நரதிரவங்கள்
பா.சேதுமாதவன், திருச்சி.
இரு சக்கர வாகனத்தில்
இரு சக்கர வாகனத்தில்
பணியிடம் விரைகையில்
மழலையின் மலர்த்தொடுகையாய்
உடல் வருடிச் செல்லும்
மென் குளிர்க்காற்று.
முது அரச மர முடியிலிருந்து
கலவைக்குரலெழுப்பி
புது நாளைத் தொடங்கும்
உற்சாக பட்சிகள்.
வாகனம் நெருங்குகையில்
கருஞ்சாம்பல் சுருள் காகிதங்களாய்
விருட்டென மேலெழும்
விசையுறு காகங்கள்.
விசால வீட்டின்
உயர்ச்சுவருக்கு மேலே
தலை நீட்டித் தெரு பார்க்கும்
சரக்கொன்றைப் பூக்கள்.
புறக்காட்சிகளளிக்கும்
அகத்தூண்டுதல்களிழந்து
வெளி வரும் நாள் நோக்கி
வீட்டுக்குடுவைக்குள் அடைபட்டிருக்கும்
நரதிரவங்களாய்
எண்ணற்ற நான்கள்.
###$#######$###
பா.சேதுமாதவன், திருச்சி.
- சில்லறை விஷயங்கள்
- பூடகமாகச் சொல்வது
- அப்பாவிடம் ஒரு கேள்வி
- செயற்கைச் சிடுக்கு
- மேசையாகிய நான்
- புதராகிய பதர்
- சூடேறும் பூகோளம்
- தனிமை
- அவரடியைத் தினம்பரவி ஆசிபெற்று வாழ்ந்திடுவோம் !
- பூகோளச் சூடேற்றக் குறைப்பில் அணுமின் சக்தியின் முக்கிய பங்கு
- நரதிரவங்கள்
- விலங்கு மனம்
- ‘‘ஔவை’’ யார்?( தொடர் கட்டுரை)
- எத்தகைய முதிர்ந்த ஞானம்!
- ஒரு கதை ஒரு கருத்து
- சொல்லேர் உழவின் அறுவடை
- வாழ்வின் ஒளி பொருந்திய கதைகள்
- தக்கயாகப் பரணி [தொடர்ச்சி]
- நரகமேடு!
- புகை
- விதியே விதியே
- ப. திருமலையின் கொரோனா உலகம் – ஒரு பார்வை
- வாழும்காலத்தில் வாழ்த்துவோம்: ஜூன் 09 பேராசிரியர் மௌனகுருவுக்கு பிறந்த தினம்