வால்ட் விட்மன் வசனக் கவிதை – 91

This entry is part 1 of 26 in the series 7 செப்டம்பர் 2014

 

(1819-1892)

 

ஆதாமின் பிள்ளைகள் – 3

(Song of the Open Road)

(திறந்த பாதைப் பாட்டு -3)

 

விரியும் அண்டம்

 

மூலம் : வால்ட் விட்மன்
தமிழாக்கம் : சி. ஜெயபாரதன்கனடா

 

விரிந்து கொண்டு போகுது அண்டம்

வலப்புறமும், இடப்புறமும்

உயிர்ப்புடன் உள்ளது முழுத் தோற்றம்,

ஓவ்வோர்  அங்கமும் அதன்

உன்னத ஒளியுடன் !

தாவிப் பாயுது இசைமயம்

ஏற்புடைத் தளங்களில் !

தடைப் படுகிறது

விரும்பப் படாத இடங்களில் !

ஊர்த்தெரு வீதிகளில்

பூரிப்புக் கூச்சல்கள் !

புதுமை யூட்டும் உணர்ச்சிகள் !

 

 

பெரு வீதியில் நடக்கும் என்னை

கடக்காதே என்று நீ

தடுப்பாயா ?

துணிந்து செல்லாதே என்று

என்னை மறிப்பாயா ?,

உன்னை விட்டு அகன்றால், நான்

பாதை தவறுவேன் என்று

போதிப் பாயா ?

நான் முன்பே தயா ரென்று

நவில்வாயா ?

எதிர்ப் பில்லை எனக்கு,

மறுப்பில்லை

என்றும் என்னைப்

பின்பற்றிக் கொள்வாயா ?

பொதுப் பாதைகளே !

புறமுது காகப் புகல்வேன் :

பாதை விட்டுச் செல்ல

பயப்படேன்,

உன்மேல் நான்

காதல் கொண்டுள்ள தால் !

என்னை விட நீ

உன்னத மாய் என்னைப் பற்றி

உரைத்திட முடிவதால்.

என் கவிதைக்கும் மேலாய்

நீ எனக்கு

நெருக்க மானவன் !

 

 

தீவிரப் புரட்சிகள் யாவும்

திறந்த வெளியில் தான் பிறந்தவை !

சுதந்திர கீதங்களும்

உதித்தன அப்படித் தான் !

இப்படியே நான்

இங்கு நின்று

ஒப்பற்ற விந்தைகள்

புரியலாம் !

தெருவில் சந்திப்ப தெவராயினும்

விரும்புவேன் அவரை !

பார்ப்பவர் எவராயினும்

நேசிப்ப ரென்னை !

யாரை நான் வீதியில் நோக்கினும்

பேருவகை அடைதல் வேண்டும் !

இதுதான் நான் சிந்திப்பது.

  

+++++++++++++++++++++++

    

தகவல்:

  1. The Complete Poems of Walt Whitman , Notes By : Stephen Matterson [2006]
  2. Penguin Classics : Walt Whitman Leaves of Grass Edited By : Malcolm Cowley  [First 1855 Edition] [ 1986]
  3. Britannica Concise Encyclopedia [2003]
  4. Encyclopedia Britannica [1978]
  5. http://en.wikipedia.org/wiki/Walt_Whitman

 

Series Navigation
jeyabharathan

சி. ஜெயபாரதன், கனடா

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *