளகி விடுதலென் இயற்கையே. சதிராடும் மின்னற்கொடியாள் வனப்பில் தமையிழக்காத கவிஞரெவருளரோ? சிறகு சிலிர்த்து நீருதிர்க்கும் புள்ளினம், நினைவூட்டும் பால்யப் பொழுதுகள். காகிதக் கப்பல்களை மட்டுமா கட்டினோம்? கற்பனைகளை மட்டுமா பின்னினோம்? பெய்தலில் வரலாற்றைப் ‘ போதிக்கும் […]

கரைகிறேன்

This entry is part 29 of 47 in the series 31 ஜூலை 2011

கரைகிறேன் தண்ணீரில் அழுவதை போன்றுதான் தனிமையில் நான் அழுவது என்னைத்தவிர எவருக்கும் தெரியபோவதில்லை தண்ணீரில் கண்ணீர் தன் சுவையிழப்பதை போன்று தனிமையில் நானும் சுயம் இழந்துவிட தனிமையும் கண்களும் தாமரையை இரசிக்க பழகட்டும் . அ.இராஜ்திலக்

வாசல்

This entry is part 28 of 47 in the series 31 ஜூலை 2011

எப்படியாவது தன் மகன் இஞ்சினியரிங் பட்டம் வாங்க வேண்டுமென்பதில் பிடிவாதமாக இருந்தார் சுப்பையன்.ஆனால் அவரது மகன் சுந்தரோ வேறு மார்க்கத்தை பின்பற்றப்போவதை மனதில் வைத்துக் கொண்டு படிப்பை தொடர மாட்டேன் என பிடிவாதமாக இருந்தான்.+2 முடித்துவிட்டு பையனை வீட்டில் வைச்சிருந்தா ஏன், எதற்கு, என்னண்ணு கேள்வி கேட்டு சொந்த பந்தங்கள் குடையுமே என வேதனைப்பட்டாள் சுந்தரின் அம்மா காமாட்சி. காதைக் கிழிக்கும் ஹாரன்.இயந்திரத்தனமான மனிதர்கள்.விண்ணை முட்டும் கட்டிடங்கள்.எங்கு பார்த்தாலும் மேம்பாலங்கள்.இரவைக் கொண்டாடும் இளைஞர்கள்.இப்படிப்பட்ட சென்னை நகரத்தில் வசித்துக் […]

செதில்களின் பெருமூச்சு..

This entry is part 27 of 47 in the series 31 ஜூலை 2011

* பிடித்து உலுக்கும் கனவின் திரையில் அசைகிறது உன் நிழல் நீயுன் தூண்டில் வீசிக் காத்திருக்கிறாய் என் உரையாடலின் உள்ளர்த்தம் சிக்குவதற்கு மரப்பலகைகள் வேய்ந்த பாதையில் ஈரம் மின்னும் அந்தியின் இளமஞ்சள் நிறம் இந்த அறையெங்கும் பரவிய ரகசியத்தின் சங்கேதக் குறிப்புகளை தேடிச் சலிக்கிறேன் மூழ்குகிறது அகாலம்.. சின்னஞ்சிறிய நோக்கும் கூர்மையில் கசியும் கானல் குட்டையில் நீந்துகிறது நமது கண்கள் யாவுமே செதில்களின் பெருமூச்சென எழுதித் தருகிறாய் இந்த மௌன இரவில்.. ***** –இளங்கோ