நீடிக்காத காதல் ! மூலம் : பீட்டில்ஸ் பாடகர்

author
0 minutes, 0 seconds Read
This entry is part 2 of 10 in the series 11 மார்ச் 2018


தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

+++++++++++

உனது நாள் ஓடுது ,

உன் மனது வாடுது,

நீ தேவை இல்லை என்பதால் !

வஞ்சியின் கனிவு மொழிகள் எனது

நெஞ்சினில் ஊன்றிப் போனது !

காலை எழும் மங்கை

கழிப்பது தன் பொழுதை !

வாழ்வு விரைவது அறியாமல் போனது .

தேவை யில்லை நீ யெனத்

தெரிய வில்லை அவள் விழிகளில் !

காதல் அடையாளம் எதுவும்

காண வில்லை நானும் !

கண்ணீர்த் துளிகள் யாரை

எண்ணி அழுதிடும் ?

நீ அவளை விரும்புவ துண்மை;

அவளும் உனக்குத் தேவையே !

தன் காதல் செத்த விட்ட

தென்றவள் விலகிப் போயினும்,

நம்ப வில்லை நீதான் !

ஆயினும் நீ நினைத்துக் கொள்வது,

அவள் உனைத் தேடுவதாய் !

ஆயினும் அவள் கண்ணுக்குள்

நீயில்லை தெரியுதா ?

நீடித் திருந்த காதல் உணர்வு

ஓடிப் போனது புரியுதா ?

வீட்டுக் குள்ளே நீ !

வெளியே செல்வது அவள் !

அவள் சொல்வது,

தனக் கொருவன் இருப்பதாய் !

உனது நாள் ஓடுது !

உன் மனது வாடுது !

Series Navigationதமிழ்சுதந்திரம் அடைந்து 70 ஆண்டுகளுக்கு பின்னரும் பெரும்பாலான பட்டியல் இனத்தவர்கள் நிலமற்ற விவசாயிகளாகவே இருக்கிறார்கள்.
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *