புலரட்டும் புதுவாழ்வு

author
0 minutes, 0 seconds Read
This entry is part 11 of 17 in the series 2 மே 2021

ஜெனிகாபிஷன்

 

புது இரவு புன்னகையுடன் புலரட்டும்

புது வாழ்வு நம்பிக்கையுடன் மிளிரட்டும்

புதுத்தென்றல் மனையெல்லாம் வீசட்டும்

மனமெல்லாம் சந்தோஷத்தில் மிதக்கட்டும்

 

அழகான உலகில் அமைதியாக வாழ்ந்திடவே

புலரட்டும் புதுவாழ்வு

தனிமையில் தத்தளிக்கும்

வெறுமையான வாழ்வது நீங்கியே

உன்னத உறவுகளுடனே

புலரட்டும் புதுவாழ்வு

 

இல்லாதவனும் வாழத்தான் வேண்டும்

பொல்லாத கதை பேசாமல்

மற்றோர் மனதை வதைக்காமல்

அகமகிழ்வோடு புலரட்டும் புதுவாழ்வு

 

முன்வீட்டு செய்தியினை

முகப்பு புத்தகத்தில் பார்த்திடாமல்

முகம் பார்த்து பேசியே புலரட்டும்

புதுவாழ்வு

 

மரணம் என்பது மனிதர்க்கு விதி தான்

மனச்சாட்சியினை புதைத்து விடாமல்

மனிதநேய பண்புடனே

புலரட்டும் புதுவாழ்வு

 

பத்து ரூபாய் பெரிதல்ல

பலகோடி சொத்திருக்கு

பிச்சைக்காரனிடம் பெருங்கதை பேசாது

நானும் மனிதன் தான் என்றே

புலரட்டும் புதுவாழ்வு

 

போதை எனும் அரக்கனோடு போகாமல்

ஆசை எனும் அரக்கனை

கொழுத்தும் தீயிற்கே இரையாக்கியே 

புதுமனிதர்களாக 

புலரட்டும் புதுவாழ்வு

 

கண்டொரு கதை

காணாமல் ஒரு கதை

பேசும் 

போலி உறவை கழைந்து

உன்னத உறவின் தாற்பரியம் உணர்ந்தே

உயர்ந்த வாழ்வாக 

புலரட்டும்

 புதுவாழ்வு

 

பிறப்பும் இறப்பும் இயற்கை தானே

இடையில் எதற்கு போர்க்கை மனிதா

அன்பு எனும் தீபம் ஏற்றியே

புலரட்டும் புதுவாழ்வு

 

அவசர உலகில் அவதி அவதியாக கடன் பட்டே

நம்பி வந்தவரை 

நட்டாற்றில் விட்டு விடாமல்

நல்ல எண்ணத்துடன்

நல்லவனாகவே

புலரட்டும் புதுவாழ்வு

 

மண்ணின் வரலாற்றில்

மனிதனாக மீண்டெழுந்தே

நாமும் மனிதன் தான் என்று

பார் போற்ற வாழ்ந்தே

புலரட்டும் புதுவாழ்வு

Series Navigationகவிதையும் ரசனையும்ஜேம்ஸின் மலர்ச்சாலை
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *