மூலம் : இரவீந்தரநாத் தாகூர்
தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா
பாசான நீர்க்கொடி போன்ற எனது
பாடல்கள்  அலை வெள்ள அடிப்பில்
பாதை தவறி எப்போதும்
திசை மாறிப் போகும் !
நங்கூரம் இல்லை அவற்றுக்கு !
ஆதார மற்ற காற்றிலே அவை ஏன்
ஆடி வருகின்றன  ?  அவை ஏன்
இடம் மாறிப் போகின்றன,
தடம் ஏதும் விடாது
தானியம் ஏதும் விளையாது ?
எம்முயற்சியும்  இல்லை  அவற்றுக்கு !
ஒன்றைக் குறிவைத்து போகும்
உள்ளோட்டம்  இல்லை !
எவ்விதப் பந்த மில்லை அவற்றில் !  ஆஹா
எந்த விதப் பற்று மில்லை !
பற்றில்லாத அவை,  ஒருவரிடம்
பற்றில்லாமல் செய்து விடுபவை !
இல்லமற்ற வாய்மொழி வழியில்
துள்ளிக் கொந்தளிக்கும்
புறக்கணிப்பு
வெள்ளப் போக்கில் !
+++++++++++++++++++++++++
பாட்டு : 5  தாகூர்  61 வயதினராய் இருந்த போது  1923 பிப்ரவரி 12 இல்  பழைய 15 ஆம் உணர்ச்சிப் பாடலை வேறு விதமாக பாலகச் சேமிப்புக் காகச்  சாந்திநிகேதனத்தில் எழுதியது.
+++++++++++++++++++++++++
Source
1. Of  Love, Nature and Devotion Selected Songs of Rabindranath Tagore Oxford University Press, Translated from Bengali & Introduced By : Kalpana Bardhan
2. A Tagore Testament,
Translated From Bengali By Indu Dutt
Jaico Publishing House (1989)
121 Mahatma Gandhi Road,
Mombai : 400023
*********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com]  December 5 , 2012
- சந்திரனில் விவசாயம் எப்படி நடக்கலாம் என்று யூகம் தரும் இயந்திர விவசாயப் பண்ணைகள்
 - மலேசிய தான் ஸ்ரீ சோமா அறவாரியத்தின் அனைத்துலகப் புத்தகப் பரிசினை இலங்கை அறிஞர் மு.பொன்னம்பலம் வென்றார்
 - மூன்று பேர் மூன்று காதல்
 - மதிப்பும் வீரமும்
 - ‘நான் ரசித்த முன்னுரைகளிலிருந்து……………… 8. தி.ஜ.ரங்கநாதன் – ஆஹா ஊகூ
 - அரசன் சார்ந்த அறநெறி / இல்லற நெறி – (இராமாயண ராமர் பற்றி)
 - காளை மேய்த்தல்(Ox Herding)- பத்து ஜென் விளக்கப் படங்கள்
 - வெளி
 - கண்ணீர்ப் பனித்துளி நான்
 - தாகூரின் கீதப் பாமாலை – 43 சதுப்பு நிலப் பாடல்கள்
 - ஒருவர் சுயத்தனம் பற்றி எனது பாடல் -1 (1819-1892) (புல்லின் இலைகள் -1)
 - நினைவுகளின் சுவட்டில் (105)
 - சந்திப்பு
 - வாழ்வியல் வரலாற்றில் சிலபக்கங்கள் – 39
 - மேடம் மோனிகாவின் வேடம் (Mrs. Warren’s Profession) நான்கு அங்க நாடகம் அங்கம் -4 பாகம் -6
 - பி.ஜி.சம்பத்தின் “ அவன் நானல்ல ( மலையாளக்கதை ) – ஒரு பார்வை
 - 22 ஃபீமல் கோட்டயம் ( மலையாளம் )
 - நம்பிக்கை ஒளி! (10)
 - சீமைத் தரகர்களும் ஊமை இந்தியர்களும்
 - வந்த வழி-
 - பாகிஸ்தானில் பாதுகாப்பற்ற கருக்கலைப்பால் நிகழும் மரணங்கள்
 - வேள்வெடுத்தல் (வேவு எடுத்தல்) என்னும் நகரத்தார் திருமண நடைமுறை
 - ஆத்ம சோதனை
 - உன்னை போல் ஒருவன், முசுலிம்களுக்கு எதிரான படமில்லை? – 1
 - பூகோளம் சூடேறி ஆர்க்டிக் பனிப் பாறைகள் உருகி கடல் வெப்பம், மட்டம் உயர்வு.
 - அக்னிப்பிரவேசம் -13