நீலே ஒபெர்முல்லர்
guardian.co.uk, Wednesday 30 May 2012 12.24 EDT
பாகிஸ்தானில் பாதுகாப்பற்ற கருக்கலைப்பால் நிகழும் மரணங்கள்
நீலே ஒபெர்முல்லர்
guardian.co.uk, Wednesday 30 May 2012 12.24 EDT
பாதுகாப்பற்ற கருக்கலைப்பினால்தான் சென்ற வருடம் தன் மகள் ஷமின் இறந்தாள் என்பதை ஜினோ ஒப்புகொள்ள கஷ்டப்படுகிறார். “என்னுடைய மகள் இறக்கவேண்டிய அவசியமில்லை” என்று பத்து குழந்தைகளுக்கு தாயான 62 வயது ஜினோ மெல்ல சொல்கிறார். ”சமிமின் பாவங்களை என்னால் மன்னிக்க முடியுமா என்று தெரியவில்லை. ஆனால், அவளுக்கு உதவி செய்ய எனக்கு ஒரு வாய்ப்பளித்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்”
பாகிஸ்தானின் சட்டங்களின் படி, தாயாரின் உயிரை காப்பாற்ற மட்டுமே கருக்கலைப்பு சட்டப்பூர்வமானது. 97 சதவீத முஸ்லீம் நாடாக இருக்கும் இந்த நாட்டில், திருமணத்துக்கு வெளியே பாலுறவு கடுமையாக தண்டிக்கப்படும் இந்த நாட்டில் கருக்கலைப்பு என்பது மிகவும் கடுமையாக எதிர்கொள்ளப்படுகிறது. ஷமின் கருவுற்றபோது அவர் திருமணமாகியிருக்கவில்லை. அப்பா இல்லாமல் குழந்தையை பெற்றுக்கொள்வதற்கு அஞ்சி கருக்கலைப்பு செய்து கொள்ள ஒரு தாதியை அணுகியபோது அவர் மலேரியா எதிர்ப்பு மருந்தை கொடுத்திருக்கிறார். குழந்தை வயிற்றில் இருந்தபோது ஷமிம் நோய்வாய்ப்பட்டிருக்கிறார்.”அப்போதுதான் என்னை கூப்பிட்டு முழுவதையும் சொன்னாள். அவளை உடனே கிளினிக்குக்கு கூட்டிச்சென்றேன். ஆனால் நேரம் கடந்துவிட்டது. அவள் அன்றே இறந்துவிட்டாள்”
ஷமினின் கதை பாகிஸ்தானில் அடிக்கடி நடக்கும் பொதுவான கதை. குட்மாச்சர் இன்ஸ்ட்டிட்யூட்டின் கணக்கின்படி, வருடந்தோறும் பாகிஸ்தானில் 890000 பெண்கள் பாதுகாப்பற்ற கருக்கலைப்பு செய்துகொள்கிறார்கள். சுமார் 800 பேர்கள் இதில் இறக்கிறார்கள். சுமார் 197000 பேர்கள் கருக்கலைப்பு சரியாகச் செய்யப்படாததால், சிக்கல்களுக்கு ஆளாகி மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுகிறார்கள். “இவை எல்லாமே மிகவும் குறைவாக காட்டப்படும் எண்ணிக்கைகள். ஏனெனில் பெரும்பாலான கருக்கலைப்புகளும், சிக்கல்களும் பேசப்படுவதே இல்லை” என்று நிகாட் கான் கூறுகிறார்.
“இதில் பிரச்னையே, இந்த கருக்கலைப்புக்கு சட்டப்பூர்வமான் அங்கீகாரம் இல்லை என்பதுதான்” என்று ஷிரிகட் கா பெண்கள் நலவாழ்வு மையத்தின் தலைவராக இருக்கும் பௌவுஸியா விகார் கூறுகிறார். “கருக்கலைப்புக்காக செல்வதே ரிஸ்கான விஷயமென்றும், கருக்கலைப்பின்போது பெண் இறந்துவிட்டாள் அவளே குற்றவாளி” என்று முன்கூட்டியே தீர்ப்பு எழுதப்பட்டுவிடுகிறது என்கிறார். இந்த ரிஸ்கை பெண்கலே தனியாக எடுக்கலாம். ஆனால், “பாதுகாப்பற்ற கருக்கலைப்புக்கு சென்று பிறகு அதனால் உடல்நலமற்று போனால், அந்த பெண்ணால் வீட்டு வேலைகளை செய்யமுடியாது. மேலும் அந்த குடும்பம் பொருளாதார ரீதியில் நசியவும் ஆரம்பிக்கும்.” என்று கான் கூறுகிறார். “இவ்வாறு அந்த பெண் குடும்பத்துக்கு வேலைகளை செய்யமுடியாமல் போவது, குடும்பத்துக்கும் ஏன் நாட்டுக்குமே பொருளாதார் ரீதியிலும் சுமையாகிவிடுகிறது”
மில்லனியம் வளர்ச்சி குறிக்கோள் 5 இன் படி, கர்ப்பமாவதன் மூலமாக பெண்கள் இறப்பதை 75 சதவீதம் குறைக்க வேண்டும் என்றும், முழு நாட்டுக்கும் கர்ப்ப கால சுகாதார வசதியை 2015இற்குள் கொடுக்க வேண்டும் என்று கோருகிறது, இருப்பினும் இந்த குறிக்கோள் அடைவது கடினமானது, ஜனவரி 2012இல் வெளிவந்த ஒரு ஆய்வின்படி, கருக்கலைப்பு சதவீதம் அதே அளவில் இருந்தாலும், 1995இலிருந்து 2008க்குள் கருக்கலைப்பு பயிற்சி இல்லாத சிறுமருத்துவமனைகள் மூலமாக பெற்ற கருக்கலைப்புகளின் வீதம் 44இலிருந்து 49ஆக உயர்ந்திருக்கிறது. கருக்கலைப்பை சட்டத்துக்கு புறம்பானதாக ஆக்குவது என்பது ஏன் கருக்கலைப்பு எண்ணிக்கையை அதிகரிக்கிறது என்பதற்கு சரியான காரணம் உண்டு. கருக்கலைப்பை சட்டத்துக்கு புறம்பானதாக ஆக்கும் நாடுகள், மிகச்சிறிதளவே கருக்கலைப்பு, கர்ப்பகால சுகாதாரம் ஆகியவற்றில் சமூக முதலீட்டை செய்கின்றன. இதனால், கர்ப்பகால சுகாதாரம் குறைவதால், தேவையற்ற கர்ப்பங்களின் எண்ணிக்கை அதிகரிக்கிறது. இதனால், திருட்டுத்தன கருக்கலைப்புகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கிறது.
ஷாநாஸின் கதையும் இதேதான். திருமணமான ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டதால், ஷாநாஸ் கர்ப்பமடைந்தார். அவரது தாயார் அதனை கண்டுபிடித்ததும், ஷாநாஸை கடுமையாக அடித்தார். இருப்பினும், தனது 17 வயது மகளை தாதியிடம் கூட்டிச்செல்ல சம்மதித்தார். ஷாநாஸ் அந்த வலிநிறைந்த அனுபவத்தை சொல்கிறார். ”அந்த தாதி ஒரு மரக்குச்சியை என்னுள் செருகினாள். அது வெளியே வந்தால் இன்னும் இரண்டு நாளைக்கு மீண்டும் அதனை உள்ளே செருக சொன்னாள். ” அந்த வழிமுறை ஷாநாஸுக்கு நிரந்தர மூத்திரக்குழாய் காயத்தை ஏற்படுத்தியிருக்கிறது. மேலும் அவள் இனி குழந்தையே பெறமுடியாத நிலைக்கும் தள்ளிவிட்டுவிட்டது. தனது கௌரவத்தை காப்பாற்றிகொள்ள ஷாநாஸ் ஒரு மனநிலை சரியில்லாதவரை திருமணம் செய்யவேண்டிய நிலைக்கும் தள்ளப்பட்டார்.
“இவை போன்ற விஷயங்களால், கருக்கலைப்பு ஒரு மனித உரிமையாக அங்கீகரிக்கப்பட வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்” என்று டாக்டர் தாபிந்தா சோருஷ் கூறுகிறார். “கருக்கலைப்புக்கும், திருமணத்துக்கு முந்திய உறவுக்கும் இருக்கும் அவப்பெயர் காரணமாக சிறுமிகளது வாழ்க்கை நிரந்தரமாக அழிக்கப்பட்டுவிடுகிறது. “ என்று கூறுகிறார். 2010இல் ஷோரோஸின் குழு பாகிஸ்தானில் இந்த நோக்கம் எவ்வாறு செயல்படுத்தப்படுகிறது என்று ஆராய்ந்தார்கள். “எங்களது ஆராய்ச்சியின்படி, கருக்கலைப்பு பாவம் என்று கருதி, கருக்கலைப்பு தேவைப்பட்டு வரும் பெண்களைக்கூட டாக்டர்கள் திருப்பி அனுப்பிவிடுகிறார்கள்” என்று கூறுகிறார். “ஆனால், இது ஒழுக்கத்துக்கான கேள்வி அல்ல. இது சுகாதாரத்துக்கும், ஒவ்வொருவரும் தனக்கு வேண்டிய சுகாதாரத்துக்கான உரிமைக்குமான கேள்வி” என்று டாக்டர் சோருஷ் கூறுகிறார்.
ஐக்கிய நாடுகளின் சிறப்பு அறிவிப்பாளர், ஆனந்த் குரோவர், 2011இல் உலகம் முழுவதும் கருக்கலைப்பு சட்டப்பூர்வமானதாக ஆக்கப்பட வேண்டும் என்று அறிக்கை வெளியிட்டார். கருக்கலைப்பு என்ற மருத்துவ வழிமுறையை குற்றமாக ஆக்குவதன் மூலம், பெண்களுக்கான எல்லா உரிமைகளும் மறுக்கப்படுகின்றன என்றும், பெண்களது வாழ்க்கை, சுகாதாரம் சமத்துவத்துக்கான உரிமைகள் மறுக்கப்படுகின்றன என்றும் கூறுகிறார்.
குலாலய் இஸ்மாயில், பாகிஸ்தான் பெண்கள் குழுவான Aware Girls என்பதன் நிறுவனர். இவர் கருக்கலைப்பை சட்டப்பூர்வமானதாக ஆக்குவது சரியான திசை என்று கூறுகிறார். ஜூன் 2010இல் இவரும் டச்சு நாட்டு தன்னார்வ நிறுவனமும் இணைந்து கருக்கலைப்பு உதவி தொலைபேசி எண் ஆரம்பித்தார்கள். இந்த அனாமதேய சேவை கடுமையான எதிர்ப்பை எதிர்கொண்டது. நாங்கள் ஏராளமான மிரட்டல்களை எதிர்கொண்டோம் என்று இஸ்மாயில் கூறுகிறார். இந்த நாட்டில் மதத்தீவிரவாதம் அதிகரித்திருக்கிறது. கருக்கலைப்பு என்பது தவறான ஒன்றாக பார்க்கப்படுகிறது. இதனால், இந்த ஹாட்லைனை பத்திரிக்கைகள் தொலைக்காட்சிகள் மூலமாக வெளியிட முடியவில்லை. ஆகவே சமூக வலைத்தளங்கள் மூலமாக மட்டுமே பிரச்சாரம் செய்கிறோம் என்கிறார். ஒவ்வொரு வாரமும் சுமார் 200 பெண்கள் இந்த ஹாட்லைனை தொடர்பு கொண்டு பாதுகாப்பான கருக்கலைப்புபற்றிய விவரங்களை கேட்டுப்பெறுகிறார்கள்.
ஷமின், ஷாநாஸ் ஆகிய இருவரும் தங்களுக்குத்தாங்களே உதவிக்கொள்ள முனைந்தார்கள். ஆனால், நிகழ்ந்துவிட்ட கர்ப்பத்தை மறைக்க அவர்கள் எடுத்த முயற்சிகள் ஷமினின் இறப்பிலும், ஷாநாஸின் நிரந்தர சுகாதார கேட்டிலும் முடிந்தன. பாதுகாப்பற்ற கருக்கலைப்பு மட்டுமே ஒரே வழியாக இருப்பது அவர்களை போன்றே எண்ணற்ற பெண்களுக்கு ஒரே வழியாக இருக்கிறது. “பகிரங்கமாக கருக்கலைப்பு உதவி செய்வது எங்களது உயிர்களுக்கே ஆபத்தானது” என்று டாக்டர் சோருஷ் கூறுகிறார். பலுச்சிஸ்தானில் கருக்கலைப்பு பற்றியும், குடும்ப கட்டுப்பாடு பற்றியும் ஆராய்ச்சி செய்ய சென்றபோது அவரது இரண்டு களப்பணி ஆய்வாளர்கள் கொல்லப்பட்டுவிட்டார்கள். “உலக நாடுகள் இந்த பாகிஸ்தான் அரசாங்கத்தை வலியுறுத்தி கருக்கலைப்பு செய்துகொள்ளும் உரிமையை அடிப்படை மனித உரிமையாக அங்கீகரிக்க வைக்க வேண்டும். அதன் பிறகே களப்பணி புரியும் எங்களால் மாற்றங்கள் நிகழ முடியும்“ என்று குலாலை இஸ்மாயில் கூறுகிறார்
- சந்திரனில் விவசாயம் எப்படி நடக்கலாம் என்று யூகம் தரும் இயந்திர விவசாயப் பண்ணைகள்
- மலேசிய தான் ஸ்ரீ சோமா அறவாரியத்தின் அனைத்துலகப் புத்தகப் பரிசினை இலங்கை அறிஞர் மு.பொன்னம்பலம் வென்றார்
- மூன்று பேர் மூன்று காதல்
- மதிப்பும் வீரமும்
- ‘நான் ரசித்த முன்னுரைகளிலிருந்து……………… 8. தி.ஜ.ரங்கநாதன் – ஆஹா ஊகூ
- அரசன் சார்ந்த அறநெறி / இல்லற நெறி – (இராமாயண ராமர் பற்றி)
- காளை மேய்த்தல்(Ox Herding)- பத்து ஜென் விளக்கப் படங்கள்
- வெளி
- கண்ணீர்ப் பனித்துளி நான்
- தாகூரின் கீதப் பாமாலை – 43 சதுப்பு நிலப் பாடல்கள்
- ஒருவர் சுயத்தனம் பற்றி எனது பாடல் -1 (1819-1892) (புல்லின் இலைகள் -1)
- நினைவுகளின் சுவட்டில் (105)
- சந்திப்பு
- வாழ்வியல் வரலாற்றில் சிலபக்கங்கள் – 39
- மேடம் மோனிகாவின் வேடம் (Mrs. Warren’s Profession) நான்கு அங்க நாடகம் அங்கம் -4 பாகம் -6
- பி.ஜி.சம்பத்தின் “ அவன் நானல்ல ( மலையாளக்கதை ) – ஒரு பார்வை
- 22 ஃபீமல் கோட்டயம் ( மலையாளம் )
- நம்பிக்கை ஒளி! (10)
- சீமைத் தரகர்களும் ஊமை இந்தியர்களும்
- வந்த வழி-
- பாகிஸ்தானில் பாதுகாப்பற்ற கருக்கலைப்பால் நிகழும் மரணங்கள்
- வேள்வெடுத்தல் (வேவு எடுத்தல்) என்னும் நகரத்தார் திருமண நடைமுறை
- ஆத்ம சோதனை
- உன்னை போல் ஒருவன், முசுலிம்களுக்கு எதிரான படமில்லை? – 1
- பூகோளம் சூடேறி ஆர்க்டிக் பனிப் பாறைகள் உருகி கடல் வெப்பம், மட்டம் உயர்வு.
- அக்னிப்பிரவேசம் -13
கருக்கலைப்பை அனுமதிக்க மறுத்து பெண்களின் அடிப்படை உரிமைகளைப் பறிக்கும் இஸ்லாமிய, கிறிஸ்தவ பயங்கரவாத நாடுகளை ஐ.நா. சபை அங்கீகரிக்கக்கூடாது. கத்தோலிக்க பயங்கரவாதி போப்பின் ஏஜன்டாகச் செயல்படும் சோனியாவின் தலைமையிலான காங்கிரஸ் கட்சி இன்னொரு முறை ஆட்சிக்கு வந்தால் இந்தியாவிலும் பெண்களின் அடிப்படை உரிமைகளைப் பறிக்கும் முயற்சியில இறங்கும் என்பது நிச்சயம். இஸ்லாமிஸ்டுகள் தவிர, இந்திய இடதுசாரிகள், தமிழக பெரியாரிஸ்டுகள், ஆர்.எஸ்.எஸ். போன்ற இந்துத்துவ அமைப்புகள், ஞாநி போன்ற முற்போக்கு பிராமணர்கள், கனிமொழி போன்ற பெண்ணியவாதிகள் என்று பலரும் அம்முயற்சியை ஆதரிப்பார்கள் என்றும் எதிர்பார்க்கலாம்.
///கருக்கலைப்பை அனுமதிக்க மறுத்து பெண்களின் அடிப்படை உரிமைகளைப் பறிக்கும் இஸ்லாமிய, கிறிஸ்தவ பயங்கரவாத நாடுகளை ஐ.நா. சபை அங்கீகரிக்கக்கூடாது///
இஸ்லாமிய, கிறிஸ்தவ நாடுகளின் தயவு இந்தியாவிற்கு இல்லாவிடின், இந்தியா பரதேசி நாடாகப் போய்விடும்.
கிறிஸ்தவ ஆதிக்கம் நிறைந்த ஐ.நாவிடம், கிறிஸ்தவ நாடுகளை ஆதரிக்கக் கூடாது என்று கோர, ரெங்கதுரை ஐயாவிற்கு எப்படி துணிவு வருகிறது?
கருக்கலைப்பை அனுமதிக்க மறுத்து பெண்களின் அடிப்படை உரிமைகளைப் பறிக்கும் —> புரியலை…
#சோனியாவின் தலைமையிலான காங்கிரஸ் கட்சி இன்னொரு முறை ஆட்சிக்கு வந்தால் இந்தியாவிலும் பெண்களின் அடிப்படை உரிமைகளைப் பறிக்கும் முயற்சியில இறங்கும் என்பது நிச்சயம்#
இரண்டு முறை தொடர்ந்து ஆட்சியில் இருந்தவர்கள்(இப்படிச் செய்யாதவர்கள்) மூன்றாவது முறை இப்படிச் செய்வார்கள் என்று எதை வைத்து சொல்கிறீர்கள்? விளக்கினால் நலம்.
இந்தியாவில் உள்ள முஸ்லீம் பெண்களை ஓரளவுக்கு முஸ்லீம் ஆண்கள் படிக்க அனுமதிப்பது ஆச்சரியமான ஒன்று.
பாகிஸ்தானில் நான்கில் மூன்று பெண்கள் படிக்க அனுப்பப்படுவதே இல்லை. அதாவது 75 சதவீத பெண் குழந்தைகளுக்கு முழுமையாக கல்வி மறுக்கப்படுகிறது. அப்படியும் படிக்கும் 25 சதவீத குழந்தைகளில் பெரும்பாலானவர்கள் ஆரம்ப கல்வியையே முடிக்க முஸ்லீம் ஆண்களால் அனுமதிக்கப்படுவதில்லை.
http://tribune.com.pk/story/478847/nearly-three-quarters-of-pakistan-girls-not-in-school/
அப்படியிருக்கும்போது அடிப்படை படிப்பறிவு கூட இல்லாத இத்தகைய பெண்கள் வெறும் சமூக வலைத்தளங்களை இணையத்தில் படித்து சுகாதாரமான கர்ப்ப ஆரோக்கியம் பெறுவார்கள் என்று கருதுவது நகைப்புக்கிடமானது.
ஆகவே முஸ்லீம் பெண்களுக்கு அடிப்படை படிப்பறிவு கொடுக்க முஸ்லீம் ஆண்கள் அனுமதிக்க வேண்டும் என்று பாகிஸ்தானை கோருவதுதான் முதல் வேலையாக இருக்க வேண்டும்.
ஆனால், முஸ்லீம் பெண்கள் வீட்டை விட்டு வெளியேறக்கூடாது படிக்க போக கூடாது என்று முஸ்லீம் ஆண்களும், பாகிஸ்தானிய முல்லாக்களும், ராணுவமும் அரசாங்கமும் கருதும்போது இது எப்படி சாத்தியமாகும்?
முஸ்லீம் பெண்களை அடக்கியாள ”முஸ்லீம் ஆண்களுக்கு இருக்கும் அடிப்படை மனித உரிமையில்” மற்றவர்கள் குறிக்கிடுவதாக முஸ்லீம் ஆண்கள் ஆர்ப்பாட்டம் போடலாம்.
///ஆனால், முஸ்லீம் பெண்கள் வீட்டை விட்டு வெளியேறக்கூடாது படிக்க போக கூடாது என்று முஸ்லீம் ஆண்களும், பாகிஸ்தானிய முல்லாக்களும், ராணுவமும் அரசாங்கமும் கருதும்போது இது எப்படி சாத்தியமாகும்?///
பெண்கள் படிக்கப் போகக் கூடாது என்று ஆண்கள், முல்லாக்கள், இராணுவம், அரசாங்கம் இன்னும் அப்பப்பா.
அங்கே, பெண்களுக்கென்றே தனிக் கல்லூரிகள், தனி பல்கலைக் கலகங்கள் என்று குவிந்து இருக்கிறதே.
இதற்கு அரசு முதல் மேற்குறிப்பிட்டவர்கள் எந்தவித தடையும் விதிக்கக் காணோம்.
தவறு…………… பாகிஸ்தானை அடுத்த மாநிலமாக நினைத்து இங்கு கருது பகிரவேண்டாம்.
எந்த வொரு பாகிதானிய சிறுவனிடமும் ” நமக்கு எதிரி என்ன வென்றால்…. அந்த நாய்களுக்கு மனதில் வருந்து நமது பாரத கொடியும், நாடும் தான். இதே கேள்வியை ஒரு இந்தியனிடம் வினாவினால் ” அறியாமையும், பயம், பஞ்சம் ” என்பான். அந்த நாட்டில் எல்லாம் சரியாக நடந்து கொண்டிருக்கிறது. அந்நாட்டில் கல்வியறிவு அற்ற பெண்கள் பெருக, பெருக அவர்கள் சந்ததியினரும் மூடர்களாக, முர்கர்களாக பல்கி பெருகி மிருகத்தனமாக தாமையே அளித்து சாக வேண்டும். அடுத்த உலகம் சரியான முறையில் BALANCE ஆகிகொண்டிருக்கிறது……..
வாழ்க பாரதம்.
உயர்ந்தபாரத சங்கரநாராயணன். Kuwait.
///எந்த வொரு பாகிதானிய சிறுவனிடமும் ” நமக்கு எதிரி என்ன வென்றால்…. அந்த நாய்களுக்கு மனதில் வருந்து நமது பாரத கொடியும், நாடும் தான். ///
சிறுவர்களையும் நாய்கள் என்று வாழ்த்தும் உயர்ந்த பாரத சங்கர நாராயணன் அவர்களுக்குப் பாராட்டுகள்.
மனிதனாக எழுதவும் சிறிது பழகினால் என்ன?
//அந்த நாட்டில் எல்லாம் சரியாக நடந்து கொண்டிருக்கிறது. அந்நாட்டில் கல்வியறிவு அற்ற பெண்கள் பெருக, பெருக அவர்கள் சந்ததியினரும் மூடர்களாக, முர்கர்களாக பல்கி பெருகி மிருகத்தனமாக தாமையே அளித்து சாக வேண்டும். அடுத்த உலகம் சரியான முறையில் BALANCE ஆகிகொண்டிருக்கிறது……..//
எப்படி?….நம்ம தர்மபுரியிலே வன்னியர்களும் தலித்களும் வெட்டிகிறாங்களே! அது மாதிரியா? அல்லது ராமநாதபுரத்தில் தேவர்களும் தலித்களும் வெட்டிக்கிறாங்களே அது போலவா?
பாகிஸ்தானில் குழப்பம் வந்தால் அது பக்கத்து நாடான நமக்கும் தீராத தலைவலி என்பது சங்கர நாராயணன் என்ற அதி மேதாவிக்கு தெரியவில்லை போல் இருக்கிறது. இந்திய எதிர்ப்பு என்பது அந்நாட்டு அரசாங்கம் விளையாடும் சித்து வேலை. சாமான்ய பகிஸ்தானிகள் இந்தியர்களோடு நட்புடனேயே பழகுகின்றனர். நம் நாட்டில் ஏதாவது பிரச்னை வந்தால் பாகிஸ்தானை எதிலாவது நமது அரசாங்கம் இழுத்து விடும். அதுபோல் அங்கும் நடக்கிறது.
எந்த நாடாக இருந்தாலும் அந்த மக்களும் நலமுடனேயே இருக்க வேண்டும் என்று எண்ணும் நல் மனது வேண்டும். அதனை சங்கர நாராயணன் என்ற இந்துத்வாவாதியிடம் எதிர் பார்க்கலாமோ!
can you advice the same to pakisthan and treat them equally to Bangaldesh people or internal pakisthan people such as pulusisthaan. before advice bring unity to muslims and sort out your internal people issues. advice to 3rd party is always easy…..as a Hindu we would happily see muslim conuntry destroyment. what is wrong on that..
Piriyan,
சாமான்ய பகிஸ்தானிகள் இந்தியர்களோடு நட்புடனேயே பழகுகின்றனர்.
Let us face the truth. The hindus in pakistan have been victimised & tortured for years & their population has come down.
Even recently, a batch of hindus who had come for a pilgrimage trip want to stay back in India.
All this talk of pakistanis being kind to indians is all nice to hear but it is not happening.
Why, in india itself, I have seen muslims here in chennai openly bursting crackers & celebrating when pakistan wins a cricket match against india.
Muslims will always be muslims first & indians only next. It is foolhardy to expect them to join the national mainstream.
All this talk of hindu muslim bhai bhai is only on paper.
This is the reality.
Let us not deceive ourselves by all this tall talk.
//as a Hindu we would happily see muslim conuntry destroyment. what is wrong on that..//
இந்த எண்ணத்தை மேலும் வளர்த்துக் கொள்ளவும். :-)
தமிழக அரசு கெஜட்டை சற்று பார்வையிடவும். சென்ற வருடத்தில் இந்து மதத்தை விட்டு இஸ்லாமிய மார்க்கத்தை ஏற்ற இந்து இளைஞர்களின் எண்ணிக்கையை படித்தால் உங்களுக்கு மயக்கமே வந்து விடும். அப்படி என்றால் இந்திய நாடும் அழிய வேண்டும் என்று விரும்புகிறீரா…
எண்ணம் போல் வாழ்வு..
what they are going to do after convert to muslim. maximum some portal they can register some comment against hindu and enjoy the life. are they going to do anything beyond that? and no one worry in india that whoever convert to muslim or other relegion.
எண்ணம் போல் வாழ்வு.. – very perfect. whoever eating food in india and love pakisthaan. ungalukkuthaan எண்ணம் போல் வாழ்வு.. not for us.
>>தமிழக அரசு கெஜட்டை சற்று பார்வையிடவும். சென்ற வருடத்தில் இந்து மதத்தை விட்டு இஸ்லாமிய மார்க்கத்தை ஏற்ற இந்து இளைஞர்களின் எண்ணிக்கையை படித்தால் உங்களுக்கு மயக்கமே வந்து விடும்
தமிழக அரசு கெஜட்டை இணையத்தில் (http://www.tn.gov.in/stationeryprinting/gazette ) ‘பார்வையிட்டேன்’. இந்த வருடம் (2012), வாரத்திற்கு ஒன்றாக 47 கெஜட்டுகள் வெளியிடப்பட்டுள்ளன.
இந்த கெஜட்டுகளை டவுன்லோட் செய்து கணக்கிட்டபோது (using simple tools like grep) கிடைத்த மதம் மாறியோரின் எண்ணிக்கை :
இஸ்லாமிற்கு மாறியவர்கள் : 1536
கிருஸ்துவத்திற்கு மாறியவர்கள் : 1236
இந்துவாக மாறியவர்கள் : 662
புத்த மதத்திற்கு மாறியவர்கள் : 49
ஒரு வருடத்தில் இஸ்லாமிற்கு மாறியவர்களே அதிகமாக இருந்தாலும், மயக்கம்வரும் எண்ணிக்கையாக நான் கருதவில்லை.
மேலும் பெருவாரியான மத மாற்றங்கள் திருமணத்தின் மூலமே நடந்திருப்பதையும் காணமுடிகிறது.
இது இருக்கட்டும், ஒரு முஸ்லிம் முதலில் முஸ்லிம் , பிறகுதான் இந்தியன் என்பது உண்மையா? உங்களவில் எப்படி?
>>தமிழக அரசு கெஜட்டை சற்று பார்வையிடவும். சென்ற வருடத்தில் இந்து மதத்தை விட்டு இஸ்லாமிய மார்க்கத்தை ஏற்ற இந்து இளைஞர்களின் எண்ணிக்கையை படித்தால் உங்களுக்கு மயக்கமே வந்து விடும்
சென்ற வருடம் என்றுதானே சொன்னேன் என்று நீங்கள் கூறலாம். அதனால் 2011 வருடத்தில் வெளியிடப்பட்ட 42 கெஜட்டுகளை
எண்ணியபோது கிடைத்த விபரம் :
கிருஸ்துவ மதத்திற்கு மாறியவர்கள்: 1215
இஸ்லாமிற்கு மாறியவர்கள் : 1172
இந்து மதத்திற்கு மாறியவர்கள் : 802
புத்தம் : 22
வெல்கம் நியூ முஸ்லிம் போன்ற இணையத்தை மட்டும் படித்து அதுதான் முழு உண்மை என நம்பிவிட்டீர்கள் போலும்
திரு ராம்!
//இது இருக்கட்டும், ஒரு முஸ்லிம் முதலில் முஸ்லிம் , பிறகுதான் இந்தியன் என்பது உண்மையா? உங்களவில் எப்படி?//
ஒரு முறை புசைலா என்ற சஹாபி பெண்மணி நபி அவர்களிடம் வந்து “இறைத்தூதரே நான் என் சமூகத்தை நேசிப்பது இன வெறியா என்று கேட்டார்கள். அதற்கு நபி அவர்கள் தன் சமூகத்தை ஒருவன் நேசிப்பது இன வெறி அல்ல. மாறாக தன் சமூகத்தை சார்ந்தவன் வரம்பு மீறி அநீதியை செய்யும்போது அவன் செய்வது தவறு என்று தெரிந்தும் அவன் தன் சமூகத்தைச் சார்ந்தவன் என்பதற்காக அவனுக்கு உதவினால் அதுவே இனவெறி” என்றார்கள்.
– நூல்: அஹ்மத்
ஒரு முஸ்லிம் எனது தாய் நாடான இந்தியாவுக்கு எதிராக செயல்பட்டால் அவனுக்கு நான் உதவி செய்தால் நான் இஸ்லாத்தை விட்டு வெளியேறுகிறேன் என்பது இந்த நபி உணர்த்துகிறது.
அல்குர்ஆன் 28வது அத்தியாயம் 8வது வசனத்தில்
“முஸ்லீம்களே உங்களிடம் போர் புரியாமல், உங்களை உங்கள் வீடுகளிலிருந்து வெளியேற்ற நினைக்காமல் உங்களுடன் நட்புடன் இருக்கும் முஸ்லீம் அல்லாதவர்களுடன் நீங்களும் நியாயமாகவும் நல்லவிதமாகவும் நடந்து கொள்ளுங்கள்.”
என்ற கருத்து உணர்த்தப்படுகிறது.
வேற்றுமையில் ஒற்றுமை சமூகங்களிடையே சாத்தியமா?
‘எங்கள் இறைவன் அல்லாஹ்வே! என்று அவர்கள் கூறியதற்காகவே நியாயமின்றி அவர்களின் இல்லங்களில் இருந்து வெளியேற்றப்பட்டனர். மனிதர்களில் ஒருவர் மூலம் மற்றவரை இறைவன் தடுத்திருக்கா விட்டால் மடங்களும, ஆலயங்களும், வழிபாட்டுத் தலங்களும் இறைவனின் பெயர் அதிகமாகத் துதிக்கப்படும் பள்ளி வாசல்களும் இடிக்கப்பட்டிருக்கும்.’
குர்ஆன் 22:40
பல்வேறு மதத்தவர்கள் வாழும் இவ்வுலகில் நல்லிணக்கம் ஏற்படுவ தற்கான முக்கிய அறிவுரையை இவ்வசனம் (22:40) கூறுகிறது
எனவே சமூக நல்லிணக்கம் இஸ்லாத்தின் ஒரு பகுதியாகவே உள்ளதால் தான் பிறந்த நாட்டை நேசிப்பது ஒரு முஸ்லிமின் தலையாய கடமை என்பதை உணர வேண்டும். அதே நேரம் தனது தாய் நாட்டின் ஆட்சியாளர் நீதி தவறி தவறான வழியில் சென்றால் அதை தட்டிக் கேட்பதிலும் முதல் ஆளாக ஒரு முஸ்லிம் இருக்க வேண்டும். அந்த எதிர்ப்பையும் அஹிம்சையான முறையில் போராட்டங்கள் மூலம் வென்றெடுக்க வேண்டும். எந்த வகையிலும் தனி ஒரு மனிதன் ஆயும் ஏந்த இஸ்லாம் அனுமதிக்க வில்லை.
>> மாறாக தன் சமூகத்தை சார்ந்தவன் வரம்பு மீறி அநீதியை செய்யும்போது அவன் செய்வது தவறு என்று தெரிந்தும் அவன் தன் சமூகத்தைச் சார்ந்தவன் என்பதற்காக அவனுக்கு உதவினால் அதுவே இனவெறி
இத..இததானே உங்கள பார்த்து சொல்லறோம். இங்கே இத்தனை முறை இஸ்லாத்தை உயர்த்தி பிடித்து கருத்து கூறும் நீங்கள், எத்தனை முறை குரானை தவறாக படித்து தவறான பாதையில் போகும் மக்களை கண்டித்து திருத்தி இருக்கிறீர்கள்? மாறாக இப்படி தவறான பாதையில் செல்போருக்கு ஆதரவாக conspiracy theoryகளை பரப்புவது எந்த விதத்தில் நியாயம்?
இஸ்லாம் வெகு வேகமாக வளரும் மதம், ஹிந்துக்கள் பெருவாரியாக இஸ்லாத்திற்கு மாறுகிறார்கள் என்ற உங்களது தமிழக அரசாணை சாட்சியான பதிவை மறுபடியும் சில நாள் கழித்து சொல்வீர்களே, அதை எவ்வாறு அழைப்பது? தாக்கியா என்றா ?