கனா தேசத்துக்காரி

This entry is part 3 of 47 in the series 31 ஜூலை 2011

கனவுகளில் தன்னைத்  தொலைத்தபடியவள் என்றுமே தனித்திருந்தாள் அம் மாய உலகில் தனக்கெனவோர் அரியாசனம் அமைத்தவள் பிரஜைகளையும் உருவாக்கினாள் அவளின் பதிவுகளைத் தாங்கியே இருந்தனர் அதில் அனைவரும் பதிப்பிக்கப்படாமல்  இருந்தன பொய்களில் சாயல்கள் அங்கிருந்த நிழல்களெல்லாம் கருமையின் பிம்பங்கள் வெளிர் நிறங்கள் தாங்கிய போர்க்கொடியும் ஏற்றப்படுவதேயில்லை மனதின் நீரூற்றுகள்  பல வண்ணங்களில் வாரி இறைத்தபடியிருந்தன தனக்கென ஓர் குணத்தைக் கொண்டுமிருந்தன ஒவ்வொரு நிறமும் கோரமாய்  குணம் கொண்ட வல்லூறொன்றின்  பார்வையில் சிக்கின அவள் கனவுகள் இறுதியில் நனைந்த கோழிக் […]

முரண்கோள் வெஸ்டாவை முதன்முதல் சுற்றிவரும் நாசாவின் விண்ணுளவி புலர்ச்சி

This entry is part 2 of 47 in the series 31 ஜூலை 2011

(NASA Space Probe Dawn is orbiting the Asteroid Vesta) (கட்டுரை 1) சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா நிலவினில் தடம் வைத்தார் நீல்ஸ் ஆர்ம்ஸ் டிராங் ! செவ்வாய்க் கோள் ஆராயத் தளவுளவி சிலவற்றை நாசாவும் ஈசாவும் உளவ இறக்கின ! வால்மீன் வயிற்றில் அடித்து தூசிகளை விண்ணில் ஆராய்ந்தார் நாசா விஞ்ஞானிகள் ! வால்மீனை விரட்டிச் சென்று தூசியைப் பற்றிக் காசினியில் இறக்கினார் ! வக்கிரக் கோள் ஒன்றின் மாதிரி […]

ஜெயலலிதா மீதான மக்களின் காழ்ப்புணர்ச்சி

This entry is part 25 of 47 in the series 31 ஜூலை 2011

கடந்த ஆட்சி மாற்றத்தை அடுத்து எல்லா பத்திரிக்கைகளிலும், மக்கள் புரட்சி! மக்கள் விழித்துக் கொண்டனர்! மக்கள் பாடம் கர்பித்துவிட்டனர்! என்றெல்லாம் பரபரப்பு கிளப்ப பட்டது. பீகார் மக்களை போல் தமிழ் நாட்டு மக்கள் இல்லை; அவர்கள் புத்திசாலிகள் என்று கூட பேசப் பட்டது. சரி தான். ஒரு பெரிய தவறு நிகழும் போது மக்கள் விழித்துக் கொள்ளத் தான் செய்கின்றனர். ஆனால், தமிழர்கள்,அரசியலை சரியாக புரிந்து கொண்டிருக்கின்றனரா என்ற கேள்வி, இருபது ஆடுகாலமாக எல்லோரின் மனதிலும் எழத் […]

361 டிகிரி – காலாண்டு சிற்றிதழ் – ஒரு அறிமுகம்

This entry is part 24 of 47 in the series 31 ஜூலை 2011

361 டிகிரி. வித்தியாசம் பெயரில் மட்டுமின்றி இதழின் அளவு கூட இதுவரை கண்டிராத வகையில் சற்றே பெரிய நோட்டு ஒன்றினைப் போல. ஒவ்வொரு படைப்புக்கும் சிரத்தை எடுத்து பிரத்தியேகமாக வரைந்து வாங்கப்பட்ட ஓவியங்கள், நேர்த்தியான அட்டை, ஸ்பரிசிக்க முடிகிற தலைப்பு, தரமான தாள்களில் சிறப்பான வடிவமைப்பு எனக் கையில் எடுத்த உடன் ஈர்க்கும் விடயங்கள் பல. அந்த ஈர்ப்பு வற்றிவிடாத வண்ணம் தொகுப்பட்டுள்ளது பொருளடக்கம். சொல்லப் போனால் நவீனத்துவம் நோக்கி நகரும் இலக்கியம் பயணப்பட வசதியாக விரிவாக்கப்பட்டதொரு […]

”முந்தானை முடிச்சு.”

This entry is part 23 of 47 in the series 31 ஜூலை 2011

வரும்போது மகளுக்கு பலகாரம் வாங்கியாங்க.. ராட்டையில் பட்டு கோர்த்தபடி சொன்னாள். சுற்றுலா வண்டி கும்மாளக்குரலில் குற்றாலத்துக்கு குளிக்கப்போனவனுக்கு சரியா காது கேக்கல போலும். அப்படியே எனக்கும் வயித்துவலி மாத்திரை ஏதாவது வேணும்.. தறியில் நெய்துகொண்டு கேட்டாள். சினிமா கொட்டகை சீட்டி ஒலியில் மறந்து விட்டான் போலும் பாவி மகளை பத்தாவது அனுப்ப பணத்துக்கு வழியில்ல.. சரிகை சிக்கெடுத்தவள் குரலை மேலத்தெரு ராக்கம்மா மடியில் கரைத்து விட்டான் போலும் ஓடிப்போன மகளை எங்காவது பார்த்தீங்களா.. புடவையை நீட்டி மடித்தவள் […]

குதிரே குதிரே ஜானானா

This entry is part 22 of 47 in the series 31 ஜூலை 2011

நாலு நாளாக நிலை கொள்ளாமல் தவித்தார் சங்கரன். மனம் அலைபாய்ந்து கொண்டிருந்தது. ஒன்றுமில்லை. வழக்கமான விசாரிப்புகளுக்காக மகளிடம் தொலைபேசியில் பேசிய போது தொலைபேசியை எடுத்துப் பேசிய பேரனின் குரல், தாத்தா எப்படி இருக்கே என்ற அந்த மழலைக் குரல் தொடர்ந்து அவர் காதில் ரீங்காரமிட்டு ஈர்த்தது. பேரனைப் பற்றி பேசிப் பேசி வாய் ஓயவில்லை. போய் பார்த்து விடுவது என்று தீர்மானித்தார் சங்கரன். பேரனை பார்த்து விட்டுத் தான் மறு வேலை. மனைவி பாரு தயங்கினாள். இது […]

என் அப்பாவுக்கும் ஒருகாதல் இருந்தது!

This entry is part 21 of 47 in the series 31 ஜூலை 2011

எஸ். அர்ஷியா அப்பாவுக்கும் எனக்குமிடையில் பாசத்தைத் தாண்டி நட்பு துளிர்விட்டது, எனது எட்டாவது வயதில்தான்! அப்போது அவர், தனது நாற்பதின் துவக்கத்தில் இருந்தார். அரசு வேலையை எழுதிக்கொடுத்துவிட்டு, சொந்தமாகத் தொழில் துவங்கும் முயற்சி யில், ஓடியபடி இருந்தார். கொஞ்சம் இறுக்கமான தருணம், அது. என்றாலும், சா¢யாக எட்டரை மணிக்கு இரவு உணவுக்காக எங்கிருந்தாலும் வீட்டுக்கு வந்துவிடுவார். அதை ஒரு வழக்கமாக வைத்திருந்தார். அப்பா, அம்மா, செல்வி அக்கா, சுந்தர் அண்ணா, நான் ஒன்றாகத்தான் இரவு உணவைச் சாப்பிடுவோம். […]