author

விலை 

This entry is part 3 of 6 in the series 9 ஜூலை 2023

ஸிந்துஜா  ‘பதினோரு மணி ஆகி விட்டதே, இன்னும் இந்தப் பெண் வந்து சேரவில்லையே’ என்று ஜானகிராமன் பாதிக் கவலையுடனும் பாதிக் கோபத்துடனும் பால்கனி அருகே வந்த போது கீழே கார் வந்து நிற்கும் சத்தம் கேட்டது. கதவைத் திறந்து வெளியே வந்தாள் சாயா. அவர் பார்த்துக் கொண்டிருக்கும் போதே அவளருகே இருவர் வந்து நின்றனர்.  சாயா தங்கள் வீட்டை அவர்களிடம் காண்பிப்பதும் அவர்கள் அவளிடம் ஏதோ கூறி விட்டுச் சென்றதும் அவர் கவனத்தில் விழுந்தது. யார் அவர்கள்? எதற்காக இந்த நேரத்தில் வந்து சாயாவைப் பார்த்து விட்டுப் […]

பசித்த போது 

This entry is part 2 of 13 in the series 2 ஜூலை 2023

ஸிந்துஜா  மஞ்சுவும் ரகோவும் பள்ளிக்கூட வாசலில் நின்று கொண்டிருந்தார்கள். அவர்கள் இருவரும் ஒரே ஸ்கூலில்  வெவ்வேறு   செக்ஷன்களில் படித்தாலும் ஒரே தெருவில் குடியிருந்ததால் பள்ளிக்கு வந்து போக இருவரின் பெற்றோரும் சேர்ந்து ஒரே ஆட்டோவை அமர்த்தியிருந் தார்கள். ஸ்கூல் விடுவதற்கு ஐந்து நிமிஷம் முன் அல்லது பின் ஆட்டோக்காரர் சையது வந்து விடுவார். இன்று ஸ்கூல் விட்டுக் கால்மணிக்கும் மேல் ஆகப் போகிறது. இன்னும் அவர் வரவில்லை. மஞ்சுவுக்குப் பசியில் உயிர் போவது போலிருந்தது. இன்று மத்தி யானத்துக்கு சப்பாத்தி சப்ஜி பண்ணி டிபன் பாக்சில் அவன் […]

பாடம்

This entry is part 11 of 19 in the series 25 ஜூன் 2023

ஸிந்துஜா  சோணமுத்து நடைப்பயிற்சிக்கான உடைகளை அணிந்து கொண்டு வாசல் கதவைத் திறந்தான். அவன் அணிந்திருக்கும் உல்லன் உடைகள் தன்னைத் தாக்குப் பிடிக்குமா என்று கேட்பதை போலச் சில்லென்று மார்கழிக் குளிர்க் காற்று உடலில் பாய்ந்து பரவியது. அவன் நிலைப்படியருகே நின்று தெருவின் இரு முனைகளின் மீதும் பார்வையைச் செலுத்தினான். குளிருக்குப் பயந்து தெருவே கல்லென்றிருந்தது. தெருவிளக்குத் தூண் களிலிருந்து கொட்டிய மஞ்சள் வெளிச்சம் தரையைக் கூடத் தூங்கப் பண்ணி விட்டது போல அவ்வளவு ஆழ்ந்த நிசப்தம். இந்த ஊரே எட்டு மணிக்கு எழுந்திருக்கும் ஊர். அதிகாலையில் […]

திரை

This entry is part 3 of 9 in the series 18 ஜூன் 2023

ஸிந்துஜா   காசி ஐயாவின் வீட்டை அடைந்த போது மணி எட்டாகி விட்டது. அவரைப் பார்த்து, வந்த காரியம் பங்கமெதுவுமில்லாமல் நடந்து விட்டால், வீட்டுக்குப் போய் அம்மாவைப் பார்த்து விட்டு கிரவுண்டுக்கு ஓட வேண்டும். ஒன்பது மணிக்குள் அங்கு நிற்காவிட்டால் அவன் இடத்தைக் கபளீகரம் செய்யக் காத்திருக்கும் முத்துசாமியை கேப்டன் எடுத்துக் கொண்டு விடுவான். மறுபடியும் சான்ஸ் கிடைக்க கேப்டனின் காலில் எவ்வளவு தடவை விழ வேண்டும் என்று அந்தக் கேப்டனுக்கே தெரியாது.அவன் ஆல்ரவுண்டராக நன்றாக விளையாடுவதால் கேப்டனாகி விட்டான். காசிக்கு ரொம்ப […]

பார்வை 

This entry is part 2 of 11 in the series 11 ஜூன் 2023

ஸிந்துஜா  கமர்ஷியல் ஸ்ட்ரீட்டில் பகத்ராமிலிருந்து இனிப்பும் காரமுமாக இரண்டு பைகளை வாங்கிக் கொண்டு தெருவில் கால் வைத்த போது ‘ஏய் குரு, நீ எங்கே இந்தப் பக்கம்?” என்ற குரலைக் கேட்டு அருண் திரும்பிப்பார்த்தான்.  நரசிம். அவன் கையிலும் இரண்டு பைகள் தொங்கிக் கொண்டிருந்தன. அருண் பதிலளிப்பதற்கு முன்பே நரசிம்  “எங்கே நீ இவ்வளவு தூரம்?” என்று கேட்டான்.  “நகைக்காரத் தெருவிலே அம்மாவோட வேலை கொஞ்சம் இருந்தது. அவள் அலைய வாண்டாமேன்னு நா வந்தேன். சரி இவ்வளவு தூரம் வந்தது  வந்தோம், பகத்ராம்லே அம்மாக்குப் […]

கேட்டது

This entry is part 5 of 9 in the series 4 ஜூன் 2023

ஸிந்துஜா ஹால் ஒரே களேபரமாக இருந்தது. அப்படி ஒரு பேச்சும், சிரிப்புமாகச்சத்தம். இன்று காலைதான் சேது துபாயிலிருந்து வந்தான். வரும் போதேஇந்த இரைச்சலையும் கூட்டிக் கொண்டு வந்து விட்டான். அவன் யானையாகவும் வீடு வெங்கலக்கடையுமாகவும் மாறி விட்ட தருணம் என்று கௌசி நினைத்தாள். ஹால் பக்கம் போக விடாமல் அவளைச்சமையல் உள் கட்டிப் போட்டிருந்தது. சேதுவைப் பார்க்க வந்திருந்த கௌசியின் சொந்தக்காரர்கள், அவள் கணவன் சாயிராமின் உறவு ஜனம் என்கிற கும்பலுக்குக் காப்பி டிபன் கடை முடிந்தது. […]

வேவு

This entry is part 8 of 14 in the series 28 மே 2023

ஸிந்துஜா  அம்புஜம் பஸ்ஸிலிருந்து இறங்கிக் கைக்கடிகாரத்தைப் பார்த்தாள். ஒன்பதரை அடிக்க இன்னும் பத்து நிமிஷம் இருந்தது. வீட்டை விட்டுக்  கிளம்பும் போது அன்று நிச்சயம் பஸ் கிடைக்காது. ஒன்று தாமதமாகப் போய்த் திட்டு வாங்க வேண்டும் அல்லது ஆட்டோவுக்குத்  தண்டம் அழுது போக வேண்டும் என்று நினைத்துதான் விறுவிறுவென்று பஸ் ஸ்டாப்பை நோக்கி நடந்தாள். காலில் போட்டிருந்த செருப்பு பல விழுப்புண்களைக் கொண்டிருந்ததால் ரொம்பவும் வேகமாகவும் நடக்க முடியவில்லை. ஆனால் அன்று கடவுளுக்கு அவள் மீது பிரியம் வந்திருக்க வேண்டும். சற்றுத் […]

சகி

This entry is part 8 of 12 in the series 21 மே 2023

ஸிந்துஜா சாந்தி எல்லாச் சத்தங்களையும் கேட்டுக் கொண்டு படுத்திருந்தாள். முன்பு படுக்கும் போது போட்டுக் கொள்வதற்கு என்றிருந்த பாயும் கிழிந்து விட்டதால் வெறும் தரையில் படுத்துக் கொண்டிருந்தாள். மண் தரையில் ஊர்ந்து சென்ற எறும்பு ஒன்று அவள் காலைப் பதம் பார்த்து விட்டு நழுவியது. அந்த ஊசிச் சுருக்கின் வலியில் அவள் காலை இழுத்துக் கொண்டு சேலையால் பாதம் வரை தெரியாமல் மூடிக் கொண்டாள். வெளியில் படுத்திருந்த கறுப்பன் உள்ளே வந்து சுற்றிப் பார்த்து விட்டு அவள் […]

இடைவெளி 

This entry is part 10 of 12 in the series 14 மே 2023

ஸிந்துஜா  எதிராஜ் பரீட்சை முடிந்து ஒரு வார லீவில் ஊருக்கு வந்திருந்தான். வந்தது முதல் வீட்டில் கால் தரிக்கவில்லை என்று  கனகவல்லி   கணவனிடம் புகார் செய்தாள். முதல் நாள் ‘பிரென்ட்சோட ஓட்டல்ல சாப்பிட்டு விட்டு வந்தேன்’ என்று அவனது அம்மாவின் வயிற்றெ ரிச்சலைக் கொட்டிக் கொண்டான். அதனால் அவன் ஊருக்குத் திரும்பிப் போகும் வரை எல்லா வேளையும் வீட்டில்தான் சாப்பிட வேண்டும் என்று அவனது அப்பா சிவகுரு உத்திரவு போட்டு விட்டார். காலையில் டிபன் சாப்பிட்டு விட்டு […]

செருப்பு

This entry is part 9 of 9 in the series 7 மே 2023

அவளைத் தேடி வந்த சுகந்தி “ஏன் என்னமோ போல இருக்கீங்க?” என்று வசந்தாவிடம் கேட்டாள். “இல்லியே. ஐம் கொயட் ஆல்ரைட்” என்று சிரித்தாள். உண்மையை மறைக்க வல்ல சிரிப்பைத் தான் சிந்தவில்லை என்று அவளுக்குத் தோன்றியதை மறைக்கும் வண்ணம் “கலியாணம்னு கேள்விப் பட்டேன். கங்கிராட்ஸ்” என்றாள்.  சுகந்தி “அதுக்குத்தான் வந்தேன்” என்றபடி கைப்பையைத் திறந்து மஞ்சள் குங்குமம் தடவிய ஒரு கவரை எடுத்து “மேரேஜுக்கு அவசியம் நீங்க வரணும்”  என்று சொல்லிக் கொடுத்தாள்.  “நிச்சயமா” என்று அவளுடன் கைகுலுக்கி விட்டு “என்னிக்கு?” என்றபடி பத்திரிக்கையைப் பிரித்தாள் “அடுத்த மாசம் ஆறாந் தேதி. […]