Posted in

அம்மா

This entry is part 2 of 10 in the series 29 டிசம்பர் 2019

மனுநீதிச் சோழனாய்

அந்த மக்கட் தலைவன்

அவர் வீட்டில்

மனுக் கொடுக்க

மக்கள் கூட்டம்

ஒப்புதல் பெற

ஆவணங்களுடன்

அதிகாரிகள்

இதோ

மின்னல் ஒன்று

மண்ணுக்கு வந்ததுபோல்

அந்தத் தலைவன் வருகிறான்

அந்த வருகையால்

குடில் கோயிலாகிறது

வீட்டுக்குள்ளிருந்து

அம்மாவின் குரல்

‘எவ்வளவு பேரு

காத்துக்கிட்ருக்காங்க

எங்கடா போனே’                                

அமீதாம்மாள்

Series Navigationமுதல் வண்ணத்துப்பூச்சிசொல்வனம் இணையப் பத்திரிகையின் 213 ஆம் இதழ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *