தாகூரின் கீதப் பாமாலை – 85 அந்தி மங்கிடும் வேளை .. !

This entry is part 15 of 31 in the series 13 அக்டோபர் 2013

 

 Tagore

மூலம் : இரவீந்தரநாத் தாகூர்

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா.

 


 அந்தி மயங்கும் ஆழ்ந்த இருட்டில்

அன்றைய தினம் நீ ஏன்

விலகிச் சென்றாய் தயங்கிக் கொண்டு ?

வாசற் கதவைக் கடக்கும் போது

ஏதோ நினைத்து முகம்

திருப்பினாய் !

உள்ளத்தில் இருந்த தென்ன ?

ஓரக் கண்ணில் காட்டி

விசித்திர மாய்ப் போனாய்

சிரித்துக் கொண்டு !

இதயம் நடுங்கி,

இங்கே அமர்ந் துள்ளேன் நான்

சிந்தித்துக் கொண்டு.

நீ இருப்பதோ

வெகு தூர உலகில் !

விண்ணிலே சீரான அணிவகுப்பில்

பறந்து போகும்

கொக்கினக் கூட்டங்கள் !

என் உடல் வேதனை அவற்றுக்குத்

துணை அளிக்கும்.

உன்னை நான் கேட்கப் போவது

ஒருமுறைதான் !

நீங்கும் போது

நீ யெனக்கு என்ன வென்று

சொல்ல வில்லை,

மழையில் மூழ்கிய

மல்லிகைப் பூக்களின் உள்ளோட்ட

நறுமணம்

நீடித்ததா வென்று !

++++++++++++++++++++++++++++++

பாட்டு : 277 1937 ஆண்டு மத்திமத்தில் தாகூர் 76 வயதினராய் இருந்த போது புத்தாண்டுப் பிறப்புக் கொண்டாட்டத்துக்குச் சாந்தி நிகேதனத்தில் எழுதப் பட்டது.

++++++++++++++++++++++++++++

Source

1. Of Love, Nature and Devotion Selected Songs of Rabindranath Tagore Oxford University Press, Translated from Bengali & Introduced By : Kalpana Bardhan

2. A Tagore Testament,

Translated From Bengali By Indu Dutt

Jaico Publishing House (1989)

121 Mahatma Gandhi Road,

Mombai : 400023

*********************

S. Jayabarathan [jayabarathans@gmail.com] October 9 , 2013

http://jayabarathan.wordpress.com/

Series Navigationஸ்ரீ கிருஷ்ண சரித்திரம் – அத்தியாயம் 5 பிருந்தாவன லீலைகளின் முடிவு.கட்டாய வோட்டு -மக்கள் ஆட்சி அல்ல சர்வாதிகாரம்
jeyabharathan

சி. ஜெயபாரதன், கனடா

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *