ஒரு தேன் சிட்டுக்கு காத்து நிற்கின்றேன் மலர்களின் மடியில். வாழ்க்கை என்ன நாம் அழைத்தால் வருவதா! அதன் மடியில் நாம்தான் மண்டியிடுகின்றோம். ஒவ்வொரு பொழுதும் ஒவ்வொரு கதைச்சொல்லும் அதில் ஆனந்தமும் வரும் அழுகையும் வரும் எங்கோ தூரத்தில் தெரியும் வெளிச்சம் சிலருக்கு. அருகே வரும் சிலருக்கு. தினம்தினம் எழுந்து தினம்தினம் விழுந்து பயிரிட வந்துள்ளோம். காத்துக்கிடக்கும் காடும் மலையும் வனமும். நீ சம்சாரியாகவும் போகலாம் சந்நியாசியாகவும் மாறலாம் எல்லாம் ஒரு பெண் கையில் சக்தியாக காத்துக்கிடக்கும் வாழ்க்கை. […]
பி.கே. சிவகுமார் பெரிய கட்டுரை எழுதும் மனநிலை பிற காரணங்களால் இல்லை. ஆதலால் thug life குறித்த சில விரைவான, சுருக்கமான குறிப்புகள். இவற்றைக் கூட எழுதியிருக்க மாட்டேன். ஆனால் படம் அளவுக்கதிகமாக, அநியாயமான எதிர்வினை விமர்சனம் பெறுகிறதோ என்ற கேள்வியால், சினிமாவின் ரசிகனாக, எழுத முயல்கிறேன். படம் எனக்குப் பிடித்திருந்தது. விக்ரம் 2 ஐயை விட எனக்குப் பிடித்திருந்தது. நான் மிஷன் இம்பாசிபள் வரிசை ஆங்கிலப் படங்களின் ரசிகன். அவற்றைத் திரையரங்கில் பார்த்திருக்கிறேன். அந்த வரிசையின் […]
ஆர் சீனிவாசன் மூன்று நிமிடங்கள். திகில் நிறைந்த மூன்று நிமிடங்கள். அம்மூன்று நிமிடங்களில் பல விஞ்ஞானிகளின், பொறியாளர்களின் கனவு நினைவாகலாம் அல்லது இதற்கு முன் நடந்ததைப்போலத் தோல்வியைத் தழுவலாம். மூன்றே நிமிடங்கள். விண்கலம் நிலவின் பரப்பிற்கு மேல் சுமார் ஏழு கிலோமீட்டர் தொலைவில் இருந்தபோது விண்வெளிவீரர்கள் குமார் மற்றும் குப்தா தங்கள் விண்வெளி உடைக்குள் பதட்டத்துடன் விண்கலத்தின் கணினியை நோக்கினர். அனைத்து அமைப்புகளும் சரியாகத்தான் இயங்கிக்கொண்டிருந்தன. “இறங்கும் செய்முறையைத் துவக்கலாம். வெற்றி கைகூடட்டும். நன்றி ” என […]
குரு அரவிந்தன் ஐரோப்பாவின் மிகப்பெரிய எரிமலையான எட்னா எரிமலை கடந்த திங்கட்கிழமை ஜூன் மாதம் 2 ஆம் திகதி மதியம் போல மீண்டும் வெடித்ததாக இத்தாலியின் தேசிய புவி இயற்பியல் மற்றும் எரிமலையியல் எட்னா ஆய்வகம் தெரிவித்துள்ளது. எரிமலை வெடித்தபோது பல கிலோ மீட்டர் தூரத்திற்குக் கரும்புகையோடு கலந்த தூசிகளும் கற்களும் பறந்ததால், அங்கிருந்த சுற்றுலாப் பயணிகள் பயந்து போயிருந்தனர். எந்த நேரமும் விமானப் போக்குவரத்து தடைப்படலாம் என்ற பயத்தில் சில சுற்றுலாப் பயணிகள் சிசிலித் தீவைவிட்டு […]
புரிபடாதவைகள் ஆயிரம் புரிந்தவைகள் சொற்பம் புரிந்தும் புரியாமலும் கடந்து கொண்டிருக்கிறோம் காதல் கொண்ட இரு உடல் எந்திரங்கள் விடுதலைக்கான யுத்தகளத்தில் நிற்கின்றன ஆழ்ந்த மானுடப் புரிதலை ஆயுதங்களாய் ஏந்தியிருக்கின்றன கனவு காண்பது மனசுக்கு நிம்மதி கவிதையில் கரைவது உயிருக்கு சந்தோஷம் கடும் வெயிலில் காலத்தைக் கடந்தாகணும் பறவை மனசுள் மாயக் கூண்டுகள் நிழலுள் தயங்கித் தயங்கி நுழைய எத்தனிக்கும் வெயில் பூவே இதயம் காலியாய் இருக்கிறது காதலாய் கசிந்துருகும் கனவாய் வாழ்வு நினைவுகள் சிறகடிக்கின்றன அம்புகளாய் துயரங்கள் […]
பொங்கும்அன்புநீருற்றாகநிற்காமல் இருந்ததுமனிதமெனவியாபித்து.அள்ளிச் சுவைத்ததில்மேவியநேசத்தைஅறியாமல்அடைத்துத் தாழிட்டவர்களைவெறுக்காமல்விரும்பச் சொல்கிறதுசான்றாக்கி மகிழ வைத்து.