ஜென்

This entry is part 11 of 43 in the series 17 ஜூன் 2012

 

ஜென் என்றால் என்ன?
இப்படி கேள்வி கேடபதே ஜென்.
கேள்வியே இல்லாத போது
கேள்வியைத் தேடும் பதில் ஜென்.

கடவுள் பற்றி
தியானம் செய்யும் வகுப்பில்
முதலில் உட்கார்வது கடவுள்.
வகுப்பை துவக்குவது ஜென்.

பிற‌ந்து தான்
வாழ்க்கையை ப‌டிக்க‌ வேண்டும்.
இற‌ந்து தான்
வாழ்க்கைக்கு கோடைவிடுமுறை.

அடுத்த‌வ‌குப்பு துவ‌ங்கும்போது
புத்த‌க‌மும் புதிது.
மாண‌வ‌னும் புதிது.
ஆசிரிய‌ர் ம‌ட்டும் அதே ஜென்.

ஜென் ஒரு புதிர்.
ஜென்னை அவிழ்ப்ப‌தும்
இன்னொரு புதிர்.
ம‌று ஜென்ம‌ம் உண்டு.
அதுவும் இந்த‌ ஜென்ம‌த்தில் தான்
உண்டு.
அதுவும் “ஜென்”ம‌ம் தான்.

ஞான‌ம் ஒவ்வொரு த‌ட‌வையும்
தோலுரிக்கிற‌து.
அதுவும் ஜென்ம‌மே
இந்த‌ ஜென்ம‌த்தின் க‌ருப்பை
அறிவும் சிந்த‌னையும்.

வ‌ழியை மைல்க‌ல்க‌ளில்
சொல்வ‌து புத்தியின் அடையாள‌ம்.
மைல்க‌ல்க‌ளை பிடுங்கியெறிந்து விட்டு
வ‌ழியை தேட‌ச்சொல்வ‌து ஜென்.

க‌ண்க‌ளை மூடுவ‌து அல்ல‌ தியான‌ம்.
க‌ண்க‌ளை திற‌ந்து வைத்து
பார்வையை மூடுவ‌து தியான‌ம்.
காட்சிப்பொருள‌ல்ல‌ ஜென்.
காட்சியின் பொருள் ஜென்.

ம‌னம் ஊசிமுனையில்
க‌ழுவேற்ற‌ப்ப‌டும்போது
ஆகாய‌த்தில் முக‌ம் துடைக்க‌ச் சொல்வ‌து
ஜென்.

ஆசை முத்த‌ங்க‌ளின் ருசி கேட்கும்போது
அங்கு சிக்கி முக்கிக்க‌ல் ஜென்.
தீக்குள் விர‌ல் வைத்து தீண்டி
ந‌ந்த‌ லாலாவை சுவைக்கும்போது
தீயின் லாலி பாப் ஜென்.

ஜென்
எது?
ஜென்
யார்?
ஜென்
எங்கே?
ஜென்
எத‌ற்கு?

ஜென் ஒரு ஜ‌ன்ன‌ல்.
இங்கிருந்து மூட‌ல‌ம் திற‌க்க‌லாம்.
அங்கிருந்து மூட‌லாம் திற‌க்க‌லாம்.
ஆத்திக‌ன் திற‌ந்தால் நாத்திக‌ம் தெரிவான்.
நாத்திக‌ன் திற‌ந்தால் ஆத்திக‌ன் தெரிவான்.

எல்லோரும் பாயை சுருட்டி ம‌ட‌க்கி
எடுத்துக்கொண்டு போவார்க‌ள்.
உட்கார்ந்து தியான‌ம் செய்ய‌.
எல்லோரும் பாயை சுருட்டி ம‌ட‌க்கி
எடுத்துக்கொண்டு வ‌ந்து விடுவார்க‌ள்.

சுருண்டு ம‌ட‌ங்கி விரிந்து
சுருண்டு ம‌ட‌ங்கி விரிந்து
தியான‌ம் செய்தது
அந்த‌ பாய் ம‌ட்டுமே.
அந்த‌ பாய் ம‌ட்டுமே ஜென்.

த‌ய‌வு செய்து வீசிஎறியுங்க‌ள்
ஜென் ப‌ற்றிய‌ புத்த‌க‌ம் ஒன்றை
வான‌த்திற்கு.
க‌ட‌வுள்க‌ள் விண்ண‌ப்பித்திருக்கிறார்க‌ள்.

=========================================ருத்ரா

Series Navigationசைத்ரா செய்த தீர்மானம்ருத்ராவின் க‌விதைக‌ள்
author

ருத்ரா

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *