ஒரு கதை ஒரு கருத்து – பாரதியாரின் ஸ்வர்ண குமாரி

author
3 minutes, 51 seconds Read
This entry is part 4 of 15 in the series 13 டிசம்பர் 2020

 

அழகியசிங்கர்

            டிசம்பர் மாதம் 11ஆம் தேதி பாரதியாரின் பிறந்தநாள்.  இந்தப் பிறந்தநாளை ஒட்டி அவர் கதை ஒன்றை எடுத்துப் படிக்க வேண்டுமென்ற எண்ணம் ஏற்பட்டது.  ஸ்வர்ண குமாரி என்ற கதையை எடுத்துப் படித்தேன்.

            அவர் 42 கதைகள் எழுதி உள்ளார்.  அவர் கதைகள் படிப்பதற்கு எப்படி இருக்கிறது.  முதலில்  எளிமையாகச் சரளமாகப் படிக்க முடிகிறது.  

            பாரதி இந்தக் கதையை எப்படி ஆரம்பிக்கிறாரென்று பார்ப்போம்.  

            பெங்காளம் என்று கூறப்படும் வங்க தேசத்திலே, வாந்த்பூர்  (சாந்திர புரம்) என்ற கிராமத்தில் மனோரஞ்சன் பானர்ஜி என்ற ஒரு பிராமண வாலிபன் உண்டு.

            இப்படி ஒரு காதல் கதையைப் பாரதியார் விவரிக்கிறார்.  மனோரஞ்சிதன் சுந்தரமான ரூபமுடையவன்.  பார்ப்பதற்கு மன்மதனைப்போலியிருப்பான்.   தன்னோடு ஒத்த வாலிபர்கள் எல்லோராலும் அர்ஜ÷னன் என்று அழைக்கப்பட்டு வந்தான்.  

            அவனுக்கு வயது இருபத்தி மூன்றாகியிருந்த போதிலும், என்ன காரணத்தாலோ இன்னும் விவாகம் நடக்காமலிருந்தது.  இவனுக்கு ஏழு வயதாக இருக்கும் பொழுதே, இவன் அப்பா இறந்து விடுகிறார்.  அதனால் இவனுக்குத் திருமணம் ஆகாமல் தடைப்பட்டுப் போய்விட்டது.  தாய்க்கு இவன் ஒரே பிள்ளையாதலால், இவன் மீது மிகுந்த அருமை கொண்டவளாகி வீட்டில் இவன் வைத்ததுதான் சட்டம்.  இவன் சொன்ன சொல்லை மீற மாட்டாள்.  இந்தக் குடும்பத்தில் அதிக ஆஸ்தி இல்லாவிட்டாலும் உள்ள நிலத்தை விற்று பணம் எடுத்துக்கொண்டு கல்கத்தா போய் பரீட்சைகள் எழுதித் தேறி வர வேண்டுமென்ற இவன் எண்ணத்தின்படி இவனை அனுப்பி வைத்தாள்.

            இவன் தாயார் ரஞ்சனைப் பார்த்து எப்போது திருமணம் செய்து கொள்ளப் போகிறாய் என்று கேட்பாள்.  இவன் அதற்குப் பதில் சொல்ல மாட்டான்.  அந்தப் பேச்சே எடுக்காதே என்று அம்மாவை மிரட்டுவான். 

            ஆனால் அந்தரகத்திலே இவன் வடக்கு வீதி ஸ÷ர்யகாந்த பாபு என்ற பெருஞ் செல்வரின் குமாரத்தியான ஸ்வர்ணகுமாரியின் மீது மோகம் வைத்திருந்தான்.  இது அவன் அம்மாவிற்கும் தெரியும்.  ஆனால் தன் பையன் ஸ்வர்ண குமாரியை ஒருபோதும் விவாகம் செய்யக் கூடாது என்று நினைக்கிறாள்.  அதற்குக் காரணம் அந்தப் பெண் மிலேச்சனுடைய பெண்.  அவன் அந்தப் பெண்ணை திருமணம் செய்து கொள்வது அறிந்தால் இவனுடைய தாயார் தேட்ட மாத்திரத்திலேயே இறந்து விடுவாள்.   அதேபோல் அவளை தன் மகன் கட்டிக்கொள்வதைக் காட்டிலும் இறந்து போவது மேல் என்று நினைக்கிறாள்.

“           ஏன் அவன் தாய் அப்படி நினைக்கிறாள்?  

            ஸ்வர்ண குமாரியின் தந்தையாகிய÷ர்யகாந்த பாபு பிராமண குலத்திலே பிறந்தாலும் பிரமஸமாஜம் என்ற புதிய மார்க்கத்திலே சேர்ந்து கொண்டு விட்டார். 

            பிரம ஸமாஜத்தில் சேர்ந்தவருக்கு ஜாதி பேதம் இல்லை.  விக்ரகாராதனை கூடாது.  பெண்களும் ஆண்களும் சமானமாக ஒத்துப் பழகலாம் என்பதுபோல் நவீன கோட்பாடுகளைக் கொண்டிருப்பார்.

            அவர்கள் வீட்டு ஸ்திரீகள் பகிரங்கமாக வெளியே உலாவுவதும், கண்ட புருஷர்களுடன் சம்பாஷிப்பதும் பிழையில்லை என்று நடப்பவர்கள். 

            ஸ்வர்ண குமாரிக்கு இன்னும் விவாகமாகவில்லை.  மனோரஞ்சனின் தயாருக்குக் காதால் கேட்கக் கூடா வெறுப்பாக இருந்தது.  தன் பையன் அடங்காத காதல் கொண்டிருக்கிறானென்றும்  அதன் பொருட்டே மறு விவாகத்தில் விருப்பமில்லாதிருக்கிறானென்பதும் அவளுக்குத் தெரியும்.

            பாரதியார் இந்தக் கதையை ஒரு காதல் கதையாகக் கொண்டுபோகிறார்.  ஜாதி மாறுவதை கடுமையாகக் கருதுகிறார்கள்.  ஸ்வரண குமாரி மனோரஞசனுடைய வடிவம் என்று அகலாத சுந்திர விக்கிரமாகப் பதிந்து போய்விட்டது.

            இந்த இடத்தில் ஸ்வர்ண குமாரியின் அழகை வர்ணிக்கிறார் பாரதியார்.  எப்படி?  ‘இவளுடைய ரூப லாவண்யமோ சொல்லுந் தரமன்று.  கருமை நிறங் கொண்ட அமிருதத்தின் கடல்களென்று சொல்லத்தக்க இவளுடைய நேத்திரங்களும், முல்லை போன்ற புன்சிரிப்பும், மூக்கும் கன்னமும், நெற்றியும், ஸ்வர்ண மயமான சரீரமும் என்னவென்று சொல்வது?’ என்கிறார்.

            இந்த இடத்தில் ஒரு ஜோக் அடிக்கிறார் பாரதி.  சுகப்பிரம்மரிஷி ஸ்வர்ண குமரியைப் பார்த்த போதிலும் மயங்கிப் போய் விடுவார் என்கிறார்.

            ஸ்வரணகுமாரி அடிக்கடி மனோரஞ்சிதத்தைச் சந்தித்துக் கொண்டிருக்கிறாள்.  இருவரும் காதல் வயப்படுகிறார்கள்.  இதை அறிந்து அவள் அப்பா, ஹேமசந்திர பாபுவை விவாகம் செய்துகொள்ளச் சம்மதிக்கச் சொல்கிறார்.  இல்லாவிட்டால் என் வீட்டை விட்டு வெளியேற வேண்டுமென்று எச்சரிக்கிறார். 

            அவளுடன் ஹேமச்சந்திரா பாபுவை சந்திக்க ஏற்பாடு செய்கிறாள்.  தோட்டத்திலுள்ள பூஞ்சோலையில் 6 மணிக்கு.  அப்படிச் சந்திக்கும்போது அவளுடைய சம்மதத்தைத் தெரிவிக்கும்படி சொல்கிறார்.  

            வேறு வழியில்லை ஹேமசந்திரனைத்தான் திருமணம் செய்துகொள்ள வேண்டுமென்று விதி இருக்கிறது.  திருமணம் செய்துகொண்டு விஷம் தின்று உயிரை விடலாமென்று நினைத்துக் கொள்கிறான்.  

            மாலை 6 மணி.   ஸ்வர்ணகுமாரி தனியாக இருக்கிறாள்.  ஹேமசந்திரனைச் சந்திக்கத் தயாராக இருக்கிறாள்.  அவர்கள் இருவருக்கும் நடக்கும் உரையாடலைப் பாரதியார் எழுதியிருக்கிறார். 

            ஹேமசந்திரனைப் பார்த்து அவனை மணக்க தனக்குச் சம்மதமில்லை என்கிறாள்.  அப்பாவின் பலவந்தத்தின் பேரில் விவாகம் செய்து கொள்வதாகக் கூறுகிறாள். 

            அவளைத்தானே விவாகம் செய்து கொள்ளப் போகிறோமென்று தப்பாக நடந்துகொள்ளப் போகிறான்.

            கொடி மாடத்திற்குப் பின்னே புதரில் பதுங்கி நின்ற மனோரஞ்சனன் கையும் தடியுமாக வந்து ஹேமசந்திரனை பிடித்து வெளியே தள்ளி நையப் புடைத்தான்.  இந்தக் கலவரத்திலே தந்தையாகிய ஸ÷ர்யபாபுவும் வந்து விட்டான்.  இந்தச் சம்பவத்தைப் படிக்கும்போது தமிழ் சினிமாவில் வில்லன் கதாநாயகியைக் கற்பழிக்கும்போது எங்கிருந்தோ கதாநாயகன் தோன்றி கதாநாயகியைக் காப்பாற்றி விடுவான். அது மாதிரி தோன்றுகிறது.

            நம் குடும்பத்திற்குப் பெரிய பாதகம் இழக்க இருந்த பாதகனுக்கா நாம் பெண்ணை கொடுக்க இருந்தேன் என்று சூரியகாந்த பாபு நினைத்தான். 

            அவள் அப்பா மனோரஞ்சனனிடம் ஒன்றே ஒன்று சொல்கிறார்.  அவன் ஹிந்து மார்க்கத்தினின்றும் நீங்கிப் பிரமஸமாஜத்தில் சேர்ந்து கொள்ளும் பட்சத்தில், அவனுக்கு தன் பெண்ணைக் கொடுப்பதாகச் சொல்கிறார்.

            அவனுக்கோ தாயினிடத்து அன்பு ஒரு புறமும், அவனது ஸ்வர்ண குமாரியின் மீது மையல் மற்றொரு புறமாக இருக்கிறது. ஸவர்ணகுமாரியம் பிடிவாதமாக அவனைத் தவிர வேற யாரையும் விவாகம் செய்யாமலிருக்கத் தீர்மானித்தாய்.

            இப்படியே ஒன்றரை வருடம் ஆகிவிட்டது.  இப்படியிருக்க 1906ஆம் வருஷம் கல்கத்தாவிலே காளி பூஜை திருவிழா நடந்து கொண்டிருந்த (நவராத்திரி) காலத்திலே, ஸ்வர்ண குமாரி தனது வீட்டு மாடியிலே ஒரு பஞ்சணை மீது சாய்ந்து கொண்டு ஸந்தியா என்னும் தினசரி பத்திரிகை படித்துக் கொண்டிருந்தாள்.  அதில் திடீரென அவளது கண்களுக்குப் ஒரு குறிப்பு பட்டது.

            மனோரஞ்சித பானர்ஜி பிரம ஸமாஜத்தில் சேர்ந்து விட்டாரென்று.

            அவள் ஆனந்த பரவசத்திலே ஆழ்ந்து விட்டாள்.  பத்திரிகையிலே வேறு ஒரு இடத்தில் அவன் பெயர் தட்டுப்பட்டது. அதில் லோகமான்ய பால கங்காதர திலகருக்கு விரோதமாக சில வாலிபர்கள் மனோரஞ்சன் பானர்ஜியின் கீழ் கூட்டம் கூடியது என்று. 

            இதைக் கண்டவுடனேயே ஸ்வர்ணகுமாரிக்கு மனம் பதைத்து விட்டது.  குழந்தை முதல் பால கங்காதர திலகரைத் தெய்வம் போலக் கருதி வந்தாள்.  மனோரஞசனனிடமிருந்த அன்பைக் காட்டிலும் சுதேசத்தின் மீதுள்ள் அன்பு பதினாயிர மடங்கு வன்மையுடையது.  பாலகங்கதர திலகருக்கு விரோதமாக இருப்பவர்களைப் பக்கத்தில் சேர்க்க மாட்டார்.

            பொதுவாக நான் படித்த இரண்டாவது பாரதி கதைகளில் அவர் தேசத்தை ஒரு பகுதியாகக் கதையில் கொண்டு வருகிறார்.  தேச அபிமானம்தான் கதையில் முக்கிய பங்கு வகிக்கிறது.  இன்று கதை எழுதுபவர்கள்  இதுமாதிரியான தேசத்தில் நடக்கிற விஷயங்களை இணைப்பார்களா என்று தெரியவில்லை.  அப்படியே இணைத்தாலும் அவற்றைப் படிப்பதற்கு ஏதுவாக இருக்குமா என்பது தெரியவில்லை.

            தன் கண்போன்று இருந்த ஆசை மகன் ஹிந்து மதத்தை விட்டு விலகிப் போய் விட்டான் என்பதை அறிந்தவுடன் மனோரஞ்சனனுடைய அம்மா இறந்து விட்டாள்.  அந்த அளவிற்குத் தீவிர ஹிந்து வெறியாளராக அம்மா பாத்திரத்தை உருவாக்கியிருக்கிறார் பாரதி.

            அம்மா இறந்து போன செய்தியைக் கேட்டு அலறிக்கொண்டு சாந்த்பூருக்கு வருகிறான் மனோரஞ்சனன்.  தாயின் கிரியைகளையெல்லாம் ஹிந்து ஆசாரங்களின்படி ஒரு பந்துவின் மூலம் நிறைவேற்றுகிறான்.  ஸ்வர்ண குமாரியைப் பார்க்கச் செல்கிறான். 

            அவள் அவனுக்கு ஒருகடிதத்தை எழுதிவிட்டு காசிக்கு அவள் அத்தை வீட்டிற்குப் போய்விட்டாள்.  ஒரு வருடம் என்னைப் பார்க்க வராதே என்று எழுதியிருக்கிறாள்.

            ஸ்வஜனத் துரோகிகளின் கூட்டத்தில் சேர்ந்து விட்டதால் அவன் சவகாசமே வேண்டாமென்று ஒதுக்கி விடுகிறாள். அவன் திருந்தியபிறகுதான் பார்க்க விரும்புவதாகக்  கடிதத்தில் குறிப்பிடுகிறாள்.  அதுவரை அங்கே அவன் வந்து பாராதிருக்கும்படி பிரார்த்தனை செய்து கொள்கிறாள்.

            கடைசியில் பாரதியார் இப்படி முடிக்கிறார்.  இப்போது மனோரஞ்சனன் பூனாவிலே திலகரிடம் தேச பக்திப் பாடங்கள் படித்து வருகிறான் என்று.

            இந்தக் கதையைப் பற்றிப் பின்வருமாறு முடிவுக்கு வருகிறேன்.

            – இந்தக் கதை 19006 ஆம் ஆண்டில் எழுதியிருக்கலாமென்று தோன்றுகிறது.

            – கதை வெகு சுலபமாகப் புரியும்படி எழுதப்பட்டிருக்கிறது.

            – அந்தக் காலத்தில் ஜாதி அபிமானம் மரணம் வரை சென்று விடுகிறது.

            – கதாலுடன் தேசப்பக்தியை இணைக்கிறார் கதாசிரியர்.

            – பெரும்பாலும் பிராமண குடும்பச் சூழ்நிலையை மையப்படுத்தி எழுதப்பட்டிருக்கிறது. 

            – கதையில் சமஸ்கிருதச் சொற்கள் அதிகமாகக் காணப்படுகிறது. 

            இன்னும் அதிகமாகப் பாரதியார் கதைகளைப் படிக்கலாமென்று நினைக்கிறேன். 

Series Navigationஆல்- இன் – வொன் அலமேலுவரலாற்றில் வளவனூர்
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *