வால்ட் விட்மன் வசனக் கவிதை – 75 வேர்களும், இலைகளும் தனித்தே உள்ளன !

This entry is part 1 of 22 in the series 18 மே 2014

walwhit

(1819-1892)

ஆதாமின் பிள்ளைகள் – 3

(Children of Adam)

(Roots & Leaves Themselves Alone)

வேர்களும், இலைகளும் தனித்தே உள்ளன !

 

மூலம் : வால்ட் விட்மன்
தமிழாக்கம் : சி. ஜெயபாரதன்கனடா

 

 

  

வேர்களும்இலைகளும் தமக்குள்

தனித்தே உள்ளன !

மனிதர்க்கும் 

வனிதை யர்க்கும் நறுமணங்கள்,

வனத்தி லிருந்தும்,

நீர்க் குளத்தருகி லிருந்தும்

ருகின்றன !

சூரியன் காலை எழும்போது

மார்புச் சிவப்பு

காதல் நினைவில் மலர்ந்து

கை விரல்கள்

திராட்சைக்

கொடிகளை விடவும்

இறுகச் சுற்றிக் கொள்ளும் !

மறைந்த வண்ணம்,

பறவை இனம் வாய் பிளந்து

கூச்சலிடும் !

 

 

கடற் பயணிகளே !

நிலத்தடித் தென்றலும்,

நேசத் தனமும்,

அலை அடிக்கும்

கடற் கரைகளி லிருந்து

புறப்படும் உமக்காக.

பனிச்சூழ்

பெர்ரிக் கனிகள் 

கூதற் பருவ காலம்

முடிந்த வுடன்

வயற்புறம் சுற்றித் திரியும்

வாலி பருக்கு

வழங்கப் படும் புதியாய் !

 

 

நீர் யாராய் இருப்பினும்,

(வசந்த காலம் வந்தவுடன்)

உன் முன்பும்

உன்னுள்ளும் வைக்கப்படும்

காதல் மொட்டுகள் !

ண்டை விதிக்குப் படிந்து தான்

விண்டு மலரும் மொட்டுகள்.

பரிதியின் கணப்பை

மொட்டு களுக்கு நீ அளித்தால்,

வாயிதழ் திறக்கும் அவை

வடிவம் பெற்று,

வர்ணம் மேவி,

வாசனை வீசும் உன்மேல் !

ஈரடிப்பில் நீ நோயுற்றால்,

மொட்டு மலராகும்,

காய்த்துக் கனி யாகும்

சாய்ந்த கிளை யாகும்

உயர் மரங்களாய் !

 

 

Series Navigation
jeyabharathan

சி. ஜெயபாரதன், கனடா

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *