– பத்மநாபபுரம் அரவிந்தன் –
யாரேனும் கண்டதுண்டோ .. பூனைகளின்
இயற்கையான மரணத்தை?
வாகனங்களில் அடிபட்டோ , நாய்களால்
கடிபட்டோ இரை பிடிக்கத் தாவுகையில்
தவறிக் கிணற்றுள் விழுந்தோ ..
விபத்து சார்ந்த மரணங்களையன்றி
பூனைகளின் இயற்கையான மரணம்
மனித மனதைப் போல பெரும் புதிர்…
குறிகிய இடத்துள் நெளிந்து நுழையும்
உயர இடத்தில் பரபரக்க ஏறும் …
எப்படித் துக்கிப் போட்டாலும்
கால்கள் ஊன்றித் தரையிறங்கும்
புழுதியில்ப் புரண்டு அழுக்காகும்
நாக்கால் நக்கியே தூய்மையாகும்
விரட்டி வேட்டயாடி .. சில நேரங்களில்
வேடிக்கையாய் விளையாடி ..
புணர்தல் குரலில் ஆவேசங் காட்டி
வாழும் பூனைகள் மரணத்தின் சூட்சுமத்தை
மறைத்தே வைத்திருக்கும்…
தன் மலக் கழிவைக் கூட குழி தோண்டிப்
புதைக்குமை … மரணத்தை தம்முள்
பதுக்கியபடி எங்கென்றே தெரியாமல்
மறையும் ஒரு நாள்.
- இடைச் சொற்கள்
- கார்த்திக்-சலீம்-அஷோக் மற்றும் நான்
- பூர்வீகப் பிரபஞ்சத்தின் பூதக் கருந்துளைகள் காலக்ஸிகளின் உள்ளே உதித்தனவா அல்லது அவற்றை உருவாக்கினவா ?
- கள்ளிப் பூக்கள்
- சீதாயணம் நாடக நூல் வெளியீடு
- மொழிவது சுகம் -ஆகஸ்ட்டு 25
- மேடம் மோனிகாவின் வேடம் (Mrs. Warren’s Profession) நான்கு அங்க நாடகம் (இரண்டாம் அங்கம்) அங்கம் -2 பாகம் -9
- சின்னவனைச் சுழற்றியெடுக்கும் ‘சுழிக் காற்று’
- கடிதம்
- கதையே கவிதையாய்! (2)
- இது…இது… இதானே அரசியல்!
- கடவுளும், கலியுக இந்தியாவும்
- ஆழி – ஜாகீர்ராஜா நூல்கள் வெளியீடு
- தாகூரின் கீதப் பாமாலை – 28 முடிவு காலம் நோக்கி
- ஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் (Shakespeare’s Sonnets : 34) முகிலும், மழையும்
- பெய்வித்த மழை
- ஏனோ உலகம் கசக்கவில்லை*
- தகப்பன்…
- முள்வெளி – அத்தியாயம் -23
- மலைபேச்சு -செஞ்சி சொல்லும்கதை – 40
- சாமி போட்ட முடிச்சு
- பழமொழிகளில் ‘புறங்கூறுதல்’
- மானும் விறகுவெட்டியும் (கொரிய நாடோடிக் கதை)
- “கதை சொல்லி” விருதுகள் மாணவ – மாணவியருக்கான போட்டி பரிசு ரூ.5000/-
- அழுகிய ’கேக்’கும் அமெரிக்கத் தமிழ் ஆடியன்ஸும்
- பா. ரஞ்சித்தின் “ அட்டகத்தி “
- பூனைகளின் மரணம்
- இடைவெளிகள் (9) – புலம்பெயர்தலும் உருளைக்கிழங்கு பொரியலும்
இரு பிழைகள்
ஒன்று :குறிகிய இடத்து அல்ல குறுகிய இடத்து ( அச்சு
பிழைபோலும் )
சந்திப்பிழை ப் தேவையில்லை இங்கு.புழுதியில் புரண்டு
எனக்கு கவிதை பிடிக்கிறது ஒரு பூனையில் இத்தனை செய்திகளா அரவிந்தன் , மேலும் வடியுங்கள் கவிதைகள் மலர்கள் மணந்து வீசட்டும்.பி.கு தெனாலி ராமன் பூனைகள் வளர்த்த கதை தெரியுமா ? என் மின்னஞ்சல் கவிஞர் ஆராkavignarara@gmail.com
ஆனைகளின் பேருரு கிடைக்காவிட்டாலும்
அணிகொண்டு படைகளங் காணாவிட்டாலும்
காதடைக்க பெருங்குரலில் பிளிறாவிட்டாலும்
மூலவரைச் சுமக்கும்பேறு தகைக்காவிட்டாலும்
புறமுதுகில் மணங்கமழ்புனுகு ஊறாவிட்டாலும்
அரிமாவின் ரஜனிப்பிடரி வாய்க்காவிட்டாலும்
கார்வண்ண புலிக்கோடு வரைபடாவிட்டாலும்
எலிபிடிக்கும் இழிபணியில் வளர்ந்துவிட்டாலும்
நமைப்போல இவற்றிகுமோர் தினசரி வாழ்வுண்டு
வாழ்வுண்டானால் அதற்கோர் அந்திம முடிவுமுண்டே
பாடைதூக்காமல் பறையடிகாமல் – காற்றிலிவைக்
காணாமல்போவது எங்கனமெனும் அவதானம் அருமை
மிக்க நன்றி திரு ஜென்சன்..
அற்புதமான கவிமொழியில் கவிதையாலே என் கவிதையைப் பாராட்டியதற்கு …பத்மநாபபுரம் அரவிந்தன் –