டி.கே.துரைசாமியை படியுங்கள் !

This entry is part 4 of 13 in the series 28 பெப்ருவரி 2016

நேதாஜிதாசன்

ராமச்சந்திரனா என கேட்பார்
எந்த ராமசந்திரன் என்றும் கேட்பார்
சாவிலும் சுகம் உண்டு என்பார்
சுசிலா அழகு என்பார்
அது ஏன் என்றும் தெரியவில்லை என்பார்
இந்த மனதை வைத்து எதுவும் செய்யமுடியாது என்பார்
தனிமையில் தனிமையோடு தான்
இருந்தார்
மஞ்சள் நிற பூனையை பற்றி சொல்வார்
நினைவுப்பாதையில் நிழல் பட வாக்குமூலம் சொல்லி நாயோடு சென்றவர்
அவர் இப்போது இல்லை
இருந்தால் ஏன் நான் இல்லை
என கேட்டிருப்பார்
தயவு செய்து நகுலனை விட்டுவிடுங்கள்
நவீனனை பேசவிடுங்கள்
டி.கே.துரைசாமியை படியுங்கள்
திருமதி.சுசிலாவை விட்டுவிடுங்கள்
கோட்ஸ்டாண்ட் தொங்கி கொண்டிருக்கிறது
மூன்று ஒன்று இரண்டுக்கு அப்புறம் இருக்கிறது
தயவு செய்து நகுலனை விட்டுவிடுங்கள்
நவீனனை பேசவிடுங்கள்

Series Navigationஇன்னா இன்னுரை!சாமானியனின் கூச்சல்

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *