மலஜலம் கழிக்க
வயல் வெளிப்பக்கமும்
ஊர் ஒதுக்குப் புறமும்
ஜனங்கள் போகும் ஊர்.
கங்குலில்
தெருவோரம்
உட்கார்ந்து எழும்
அடையாளம் தெரியாத
உருவங்கள்.
என்
பால்ய காலத்தில்
பழகிய வழி
ஊரில்
பள்ளிக்கூடம்
போய் வரும் வழி.
போய் வரும்
வழியோரமெல்லாம்
மலங்கள்
நிறைந்து கிடக்கும்.
தினம் தினம்
பள்ளி செல்லும் போது
மலத்துப்புரவு செய்யும்
ஒரு
பெருந் துயரப் பெண்ணைக்
கண்டு போவதுண்டு.
என் அம்மா
மோர் விற்கிறாள்
இவள் மலம் அள்ளுகிறாள்-
இப்படித்தான்
சின்னப்பயலான
எனது புரிதல்.
பன்றிகளை மேய்க்க
ஒத்தாசையாகப்
பாதியில்
படிப்பை நிறுத்திய
பால்ய நண்பனைப் பார்க்க
சேரிக்குச் சென்றது
சின்ன வயதில்.
அதற்குப் பின்
அவனைத் தேடி
சேரிக்குச் சென்றதேயில்லை.
உருத்தும்
இந்த நினைவுகளில்
ஒரு கணம்
உலராத மலமாய் நாறும்
என்னை
உணர்வேன்.
——————
- நினைவுகளின் சுவட்டில் – 94
- சென்னையில் கழிந்த முதல் ஒரு பகல்
- வாழ்வியல் வரலாற்றில் சிலபக்கங்கள் – 22
- மலைபேச்சு -செஞ்சி சொல்லும்கதை – 35
- மாமியார் வீடு
- கல்வியில் அரசியல் பகுதி – 2
- BAT MAN & BAD MAN பேட் மேனும், பேட்ட் மேனும்
- பிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் ! பெரு வெடிப்புக்கு முன்பே பிரபஞ்சத்தில் கருந்துளைகள் சில இருந்துள்ளன (கட்டுரை 81)
- பூசாரி ஆகலாம்,! அர்ச்சகராக முடியாது?.
- ‘பினிஸ் பண்ணனும்’
- பூமிதி…..
- மேடம் மோனிகாவின் வேடம் (Mrs. Warren’s Profession) நான்கு அங்க நாடகம் (இரண்டாம் அங்கம்) அங்கம் -2 பாகம் -4
- குடத்துக்குள் புயல்..!
- தஞ்சை பட்டறை செய்தி
- முள்வெளி அத்தியாயம் -18
- குற்றம்
- தாகூரின் கீதப் பாமாலை – 23 பிரிவுக் கவலை
- சிற்றிதழ் வானில் புதுப்புனல்
- உய்குர் இனக்கதைகள் (3)
- வாழ்நாள் தமிழ் இலக்கிய சாதனை விருது
- ஓரு கடிதத்தின் விலை!
- பதிவர் துளசி கோபால் அவர்களின் “என் செல்ல செல்வங்கள்” : புத்தக விமர்சனம்
- தில்லிகை
- கணினித்தமிழ் வேந்தர் மா.ஆண்டோ பீட்டர் அவர்களுக்கு ஒரு அஞ்சலி
- தாவரம் என் தாகம்
- நகர்வு
- பிறை நிலா
- உலராத மலம்
- மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம்
- தமிழில் எழுதப்படும் பகுத்தறிவு சார்ந்த வலைப்பதிவுகளைத் தொகுத்து, ” தமிழ் பகுத்தறிவாளர்கள்” என்ற தளத்தை நிறுவியுள்ளோம்.
- ஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் (Shakespeare’s Sonnets : 29)
- கற்பித்தல் – கலீல் கிப்ரான்
- பாரதியும் பட்டுக்கோட்டையாரும்(பகுதி-11)
- திருப்பதியில் நடைபெற்ற சாகித்ய அகாதெமியின் வடகிழக்கு மற்றும் தென்னிந்திய எழுத்தாளர்களின் சந்திப்பில் இடம் பெற்ற சில கவிதைகள்
- பஞ்சதந்திரம் தொடர் 53
- அப்படியோர் ஆசை!
- விஸ்வரூபம் பாகம் 2 – அத்தியாயம் தொண்ணூற்று ஒன்பது
sumaar 50 aandu kaala ninaivalaikalai thirumbi paarkka vaitha kaalsuvadukal.peyarukku yetraarbol azhagu varikal.vaazhththukkal.
50 aandu kalattu munnaal alaiththu sendru, kaaladi suvadukalai ninaikka vaitta varikal.”malak kaadu, malaik kaadu” ithuthaan enggal oor.vaazhththukkal.
Dear sir, Thank u very much; Regards
G>Alagarsamy