கனவு திறவோன்
எத்தனை இடங்களில் காத்திருந்தேன்
எங்கும் அவள் வரவில்லை
அவள் வராமலிருக்க
எத்தனையோ காரணங்கள்
என்னைக் காதலிக்காததும் சேர்த்து
என்னை நான் எத்தனை முறை
படம் பிடிப்பேன்?
அத்தனையிலும்
என் நிழல் இருந்தது
ஆனால் உயிரில்லை?
அவளில்லா செல்பி
வெறும் யுனரி (ஒருமக்) குறியீடு தான்!
எங்கும் நீ வந்தாய்
சில நாட்களில் சின்னதாய்
சிரித்து மறைந்தாய்
சில நாட்களில்
என்னையும் சிரிக்க வைத்து மறைந்தாய்
இன்று உன்னோடு
ஒரு செல்பி எடுத்திட வேண்டும்
விடிந்தது முதல்
அஸ்தமனத்திற்குக் காத்திருந்தேன்
இருள் கவிழ்ந்தும் நீ வெளி வரவில்லை
இருளில் எனைத் தேடாமல்
உனைத் தேடும்
எனக்குப் புரியவில்லை
நீயும் உன்னவளைத் தேடிக் கொண்டிருக்கிறாய் என்று
நீயும் யுனரி (ஒருமக்) குறியீடு தானோ.
- வளவ. துரையன் படைப்புலகம் – நிகழ்வு – கடலூர்
 - மிதிலாவிலாஸ்-20
 - சும்மா ஊதுங்க பாஸ் – 4 (நகைச்சுவை தொடர் முடிவு)
 - தொடுவானம் 70. மனங்கவர்ந்த மாணவப் பருவம்.
 - ஒவ்வாமை
 - பலவேசம்
 - சாயாசுந்தரம் கவிதைகள் 3
 - மயிரிழை
 - அன்பானவர்களுக்கு
 - ஆறு
 - நான் யாழினி, ஐ.ஏ.எஸ். அத்தியாயம் 8
 - சிறந்த சிறுகதைகள் ஒரு பார்வை – 3
 - பிசகு
 - நிலவுடன் ஒரு செல்பி
 - சொற்றுணை வாழ்க்கை – பசுவய்யா கவிதைகள்
 - சூரிய ஆற்றல்.
 - ப.க.பொன்னுசாமியின் “ நெடுஞ்சாலை விளக்குகள் “ நாவல் வெளிச்சம் காட்டும் அறிவியல் அறம்
 - டிமான்டி காலனி
 - ஒரு வழிப் பாதை
 - இடிமுகில் மின்னலில் மர்மமான பாஸிட்டிரான் பரமாணுக்கள் உண்டாவதை முதன்முறைக் கண்டுபிடிப்பு
 - மேற்கு பர்மாவில் ரோஹிஞ்யா போராட்டம்