இன்று தனியனாய் …

This entry is part 8 of 9 in the series 10 ஜூலை 2022

 

 

 
      ஸ்ரீரங்கம் சௌரிராஜன்
 
குமார் கோபி
ராகுல் ஹரி
ரெங்கன் ரகுராம் ஸ்ரீராம்
பாபி அட்சயா எனப்
பல குழந்தைகளிடம்
நெருக்கமாகப் 
பழகியிருக்கிறான் அவன்
 
இப்போது எல்லா குழந்தைகளும்
வளர்ந்து
பெரியவர்களாகி 
எங்கெங்கோ இருக்கிறார்கள்
 
யாரையும்
அவன் மறக்கவில்லை
ஆனால் யாரும் அவனை
இப்போது நினைப்பதில்லை
 
குழந்தை உலகத்தில்
மகிழ்ச்சியில் திளைத்த
அந்தக் கணங்கள்
எங்கே ஓடி மறைந்தன ?
 
—- இன்று 
அவன் தனியாய்
அவர்களை
நினைத்துப் பார்க்கிறான்
அவர்கள்
குந்தைகளாகவே இருக்கிறார்கள் ! 
 
                         ++++++
Series Navigationஜன்னல்…படைப்புச் சுதந்திரமும் படைப்பாளிகள் நுண்ணுணர்வோடும் பொறுப்புணர்வோடும் இயங்கவேண்டிய அவசியமும்
author

ஸ்ரீரங்கம் சௌரிராஜன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *