முருகபூபதி
மகா கவி சுப்பிரமணிய பாரதியாருக்கு காதலி இருந்தாளா?
கவிஞர்கள் மென்மையான இயல்புள்ளவர்கள். உணர்ச்சிமயமானவர்கள். அவர்களுக்கு காதலி இல்லையாயினும் ஒருதலைப்பட்சமாகவேனும் காதல் இருந்திருக்கலாம்.
1882 இல் டிசம்பர் மாதம் 11 ஆம் திகதி எட்டயபுரத்தில் சுப்பையா என்ற செல்லப்பெயரில் பிறந்தவர் 1921 செப்டெம்பர் 12 ஆம் திகதி திருவல்லிக்கேணியில் உலக மகாகவியாக மறைந்தார்.
1897 இல் தனது பதினான்காவது வயதில் ஏழு வயதுச்சிறுமி செல்லம்மாவை மணந்தார்.
சுமார் 39 வயதுகூட நிறைவுறாத வயதில் – அற்பாயுளில் மறைந்தவர் – எட்டயபுரம், காசி, மதுரை, சென்னை, புதுச்சேரி, கடயம், திருவல்லிக்கேணி என்று தனது குறைந்த வயதிலேயே ஊர் ஊராக அலைந்து அலைந்து வறுமையுடனும் பிரித்தானிய ஏகாதிபத்தியத்திற்கும் எதிராகப் போராடினார். இடையில் கடலூரில் கைதாகி விளக்கமறியலிலும் 34 நாட்கள் தடுத்தும்வைக்கப்பட்டவர்.
அதனால் அவருக்கு காதலிக்க நேரமில்லை என்ற முடிவுக்கு நாம் வந்துவிடலாம்.
ஆனால், எட்டயபுரத்தில் பால்யவயதில் வயல்வெளிகள், நீரோடைகள், குளங்கள் என அலைந்து திரிந்து பறவைகளின் குரலில் மனதை பறிகொடுத்து இயற்கையை ரசித்தவாறு உல்லாசமாக ஓடிவிளையாடியவேளையில் அவருக்கும் ஒரு தலைப்பட்சமான காதல் ஒருத்தி மீதிருந்ததாக சில ஆய்வாளர்கள் கருதினாலும் ஊர்ஜிதப்படுத்த முடியவில்லை.
பாரதியார் காலை வேளையில் கொல்லைக்குச்சென்று சிரமபரிகாரம் செய்துவிட்டு நிர்வாணமாக நின்று சூரிய நமஸ்காரம் செய்வார் என்று அவரது பால்யகாலத்தோழர் ஒருவர் கூறிய தகவல் பதிவாகியிருக்கிறது.
பாரதி திரைப்படத்தை எடுத்தவர்கள் ( இத்திரைப்படத்திற்கு பின்னணியிலிருந்து ஆலோசனை வழங்கியவர்கள் எழுத்தாளர்கள் சுஜாதா மற்றும் ராஜம் கிருஷ்ணன்) பாரதியின் குறிப்பிட்ட நிர்வாண கோலத்தை பூடகமாகவே படத்தில் காண்பிக்கின்றார்கள்.
பாரதி – நிற்பதுவோ நடப்பதுவோ பாடல் கட்சியின் இறுதியில் ஒரு நீர்வீழ்ச்சியில் நீராடும் பொழுது அவரது இடையிலிருக்கும் ஆடை அவரையறியாமலேயே கழன்று நீரோடு ஓடிவிடுகிறது. (படத்தை மீண்டும் ஒரு தடவை பாருங்கள்)
பாரதியின் கண்ணம்மா யார்?
நினையே ரதியென்று நினைக்கிறேனடி….
காற்று வெளியிடைக் கண்ணம்மா நின்றன் காதலை யெண்ணிக்களிக்கின்றேன்.
திருவே நினைக்காதல் கொண்டேனே…
வீணையடி நீ எனக்கு மேவும் விரல் நான் உனக்கு…
முதலான பாடல்களில் பாரதியின் காதல் உணர்வை நாம் காணலாம்.
அவற்றுள் – உன் கண்ணில் நீர் வழிந்தால் என் நெஞ்சில் உதிரம் கொட்டுதடி என்ற வாக்கியம் அதி உச்சம்.
பாரதி படத்தில் ஒரு சிறுமி கன்றுக்குட்டியுடன் வருவாள். அவளை மறைந்திருந்து பார்க்கும் சிறுவன் பாரதி அவளது பாடலில் சொக்கிப்போவான்.
பாடல்: மயில்போல பொண்ணு ஒண்ணு….கிளி போல பேச்சு ஒண்ணு…
படத்தின் இயக்குனர் ஞானசேகரன் பாரதியின் இளைமைக்கால காதலை பூடகமாகச் சொன்னாரா?
எவரும் எதிர்பாராத நிலையில் அந்தச்சிறுமியின் நினைவோடு சிறுமி செல்லம்மாவை மணமேடையில் திடீரென முத்தமிட்டாரா?
எட்டயபுரம் வீதிகளில் மனைவி செல்லம்மாவின் தோளில் கைபோட்டும் கைகோர்த்தும் காதல் உணர்வோடு ஊர்பார்த்திருக்க அழைத்துச்சென்றாரா?
எனினும் பாரதிக்கு உலகம் அறிந்த ஒரு காதலி இருந்தாள்.
அவள் பெயர் தமிழ்.
—.0—
- சிங்கப்பூர் தமிழ் முஸ்லிம்களின் தர்கா தொடர்புப் பாரம்பரியம்
- முரண்களால் நிறைந்த வாழ்க்கை
- இந்தியாவின் முதல் பௌதிக விஞ்ஞான மேதை ஸர் ஜகதிஷ் சந்திர போஸ்
- திறவுகோல்
- கோணங்கிக்கு வாழ்த்துகள்
- கனவுகள் அடர்ந்த காடு – விட்டல்ராவின் ‘தமிழ் சினிமாவின் பரிமாணங்கள்
- தொடுவானம் 36. எங்கள் வீட்டு நல்ல பாம்பு
- தந்தையானவள் அத்தியாயம்-3
- தினம் என் பயணங்கள் -36 இதயத் துடிப்பு அறக்கட்டளை நிறுவகம்
- பேசாமொழி 23வது இதழ் வெளியாகிவிட்டது…
- தேவதாசியும் மகானும் (2)
- அறம் வெல்லும் அஞ்சற்க – அகரமுதல்வனின் கவிதைத் தொகுப்பு. ஒரு வாசிப்பு அனுபவம்
- குளத்தங்கரை வாகைமரம்
- முத்தொள்ளாயிரத்தில் மறம்
- வால்ட் விட்மன் வசனக் கவிதை – 95
- பாவண்ணன் கவிதைகள்
- சுத்த ஜாதகங்கள்
- அழியாச் சித்திரங்கள்
- வள்ளுவரின் வளர்ப்புகள்
- வெண்சங்கு ..!
- பாரதியின் காதலி ?
- காந்தியடிகள் – ஓர் ஓவிய அஞ்சலி
- வாழ்க்கை ஒரு வானவில் – 23
- பொன்வண்டுகள்
- ஆங்கில மகாபாரதம்
காதல் என்பது ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையில் மட்டும் வருவதில்லை.அது தாய் , தந்தை ,அண்ணன் , தங்கை என்று எவ்வகை உறவிற்கும்,மொழி, கலை,தாய்நாடு என்று எதன் மேல் எல்லாம் பற்று வைக்கின்றோமே , அதன் மேல் எல்லாம் ஏற்படும்.உன் கண்ணில் நீர் வடிந்தால் என் நெஞ்சில் உதிரம் கொட்டுதடி எனும் வரிகள் பெற்றவனுக்கும் , பெண்ணுக்குமான வரிகளாகவே எனக்குத் தோன்றுகின்றன.எனினும் நீங்கள் சொல்வது போல் அவனுக்குத் தமிழ் மேல் காதல், நமக்கோ அவன் தமிழ் மேல் காதல்…
//எனினும் பாரதிக்கு உலகம் அறிந்த ஒரு காதலி இருந்தாள்.
அவள் பெயர் தமிழ்.//
பாயு மொளி நீ எனக்குப் பார்க்கும் விழி நானுனக்கு;
தோயும் மது நீ யெனக்குத் தும்பியடி நானுனக்கு;
வாயுரைக்க வருகுவதில்லை;வாழிநின்றன்மேன்மை யெல்லாம்
தூயசுடர் வானொளியே! சூறையமுதே! கண்ணம்மா!
வீணையடி நீ எனக்கு, மேவும் விரல் நானுனக்கு;
பூணும் வடம் நீ எனக்கு, புது வயிரம் நானுனக்கு;
காணுமிடந்தோறு நின்றன் கண்ணி னொளி வீசுதடி!
மாணுடைய பேரரசே! வாழ்வு நிலையே! கண்ணமா!
வான மழை நீ எனக்கு. வண்ணமயில் நானுனக்கு;
பான மடி நீ எனக்குப், பாண்டமடி நானுனக்கு;
ஞான ஒளி வீசுதடி; நங்கை நின்றன் சோதிமுகம்;
ஊனமறு நல்லழகே! ஊறு சுவையே! கண்ணம்மா!
வெண்ணிலவு நீ எனக்கு; மேவு கடல் நானுனக்கு;
பண்ணு சுதி நீ எனக்குப் பாட்டினிமை நானுனக்கு;
எண்ணியெண்ணிப் பார்த்திடிலோர் எண்ணமிலை நின் சுவைக்கே!
கண்ணின் மணி போன்றவளே! கட்டியமுதே! கண்ணம்மா!
வீசு கமழ் நீ எனக்கு! விரியு மலர் நானுனக்கு;
பேசு பொருள் நீ எனக்குப் பேணுமொழி நானுனக்கு;
நேசமுள்ள வான்சுடரே! நின்னழைகை யேதுரைப்பேன்?
ஆசை மதுவே! கனியே அள்ளு சுவையே கண்ணம்மா!
காதலடி நீ எனக்குக் காந்தமடி நானுனக்கு
வேதமடி நீ எனக்கு வித்தையடி நானுனக்கு;
போதமற்ற போதினிலே பொங்கிவரும் தீஞ்சுவையே!
நாத வடிவானவளே! நல்லுயிரே கண்ணம்மா!
நல்லவுயிர் நீ எனக்கு! நாடியடி நானுனக்கு;
செல்வமடி நீ எனக்கு, சேம நிதி நானுனக்கு;
எல்லையற்ற பேரழகே! எங்கும் நிறை பொற்சுடரே!
முல்லை நிகர் புன்னகையாய் போதுமின்பமே! கண்ணமா!
தாரையடி நீ எனக்குத் தண்மதியம் நானுனக்கு;
வீரமடி நீ எனக்குத் வெற்றியடி நானுனக்கு;
தாரணியில் வானுலகில் சார்ந்திருக்கும் இன்பமெல்லாம்
ஓருருவமாய்ச் சமைந்தாய் உள்ளமுதே கண்ணம்மா!
கண்ணம்மா பாரதியின் கற்பனைக் காதலி. அவனால் அது மட்டும் தான் முடியும். நிஜ வாழ்க்கையில் காதல் ஒரு கானல் நீர் அவன் வாழ்ந்த காலத்தில். பாரதியின் அலை மோதும் மனத்துக்கு நிஜக் காதலியால் ஈடு கொடுக்க முடியாது. John Keats, the English poet, writes in his “Ode to a Grecian Urn” the followng: Heard melodies are sweet but those unheard are sweeter. இது பாரதியின் கற்பனைக் காதலுக்கு மிகவும் பொருந்தும்.