கவிதைகள்
அருணா சுப்ரமணியன்
தடயங்கள்…
நீலம் தெளித்த
வான்வெளியில்
சிறகசைத்து பறக்கும்
நினைவுகளோடு
மரங்கள் சூழ் மலைகளில்
நெளிந்து திரியும்
நீர்ச்சுனையில் நீந்தி
பாறைகளில் தெறித்து
வீழும் அருவியில்
எழும் அருவமாய்
அத்துவானத்தில்
அலைகிறேன்
தடயங்களை
அழித்துச் சென்ற
விரல்களின்
தடங்களைத் தேடி…
**************************
அழையா விருந்தாளி..
அழைப்புமணி அழுத்தவில்லை
அனுமதி கோரவில்லை
தாழிட்ட கதவை மீறி
எப்படியோ உள்நுழைந்து
ஆக்ரமித்து கொள்கின்றன
யாருமற்ற தனிமையில்
தினமும் என்
தூக்கத்தை துரத்திடும்
கவிதைகள்!!
****************************** **
யாருமற்ற…
இவ்விரவு மிகவும்
அச்சுறுத்துகிறது..
அறையின் மறுபாதியில்
வராத குறட்டை ஒலி
தூக்கத்தின் நடுவே
மேலே விழாத
பிஞ்சுக் கால்கள்
ஓயாமல் சுழலும்
காற்றாடியின் ஓசை
எதுவுமற்ற
நிசப்தத்தின்
பேரிரைச்சலில்
நித்திரையும்
பயந்து விலகிவிடுகிறது…
- இயற்கையின் ஊடே சமூகப் பயணம்
- வேண்டாம் அந்த முரட்டுப் பெண்! 20
- தொடுவானம் 177. தோழியான காதலி.
- ஒரு சொட்டுக் கண்ணீர்
- சொல்லாத சொற்கள்
- அதிகாரம்
- ”மஞ்சள்” நாடகம்
- English translation in poetical genre of Avvaiyaar’s poems
- கவிதைகள்
- உமர் கயாம் ஈரடிப் பாக்கள்
- ‘நீங்காத நினைவுகள்’ சிறுகதைத் தொகுப்பு வெளியீடு
- மொழிவது சுகம் 8ஜூலை 2017
- நூல்கள், குறும்படம் அறிமுகம் : கனவு இலக்கிய வட்டத்தின் ஜீலை மாதக்கூட்டத்தில்
- கவிதை
- ‘மிளகாய் மெட்டி’ ஆசிரியர் : அகிலா அருகாமை உறவுகளின் வாழ்வு..
- கிரீன்லாந்தின் பேரளவு பனியுருக்கம் ஆண்டுக்கு 25 பில்லியன் டன் என்று நாசா கணக்கிடுகிறது. கடல்நீர் மட்டம் உயர்ந்து விரைவாகச் சூடேறுகிறது.