போர்ப் படைஞர் நினைவு நாள்

This entry is part 4 of 10 in the series 10 நவம்பர் 2019

(நவம்பர் 11, 2019)

மூலம் ஆங்கிலம் :  ஜான் மெக்ரே

(கனடா  போர்த் தளபதி)

தமிழாக்கம் : சிஜெயபாரதன்கனடா

போர்த் தளங்களில் அணி அணியாய்

பூத்துக் கிடக்கும்,

எண்ணிலா

செந்நிறப் பாப்பி மலர்கள்

சிலுவை ளுக்கு இடையே !

நெஞ்சை உலுக்கும் காட்சி !

மேலே பாடி பறக்கும் குயில்கள்

பயம் ஏதுவு மின்றி,

கீழே  பீரங்கிச் சத்தம் மெதுவாய்க்

கேட்டு குறையும் !

செத்துப் போனது நாங்கள் !

சில நாட்க ளுக்கு முன்பு பூமியில்

சீராய் வசித்தவர் நாங்கள் !

காலைப் பொழுதை உணர்ந்தோம் !

மாலைப் பொழுதில் மங்கிச்

செங்கதிர்

மறைவதைக் கண்டோம்.

நேசித்தோம்,

நேசிக்கப் பட்டோம் நாங்கள் !

இப்போது

போர்த்தளப் புழுதியில்

வீழ்ந்து கிடக்கிறோம் !

பகைவ ரோடெம் போரைத்

தொடர்வீர் !

தளரும் எமது கைகள்

தருவது

உமது கைக்கு

எரியும் தீப்பந் தங்கள் !

ஏந்திக் கொண்டு தாக்குவீர்.

இறந்தவர் நம்பிக்கை

நிறைவே றாது போனால் ,

உறக்கம் வாரா தெமக்கு ,

போர்த் தளம் யாவும்

எண்ணிலா

செந்நிறப் பாப்பி மலர்கள்

செழித்துக் குலுங்கினும் !

++++++++++++++++

Series Navigationதுணைவியின் இறுதிப் பயண நினைவு நாள் [9/11] [நவம்பர் 9, 2018]முதுமை
jeyabharathan

சி. ஜெயபாரதன், கனடா

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *