Posted in

என்னை நிலைநிறுத்த …

This entry is part 13 of 17 in the series 7 நவம்பர் 2021

 

 
ஸ்ரீரங்கம் சௌரிராஜன்
 
பின்னால் கிடக்கும்
செவ்வக வெளியில்
ஆழ்ந்த இருட்டு
ஆக்கிரமிக்கிறது
 
ஐந்தாறு 
அகல் விளக்குகளின் வெளிச்சம்
ஆறுதல் அளிக்கிறது
 
அவ்வப்போது சில
தீக்குச்சிகளின் உரசலில்
தற்காலிக வெளிச்சம்
மனம் நிரப்பும்
 
இழந்ததால்
இறந்தகாலமான
அற்புதக் கணங்கள்
மிதக்கும் இடங்களில்
மனம் லயிக்கிறது
 
உயிரின்
கரைந்த இம்மிகள் 
விரவி நிற்கும் பகுதியில்
என்னை நிலைநிறுத்த
கால்பாவ முடியாமல்
தவிக்கிறேன்.
 
 
 
 
Series Navigationகுருட்ஷேத்திரம் 29 (மண்ணின் மகாபுருஷர்  பீஷ்மர் உரைத்த கதை)எஸ். சாமிநாதன்  விருது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *