ஆத்ம கீதங்கள் –15 காத்ரீனா காதலனுக்கு எழுதியது.. ! முடிந்தது நம் காதல்

This entry is part 1 of 24 in the series 8 பெப்ருவரி 2015

 

ஆங்கில மூலம் : எலிஸபெத் பிரௌனிங்

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

 

 

பதில் கிடையாது ! நீரூற்றின்

ஓசைப் பண்ணிசை

வாசல் முற்றத்தில் தனித் தொலிக்கும்;

பளிங்கு மேல் விழும் நீர்போல்

என் இதயம் வீழ்ந்திடும் தவித்து;

காதல் பெரு மூச்சு

சாதல் நோக்கிப் போகும் !

மரணம் முன்தூண்டும்

நமது காதல் வெற்றி பெற !

ஒளிவீசும் விழிகள்

வெளிப்படும் எப்போதும் !

 

நிச்சயம் தேடி வருவாயா ?

இச்சகம் விட்டு நான் நீங்கும் போது,

எங்கே ஒளிந்திருக்கும்

என்னினிய சுவைகள் எல்லாம் ?

அங்கே

உன் குரலோ

என் கனிவு மனப் படைப்போ  

எந்தக் கதவையும் திறக்காது !

அழுகுரல் எழுப்பிடு காதலனே !

முடிந்தது நம் காதல் !

அழுவாய் சைப்பிரஸ் மரத்தின் கீழே !

ஒளிமிகு விழிகள்

வெளிப்படும் எப்போதும் !

 

தேவதையர் கன்னி மாடத் தருகே

ஆலய மணி அடிக்கும் போது,

நடந்து செல்வாயா நீ ?

தேவதையர் கீழிறங்கி வரப்

பாடும் குழுவினர் இசைப் பாட்டை

நினைவில்

தேடிக் கொள்வாயா ?

ஆன்மீகப் பாப மன்னிப்பில்

காண்பேன் சொர்க்கம்,

உன் புன்னகை மின்னும் வரை !

மாசுகள் உள்ளதா இப்புவி ?

ஒளிமிகு விழிகள்

வெளிப்படா எப்போதும் ?

 +++++++

 

Series Navigationசீஅன் நகரம் -2 யுவான் சுவாங்
jeyabharathan

சி. ஜெயபாரதன், கனடா

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *