பார்வைக்குறைபாடுடைய வாசகர்களையும் பதிப்பகங்கள் கணக்கிலெடுத்துக்கொள்ளவேண்டும்

This entry is part 8 of 10 in the series 15 செப்டம்பர் 2019

_ லதா ராமகிருஷ்ணன்

(Treasurer _ Welfare Foundation of the Blind)

‘பார்வையற்றவன்’ என்ற பெயரில் முகநூலில் இருக்கும் நண்பரின் சமீபத்திய பதிவு ஒன்று முக்கியமானது. அதில் நிறைய பேருக்குத் தெரியாத, எனில் அவசியம் தெரியவேண்டிய ஒரு விஷயத்தைச் சுட்டிக்காட்டியுள்ளார் அவர். அதிலிருந்து சில பத்திகள் கீழே தரப்பட்டுள்ளன:

தமிழகத்தில் 3 லட்சத்திற்கும் மேற்பட்ட பார்வை மாற்றுத்திறனாளிகள் இருக்கின்றனர். அவர்களின் வாசிப்பிற்கு அமேசான் கிண்டில் தீனி போட்டுக் கொண்டிருக்கிறது என சொல்லலாம். அச்சு புத்தகங்களை வாசிக்க இயலாத பார்வை மாற்றுத்திறனாளிகள் குறித்து எந்த எழுத்தாளரும் அச்சகமும் எவ்வித கவலையும் படவில்லை. இன்னும் பச்சையாக சொல்ல வேண்டுமென்றால் , அவர்கள் எங்களை கணக்கி லேயே எடுத்துக் கொள்ளவில்லை.

அமேசானில் வெளிவரும் மின்புத்தகங்களை பார்வை மாற்றுத் திறனாளிகளும் படிக்கமுடியும். சில ஆயிரம் பார்வை மாற்றுத்திறனாளிகளாவது அமேசான் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள் என்று என்னால் உறுதியாகச் சொல்ல முடியும். ஒரு சமூகத்தின் வாசிப்பு கதவை திறந்துவிட்டது என்ற வகையில் நான் அமேசானைக் கொண்டாடுவேன். அது பங்கேற்பாளர்களை படைப்பாளர்களாக மாற்ற களம் அமைத்துத் தருகிறது.

அமேசானில் எழுதப்படுபவை எல்லாம் இலக்கியமா என்ற விவாதம் தேவையற்றது. ஆனால் அமேசானில் இலக்கியமும் எழுத எவ்வித தடையுமில்லை.”

’பார்வை மாற்றுத்திறனாளிகளும் படிக்கும் வகையில் புத்தகங்கள் வடிவமைக்கப்பட வேண்டும்’ என்று தொடர்ந்து வலியுறுத்திவருபவர் தோழர் ‘பார்வையற்றவன்’. தான் மாற்றுத்திறனாளி என்பதில் தனக்கு எந்த தலைக்குனிவுமில்லை என்பதை அடிக்கோடிட்டுக் கூறும் விதத்திலேயே இந்தப் புனைப்பெயரைச் சூட்டிக்கொண்டுள்ளார் என்று தோன்றுகிறது. அவருடைய ’டைம் லைனி’ல் அவர் பதிவேற்றியிருக்கும் ஒரு காணொளி அவருடைய பாடும் திறமையையும் வெளிப்படுத்துவதாக உள்ளது. அவரைப் பற்றிய சிறு குறிப்பு அவருடைய ப்ரொஃபைலிலிருந்து இங்கே தரப்பட்டுள்ளது.

  • இணையாசிரியர் at விரல்மொழியர் மின்னிதழ்
  • Topper at Student
  • Studied 12-th std at IAB Madurai
  • Studies முனைவர் பட்ட ஆய்வாளர் _ P.H.D. TAMIL at The Gandhigram Rural Institute – Deemed University
  • Studied ஆய்வியல் நிறைஞர் _ TAMIL M.PHIL at The Gandhigram Rural Institute – Deemed University
  • Studied Tamil M.A. at H.H.The Rajah’s College, Pudukkottai
  • Studied B.L. at Madurai Law College
  • Studied at Government College of Education, Pudukkottai
  • Studied at American College, Madurai
  • Went to புதுக்கோட்டை பார்வையற்றோருக்கான அரசு துவக்கப்பள்ளி
  • Went to Indian Association for the Blind – IAB

முன்பெல்லாம் பார்வைக்குறைபாடுடையவர்கள் ப்ரெய்ல் எழுத்துமுறையில் எழுதப் பட்டு பிரசுரிக்கப்படும் புத்தகங்களை மட்டுமே படிக்க முடியும். பெரும்பாலும் பாடப்புத்தகங்கள் மட்டுமே அப்படி உருவாக்கப்படும்.

ஆனால் இப்போது Voice Synthesizer என்பதைப் பயன்படுத்தி அவர்களால் கணினியைத் தனியாக இயக்கி வாசிக்க, விஷயங்களைப் பகிர முடிகிறது. ஆனால், பார்வைக்குறைபாடுடைய எல்லோராலும் கணினியை வாங்கவியலாத நிலை. பள்ளி, கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கு இலவசமாகக் கிடைக்க வழியுண்டு.

இதை நான் சார்ந்திருக்கும் பார்வையற்றோர் நன் நல அமைப்பான WELFARE FOUNDATION OF THE BLIND படித்து முடித்து வேலை கிடைக்காமல் இருக்கும் பார்வைக்குறைபாடுடையவர்களுக்கு முடிந்தவரை  மடிக்கணினி கிடைக்கச் செய்யும் முயற்சியை மேற்கொண்டுள்ளது. இந்த முயற்சியில் மற்றவர்களும் உதவ முன்வரவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

அவ்வப்போது சில பதிப்பகங்கள் பார்வையற்றவர்களுக்கு வாசிக்க ஏற்றதாக நூல்கள் வெளியிட்டுள்ளன. கிழக்கு பதிப்பகம் தரமான படைப்புகளை Talking Books களாக Audio Cassetteகளாக வெளியிட்டுள்ளது. பாரதி புத்தகாலயம் ஓரிரு படைப்புகளை ப்ரெய்ல் எழுத்தில் வெளியிட்டுள்ளது.

வேறு சில பதிப்பகங்கள் பார்வையற்றோரின் படைப்பாற்றல் திறனை வெளிப்படுத்தும் விதத்திலும், ஊக்கப்படுத்தும் விதத்திலும் பார்வையற்ற படைப்பாளிகள் சிலர் எழுதிய சந்தியா பதிப்பகம் எங்கள் அமைப்பின் நிறுவனத் தலைவர் டாக்டர் ஜெயராமனும் நானும் இணைந்து மொழிபெயர்த்த கட்டுரைகளை ‘மொழிபெயர்ப்பின் சவால்கள் என்ற தலைப்பில் நூலாக வெளியிட்டிருக்கிறது. காவ்யா பதிப்பகம் டாக்டர் கோ.கண்ணனின் (தர்மபுரி அரசினர் கலைக்கல்லூரியில் தமிழ்த்துறையில் பேராசிரியராகப் பணியாற்றியவர். தற்போது அந்தக் கல்லூரித் தலைவர் பொறுப்பு வகித்துக்கொண்டிருப்பார் என்று எண்ணுகிறேன்) முனைவர் பட்ட ஆய்வேடான தமிழ் நாவல்கள் தொடர்பான எழுத்தாக்கத்தை நூலாக வெளியிட்டிருக்கிறது. நவீன விருட்சம் பதிப்பகம் கோ.கண்ணனின் இரண்டாவது கவிதைத் தொகுப்பான மழைக்குடை நாட்களை வெளியிட்டது.

கோ.கண்ணனின் முதல் தொகுப்பான ஓசைகளின் நிறமாலை நான் சார்ந்திருக்கும் அமைப்பான WELFARE FOUNDATION OF THE BLINDஇன் பிரசுர முயற்சிகளில் ஒன்றாக வெளியாகியது. (எங்கள் அமைப்பு பார்வையற்றவர்களின் பிரச்னைகளைப் பேசும் நூல்களையும், பார்வையற்றவர்களின் படைப்புத்திறனை வெளிப்படுத்தும் எழுத்தாக்கங்களையும் தொடர்ச்சியாக வெளியிட்டுவருகிறது). திரு.கோ.கண்ணனின் சிறுகதைகளை நியூ செஞ்சுரி புத்தக நிறுவனம் வெளியிட்டுள்ளது.

செல்வி ரம்யா என்ற பார்வையற்ற ஆசிரியையின் கட்டுரைத்தொகுப்பு சமீபத்தில் எங்கள் அமைப்பின் மூலம் வெளியாகியுள்ளது.

http://3.bp.blogspot.com/_bv2nS0LUAgo/Sn0o1nKhEaI/AAAAAAAAAHg/O8THhStW-Ts/s320/7.jpg
http://2.bp.blogspot.com/_bv2nS0LUAgo/Sn0o259nsFI/AAAAAAAAAH4/Z6x0wbx4WwE/s320/10.jpg
http://3.bp.blogspot.com/_bv2nS0LUAgo/Sn0oR66knPI/AAAAAAAAAHY/IrSmzjjTDPw/s320/6.jpg
http://4.bp.blogspot.com/_bv2nS0LUAgo/Sn0oRekLqsI/AAAAAAAAAHQ/78cms0PLalo/s320/5.jpg
http://2.bp.blogspot.com/_bv2nS0LUAgo/Sn0oRGaOVmI/AAAAAAAAAHI/VNnYaH1BhFk/s320/4.jpg
http://3.bp.blogspot.com/_bv2nS0LUAgo/Sn0oQkxVTII/AAAAAAAAAHA/36V9XW54Wi8/s320/3.jpg

BOOKS BY WELFARE FOUNDATION OF THE BLIND

மதுரையிலிருக்கும் INDIAN ASSOCIATION FOR THE BLIND க்ரியா பதிப்பகத்துடன் இணைந்து க்ரியாவின் தமிழ் அகராதி போன்ற சில நூல்களை வெளியிட்டுள்ளது.

பார்வையற்றோர் சிலர் ஆங்கிலத்தில் எழுதிய நூல்கள் சிலவும் வெளியாகியுள்ளன.

பார்வையற்றோரின் எண்ணிக்கையோடு ஒப்பிட அவர்களுக்கென உருவாகும் நூல்களின் எண்ணிக்கை மிகவும் குறைவே என்ற அவலமான உண்மையை தோழர் பார்வையற்றவன் (இவருடைய உண்மைப்பெயர் என்ன என்று தெரிந்து கொள்ளவேண்டும்) எழுதியுள்ள பதிவு அழுத்தமாக எடுத்துக்காட்டுகிறது. இந்த நிலை மாறவேண்டும்.

http://1.bp.blogspot.com/_bv2nS0LUAgo/Sn0s1GaV05I/AAAAAAAAAIg/N2ZTgSe3pHs/s320/2.jpg
http://1.bp.blogspot.com/_bv2nS0LUAgo/Sn0poEOBPVI/AAAAAAAAAIY/ooKpGnS8fWE/s320/1.jpg
http://3.bp.blogspot.com/_bv2nS0LUAgo/Sn0pngV1API/AAAAAAAAAIQ/QEnCs4Qdqdk/s320/12.jpg
http://4.bp.blogspot.com/_bv2nS0LUAgo/Sn0o2Y9n2QI/AAAAAAAAAHw/du0PJQguF4E/s320/9.jpg
http://1.bp.blogspot.com/_bv2nS0LUAgo/Sn0o2K2FZEI/AAAAAAAAAHo/JjpMIy1dkz4/s320/8.jpg
http://3.bp.blogspot.com/_bv2nS0LUAgo/Sn0o1nKhEaI/AAAAAAAAAHg/O8THhStW-Ts/s320/7.jpg
http://2.bp.blogspot.com/_bv2nS0LUAgo/Sn0o259nsFI/AAAAAAAAAH4/Z6x0wbx4WwE/s320/10.jpg
http://3.bp.blogspot.com/_bv2nS0LUAgo/Sn0oR66knPI/AAAAAAAAAHY/IrSmzjjTDPw/s320/6.jpg
http://4.bp.blogspot.com/_bv2nS0LUAgo/Sn0oRekLqsI/AAAAAAAAAHQ/78cms0PLalo/s320/5.jpg
http://2.bp.blogspot.com/_bv2nS0LUAgo/Sn0oRGaOVmI/AAAAAAAAAHI/VNnYaH1BhFk/s320/4.jpg
http://3.bp.blogspot.com/_bv2nS0LUAgo/Sn0oQkxVTII/AAAAAAAAAHA/36V9XW54Wi8/s320/3.jpg

BOOKS BY WELFARE FOUNDATION OF THE BLIND

Series Navigationநவீன தமிழ்க்கவிதையும் நானாதிநானெனும் நுண் அரசியலும்இளஞ்சிவப்புப் பணம் – அத்தியாயம் இரண்டு
author

லதா ராமகிருஷ்ணன்

Similar Posts

2 Comments

  1. Avatar
    பார்வையற்றவன் says:

    பார்வை மாற்றுத்திறனாளிகளின் வாசிப்பு தொடர்பான கோரிக்கையை பரந்த வெளியில் கவனப் படுத்தியமைக்கு நன்றி மேடம். அது தவிர பல பார்வையற்ற படைப்பாளிகளையும் இக்கட்டுரை அறிமுகப்படுத்தியிருக்கிறது. என் பெயருக்கான காரணம் நீங்கள் சொன்னதே தான் மேடம். எனது பெயர் பொன்.சக்திவேல்

  2. Avatar
    அக்பர் சையத் says:

    உங்கள் கட்டுரையின் மூலம் வாசிப்புத் தளங்களைத் தெரிந்துகொண்டேன். நன்றி மேடம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *