இதற்கு கீழ்கண்ட கரணங்களைக் கூறலாம்:
1. இருதய தசைகளுக்கு இரத்தம் கொண்டு செல்லும் காரொனரி தமனிகளில் அடைப்பு உண்டாகியிருக்கலாம்..அதை உண்டாக்கும் சில காரணிகள் வருமாறு:
* தமனி தடிப்பு அல்லது தமனி வீக்கம் ( atheroma )
* குருதியுறைவு ( thrombosis )
* இசிவு , திடீர்ச் சுருக்கம் ( spasm )
* குருதிக்குமிழ் ( embolism )
* இருதய தமனி குறுக்கம் ( stenosis )
2. இருதய தசைகளுக்கு கொண்டுவரப்படும் தமனி இரத்தத்தில் கீழ்க்கண்ட காரணங்களால் குறைவான பிராண வாயு இருக்க நேரலாம்:
* இரத்ர்ஹச் சோகை ( anaemia )
* இரத்தத்தில் கார்பன் மானாக்சைட் எனும் நஞ்சு தன்மைமிக்க வாயு கலந்திருத்தல் ( carboxyhaemoglobinaemia )
* குறைந்த இரத்த அழுத்தம் ( hypotension )
3. இருதயம் வீக்கமுற்றிருந்தாலோ அல்லது இருதயம் வேகமாக இயங்கினாலோ ( உதாரணம்: துரித தைராய்டு செயல்பாடு ) அதன் பிராணவாயுவின் தேவை அதிகமாகும்.
இவ்வாறு இருதய தமனி வியாதியை ( coronary artery disease ) துரிதப்படுத்தக்கூடிய சில காரணிகளை நாம் தெரிந்து வைத்திருப்பது நல்லது.அவை வருமாறு:
* வயது
* பால் – ஆண்கள்
* பரம்பரை
* இனம்
மேற்கூறியவை அனைத்தும் நம்மால் மாற்ற இயலாதவை.இதில் பரம்பரையும் ஒரு முக்கிய காரணமாக இருப்பதால் சொந்தத்திலேயே திருமணம் செய்து கொள்வதை குறைத்துக் கொள்ளலாம்.( ஒரே ஜாதியில் மணந்து கொள்வதைக்கூட குறைத்து கலப்பு மணம் புரிந்து கொள்வதும் நல்லதே! )
* உயர்வான கொழுப்பின் அளவு
* புகைத்தல்
* உயர் இரத்த அழுத்தம்
* நீரிழிவு நோய்
* உடற்பயிற்சியின்மை
* இரத்தம் உறையும் தன்மை அதிகரித்தல்
* C -எதிர்விளைவு புரோதம் ( C – reactive Protein )
* இரத்தத்தில் கந்தக அளவின் உயர்வு ( homocysteinaemia )
* பண்பு நலன் ( personality )
* உயர்வான உடல் பருமன் ( obeisity )
* யூரிக் அமில மூட்டு வீக்கம் ( gout )
* கருத்தடை மாத்திரை
* மதுவுக்கு அடிமை
மேற்கூறியவற்றை நம்மால் ஓரளவு மாற்றவோ அல்லது குறைக்கவோ மூடியும்.
அவற்றை சற்று விரிவாக கவனிப்போம்.
* பால் – ஆண்கள்.
பெண்களைவிட ஆண்கள் இருதய தமனி வியாதியால் அதிகம் பதிக்கப் படுகின்றனர்.இதற்குக் காரணம் பெண்களுக்கு மெனோபாஸ் வரை ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் அளிக்கும் பாதுகாப்பேயாகும்.
* பரம்பரை.
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த பலருக்கு இருதய தமனி நோய் காணப்படலாம்.இதனால் சொந்தத்தில் திருமணம் செய்து கொள்வதை தவிர்ப்பது நல்லது.
* புகைத்தல்
இருதய தமனி நோய் புகைத்தலுடன் நேரடி தொடர்புடையது.ஒருவர் எத்தனை சிகரெட் புகைக்கின்றாரோ, அதற்கேற்ப அதிகமாக தமனி நோய் உண்டாகும் ஆபத்தும் உள்ளது.
* உணவு
கொழுப்பு அதிகமுள்ள உணவு வகைகளை உட்கொள்வ்தோடு தமனி நோய் அதிகம் தொடர்புடையது.
* உயர் இரத்த அழுத்தம்
உயர் இரத்த அழுத்தம் தமனி நோயுடன் நேரடித் தொடர்புடியது.
* நீரிழிவு வியாதி
நீரிழிவு வியாதியில் தமனிகள் நேரடியாகப் பாதிப்புக்கு உள்ளாவதால் இருதய தமனி நோய் எளிதில் உண்டாகிறது.
* உடற்பயிற்சியின்மையும் இருதய தமனி நோய்க்கு ஒரு முக்கிய காரணமாகும்.
ஆகவே மாரடைப்பு உண்டாவதற்கு முன்னோடியாகத் திகழும் இருதய தமனி நோய் பற்றி ஓரளவு இந்த வாரம் விளக்கியுள்ளேன். இதில் கூறப்பட்டுள்ள சில முக்கிய காரணிகளை நாம் விலக்கி வாழ முற்பட்டால் நம் இருதயத்தை மரடைப்பிலிருந்து காத்துக்கொள்ளலாம்.
( முடிந்தது
- போதி மரம் சத்யானந்தன் பாகம் 2 – புத்தர் அத்தியாயம் 30
- கடவுள்களும் மரிக்கும் தேசம்
- அண்மையில் படித்தது ம.ராஜேந்திரனின் “சிற்பியின் விதி” [ சிறுகதைத் தொகுப்பு ]
- நீங்காத நினைவுகள் 12
- வீடென்பது பேறு முன்னுரை – குவர்னிகா இலக்கியச் சந்திப்பு மலர் :
- விண்ணப்பம்
- தாகூரின் கீதப் பாமாலை – 75 என்ன திருவிளையாடல் இது .. ?
- சிரட்டை !
- வால்ட் விட்மன் வசனக் கவிதை -34 என்னைப் பற்றிய பாடல் – 27 (Song of Myself) (1819-1892) (புல்லின் இலைகள் -1) ஊக்கமூட்டும் என் ஆத்மா
- புகழ் பெற்ற ஏழைகள் 17
- டௌரி தராத கௌரி …கல்யாணம்.! – 12
- உயில்
- மருத்துவக் கட்டுரை இருதய தமனி நோய்
- பொசலான்
- 65 மில்லியன் ஆண்டுகட்கு முன்னே மெக்ஸிக்கோவில் முரண்கோள் மோதிப் பிரளயம் விளைவித்தது
- திருட்டு
- காக்காய் பொன்
- வேதாளத்தின் மாணாக்கன் (The Devil’s Disciple) அங்கம் -3 பாகம் -12 மூன்று அங்க நாடகம்
- குருக்ஷேத்திரக் குடும்பங்கள் 20
- நேரத்தின் காட்சி…
- ’பிறர் தர வாரா..?’
- தமிழ் வலைப்பூத் திரட்டிகளின் பங்கும் பணியும்- ஒரு மதிப்பீடு
- மேத்தாவின் கவிதைகளில் தமிழும் தமிழினமும்
- இதழ்கள் நோக்கில் விளம்பர வகைகள்
- மாலதி மைத்ரி கவிதைகள் – சங்கராபரணி தொகுப்பை முன்வைத்து…
- ஜென்
- குளம் பற்றிய குறிப்புகள்
- இருபது ரூபாய்
- மாஞ்சோலை மலைமேட்டில்…..
- காதலின் தற்கொலை