Posted in

பூடகமாகச் சொல்வது

This entry is part 2 of 23 in the series 6 ஜூன் 2021

ரிஷி

(லதா ராமகிருஷ்ணன்)

 

 

 

’நாடகமாடுகிறார்கள்’ என்றார்.

’நாடகம் நாட்டியமல்லவே’ என்றேன்.

’ஓபரா தெரியாதோ?’ என்றார்.

’ஒருமாதிரி ’காப்ரா’வாகத்தானிருக்கிறது’ என்றேன்.

’கவிதையே தெரியாதுனக்கு’ என்றார்.

’உங்களிடமிருந்து இப்படியொரு நேர்மறையான பாராட்டு கிடைத்ததில்

அமோக மகிழ்ச்சி யெனக்கு’ என்றேன்.

’வஞ்சப்புகழ்ச்சியா?’ என்று சீறினார்.

’பூடகமாகச் சொல்வது படைப்பூக்கமல்லவென்று

சொல்லியிருக்கிறீர்களே, என்ன செய்ய?’ என்று

என்னை மீறி அங்கலாய்க்க,

’கலாய்க்கிறாயா, நீயெல்லாம் அற்பம்’ என்று

அங்கிருந்து அமைவிடம் சென்ற விற்பன்னர்

சொற்ப நேரமே சும்மாயிருந்து பின்

சுடச்சுட இன்னொரு திறனாய்வுக் கட்டுரை

சமைக்கத் தொடங்கினார்.

Series Navigationசில்லறை விஷயங்கள்அப்பாவிடம் ஒரு கேள்வி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *