காதலனின் காதல் வரிகள்

This entry is part 8 of 9 in the series 27 ஆகஸ்ட் 2017

 

மூலம் : பீட்டில்ஸ் பாடகர்

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

 +++++++++

உன் கண்ணுக்குள் நோக்கும்

ஒவ்வொரு தருணமும் காண்கிறேன்,

அங்கோர் சொர்க்க புரி

உள்ளதை !

அங்கு நான் பார்த்தால்

காதலனின் காதல் தென்படும் !

அவரும் காண்பர் ஒருநாள் காதல்

துவக்க காலத்தை !

உன்னித யத்தில்

ஆழமாய்ப் பதிந்து உள்ளது

என் இருப்பு !

காண்பேன் உன் இதயத்தில்

காதலனின் காதலை !

முன்பதை நான் ஒருமுறைக் கூறினும்,

பன்முறைக் கூறுவேன்,

மென்மேலும் நான் கூறுவேன் !

நீ என்னை நேசிப்பதை

நிச்சயமாய் நான் நம்புவதால்,

இன்று முதல் அறிந்து கொண்டேன்,

வழிப் பாதையில்

நீ என்னை நோக்கும் போது

காதலிப்பதாய் நீ சொல்லும் போது

காண்கிறேன்.

மழை பெய்தால் என்ன ?

கவலைப் படேன் !

உன்னிதய ஆழத்திலே நான்

என்றும்

நிலைத்தி ருப்பேன் !

 

++++++++++++++++++++++++++++

Series Navigationசுகிர்தராணி கவிதைகளில் இயற்கை கூறுகள்சுதந்திரம்
jeyabharathan

சி. ஜெயபாரதன், கனடா

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *