கவிதைகள்

This entry is part 7 of 9 in the series 31 மே 2020

கரோனா 

ஸிந்துஜா 

              1

எலிகள்

குதித்து விளையாடுகின்றன

தெருவில்.

வீட்டு வளைக்குள்

நாம்.

               2

பசும்புல் தரை.

பச்சைச் செடி, கொடி, மரம்.

முத்தமிடும் சுத்தக் காற்று.

இரைச்சலற்ற தெரு.

முற்றத்திலும் திண்ணையிலும்

உரையாடும் குரல்கள்.

இழந்தவை இவையென                 

நினைத்தவை அனைத்தையும்

திரும்பக்  கொடுத்துவிட்டு

இழக்க முடியாததை

எடுத்துச் சென்றது.

                 3  

சொந்த நாட்டினில்

இருந்த இடத்தை விட்டுப்

பிறந்த இடத்துக்கு

ஓடிய 

சுதேச விதேசிகள்.

Series Navigationநாசா ஸ்பேஸ்X பால்கன் 9 ராக்கெட் விண்சிமிழ் இரு விமானிகள் ஏந்தி முதன் முதல் அகில விண்வெளி நிலையமுடன் இணைப்பு.வெகுண்ட உள்ளங்கள் – 1
author

ஸிந்துஜா

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *