கம்பன் எழுதாத சீதாஞ்சலி 

This entry is part 5 of 17 in the series 5 ஜூன் 2022
Scene -6 Seetha left by Rama with Twins

கம்பன் எழுதாத சீதாஞ்சலி 

சி. ஜெயபாரதன், கனடா 

********************************

 

பத்தாயிரம் பைந்தமிழ்ப் பாக்களில் 

வில்லாதி வீரன் ராமனை,, 

உத்தம ராமனாய்,  

உன்னத ராமனாய் உயர்த்திய 

கம்பன் கை தளர்ந்து, 

எழுத்தாணி ,  

ஓலையில் 

எழுத மறுத்து அழுதது ! 

உச்சத் துயர் நிகழ்ச்சி  

சீதைக்கு  

இரண்டாம் வனவாசம் ! 

எதிர்பாரா 

இறுதிப் பயணம் ! 

கம்பன் எழுதாமல்  

கை விட்ட ராம கதை 

உத்திர காண்டம், 

சீதாஞ்சலி ! 

சிங்காதனம் ஏறிய ராமன் 

ஜெகம் புகழும் 

கம்ப ராமன் 

சீதா ராமன் அல்லன் ! 

தீக்குளித்த தூயவளை  

நம்பாதவன், 

மாற்றான்  

மடியில் வைக்கப் பட்டு 

வேற்றான்  

மனையில் சிறைப் பட்டவள்.  

கறை பட்ட சீதா  

பொது மக்கள் புகார்  ! 

பாஞ்சாலி சபதத் துக்கு  

கண்ணனால் 

கீதை சொல்லப் பட்டது. 

ஆனால், அபலை 

சீதாவுக்கு, 

கர்ப்பிணி மாதுக்கு, 

தீர்ப்பில்லா  

ஆயுள் தண்டனை ! 

இரண்டாம் வனவாசம் ! 

சீதாஞ்சலி ! 

********************************

*******************************

Series Navigationகாற்றுவெளி(கவிதைச் சிறப்பிதழ்)ஆனி 2022தொட்டனைத்து ஊறும்…
jeyabharathan

சி. ஜெயபாரதன், கனடா

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *