கவிதைகள்

author
0 minutes, 3 seconds Read
This entry is part 9 of 15 in the series 23 அக்டோபர் 2016
விழிப்பு - கவிதை

நம்மை சுற்றிலும் 
வசந்தங்கள் தாம்...

ஆயினும்,
நமது தடித்த தோல்கள்தாம்
நம்மை சலனப்படுத்த‌
வசந்தங்களை அனுமதிப்பதில்லை...

 - ஸ்ரீராம்

**************************************

கறை - கவிதை


நெருப்பு...
மரக்கட்டையை எரித்த கதையை
சுவற்றின் மீதே
எழுதிச்செல்கிறது...

 - ஸ்ரீராம்
**************************************
தன்னியல்பு - கவிதை


நான்
நேராக வந்த பாதையை
யாரோ குனிந்தபடியே கடந்திருக்கிறார்கள்..
யாரோ ஓடி கடந்த பாதையை
நான் தவழ்ந்து கடந்திருக்கிறேன்...
அந்த யாரோவுக்கு என்னையும்
என்னை அந்த யாரோவுக்கும்
தெரியாத வரையில்
எல்லாமும் 
தன்னியல்பில்...

  - ஸ்ரீராம்

****************************

வழி - கவிதை


எதுவோ ஒன்று
தடுக்கும் வரை
எல்லாமே வழிதான்
பார்வையற்றவனுக்கு...


 - ஸ்ரீராம்

********************************************

அடையாளம் - கவிதை


ஒவ்வொருமுறையும்
என்னை நான் 
கண்டடையும்போதும்
இந்த உலகம்
'அது நீ இல்லை' என்கிறது...


  - ஸ்ரீராம்
Series Navigationசோப்புதேவி – விமர்சனம்
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *