மஞ்சுளா
என் கனவுக் கூட்டுக்குள்
வந்தடையும்
இரவுப் பறவைகளின் சிறகுகள்
விடிந்ததும் முறிந்து விடுகின்றன
அதிகாலைக் குளிரில்
நீளவானின் நிறம்
மெல்ல மாறி வருகிறது
கடமைகள் பூத்த பகல்
என்னை நகர்த்தி விட
அனிச்சையாக
உடல் வேகம் பெறுகிறது
தொடர் காரியங்களில்
உள்ளம் தொலை தூரம்
சென்று விட….
அசதியும் சோர்வுமான
வேளைகளில்
வியர்வை பூத்த உள்ளங்கையை
விரித்துப் பார்க்கிறேன்
ஓய்வு நேரத்திலும்
உழைப்பின் கவிதைகளாக
பதிந்தே கிடக்கிகின்றன
கைரேகைகள்
-மஞ்சுளா
- சுவேதா
 - தி. ஜானகிராமனின் சிறுகதை உலகம் – 22 – பாரிமுனை டு பட்ணபாக்கம்
 - ஆல்- இன் – வொன் அலமேலு
 - ஒரு கதை ஒரு கருத்து – பாரதியாரின் ஸ்வர்ண குமாரி
 - வரலாற்றில் வளவனூர்
 - இஸுரு சாமர சோமவீர – ‘திருமதி. பெரேரா’ எனும் மொழிபெயர்ப்பு சிறுகதைத் தொகுப்பு
 - எழுத்தின் உரசல்களும் பழுதின் காரணங்களும் – ப.க.பொன்னுசாமி அவர்களின் எழுத்து
 - வார்த்தை தவறிவிட்டாய் ட..டீ..ய்..!
 - என் செல்லக்குட்டி கண்ணணுக்கு..!
 - தோள்வலியும் தோளழகும் – இலக்குவன்
 - சொல்வனம் இணைய இதழின் 236 ஆம் இதழ்
 - பதிவுகள்
 - அனார் கவிதைகள்- ஒரு சுருக்கமான அறிமுகம்
 - அமரர் “கலைஞன்” மாசிலாமணி – கலைஞன் பதிப்பகம்
 - மொழிபெயர்ப்புக் கவிதைகள்