தி ண் ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

Current Issue: 11 ஜனவரி 2026
Avatar

பத்மநாபபுர அரவிந்தன்

Total Contribution: 24 Articles

சரித்திர சான்று

பத்மநாபபுரம் அரவிந்தன் - எத்தனையெத்தனை  தலைமுறை  மரபணுக்களின் நீட்சி நான்  என்னுள் நீந்தும்  அவைகள் அத்தனையும்  எத்தனை ஜாதிகள் கொண்டனவோ  எத்தனை மதங்களை ஏற்றனவோ... கள்குடித்துப் பித்தான…

இரு கவிதைகள்

    பொட்டுகள் வீட்டு விசேஷம் முடிந்து அனைவரும் போன பின்பும் மீட்டுத் தருகின்றது பல பெண்களின் நினைவுகளை முகம் பார்க்கும் கண்ணாடியில் ஒட்டியிருக்கும் ஸ்டிக்கர் பொட்டுகள்…

ஞானக் கிறுக்கன்

- பத்மநாபபுரம் அரவிந்தன் - கப்பல்த் தளத்தில் புகை பிடித்தபடி அமர்ந்திருந்தேன் அருகே வந்தமர்ந்தான் அந்த குரோஷியன் .. அமைதியாய் கிடந்த கடலினைப் பார்த்து அவன் சொன்னான்…

 ‘முசுறும் காலமும்’

பத்மநாபபுரம் அரவிந்தன் என் பால்ய காலத்தில் வீட்டு மாமரத்தில் இலைகளைப் பிணைத்துப் பின்னி பெருங் கூட்டமாய் கூடுகளில் முசுறெறும்புகள் வசித்தன... மரமேறி மாம்பழங்கள் பறித்துண்ண ஆசை விரிந்தாலும்…

கூடுவிட்டுக் கூடு

  தன் கடும் பயிற்சியில் கைகூடியது அவனுக்கு கூடுவிட்டுக் கூடு பாயும் வித்தை.. கைகூடியக் கலையை சோதிக்க நினைத்தவன் உயிரிழந்த வெற்றுடம்பைத் தேடியபோது.. எதிரில் நின்றிருந்தது வளர்ப்புப் பூனை கழுத்தை நெரித்து பூனயைக் கொன்றான்.. பூனையின் உடலுள் தன்னுயிர் நுழைத்தான்.. பூனையின் உயிர் உடல்விட்டலைந்தது.. பிணமாய்க் கிடந்த தன்னுடல் அசைவை கண்டதும் பூனை... தன்னுயிர் கொண்டு…

குப்பி

பத்மநாபபுரம் அரவிந்தன் - அன்று அதிகாலை என் அக்காவுக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. அத்தான் ஒரு வாரத்துக்கு முன்பே கப்பலில் இருந்து விடுப்பில் வந்திருந்தார். முந்தைய…

நாக்குள் உறையும் தீ

பத்மநாபபுரம் அரவிந்தன் சில நாக்குகள் கனலை சுமந்து திரிகின்றன சில நாக்குகள் சதா ஜுவாலையை உமிழ்கின்றன சில நாக்குகள் கனல் சுமக்க எத்தனிக்கின்றன சில நாக்குகள் பிற…

ஊறிவழியும் கைபேசிப் பொய்கள்

பத்மநாபபுரம் அரவிந்தன் - ஒவ்வொரு நாளும் பொய் சொல்லாமல் கழிப்பதென்பது இயலாமலேயே இருக்கிறது.. நம்மையறியாமல் நம்முள் நிரந்தரமாய்க் குடியேறிவிட்டன பொய்கள். அதிலும் இந்த கைபேசி வந்த பிற்பாடு…

கடற்புயல் நாட்கள்

காரிருளில் கொடுங் காற்றின் கையசைப்பில் கடிவாளம் இன்றி துள்ளித் திரிகின்றன வெண்ணலைக் குதிரைகள் அவை ஒவ்வொன்றும் கப்பலைத் தகர்க்கும் வெறியுடன் அறைந்து தள்ளும் தாக்குதல் சமாளித்து தன் முழு பலம் திரட்டி உள்ளிறங்கி மேலெழுந்து முன்னேறும் கப்பல் அடிவானக் கூரையில் வேர் நட்டு கடலுக்குள் கிளை பரப்பி விரிந்தெழும் மின்னல் மரங்கள்.. ராட்டினத்தில் இருப்பதுபோல் வயிற்றினுள் குடலேறி கீழிறங்கும் பெருங்குடி குடித்தவனின் நிலைபோல் அலைந்துலையும் கப்பல் ஒவ்வொரு பேரலையும் ஏதாவதொன்றை உடைத்தெறியும் நாங்கள் சாமான்யர்களல்ல…

பத்மநாபபுரம் அரவிந்தன் கவிதைகள்

நழுவிப் போனவைகள்                         அரைத் தூக்க இரவில் தானாய்த் தவழ்ந்து கருத்தும்,கோர்வையுமாய் வார்த்தைகள் பிசகற்று உதித்து வரும் ஒரு கவிதை எழுந்தெழுதும் சோம்பலினால் மறக்காதென்ற நம்பிக்கையில்…