This entry is part 6 of 33 in the series 12 ஜூன் 2011

நாட்கள் நத்தை போல்

நகர்கிறது

கணக்குச் சூத்திரம் போல

வாழ்க்கை வெகு சிக்கலாக

இருக்கிறது

தாழப் பறந்து கொண்டுள்ளதால்

உயரே பறப்பவர்களின் எச்சம்

என் மீது விழுகிறது

சிலந்தி வலையில்

சிக்கிக் கொண்டதைப் போல

வாழ்க்கை சங்கிலிகளால்

என்னைப் பிணைத்துள்ளது

நினைத்தபடி காரியங்கள்

நடக்காத போது

சரணாகதி தீர்வாகிறது

அதல பாதாளத்தில்

விழுந்து கொண்டிருக்கும் போது

கையில் பற்றிய

மரக்கிளையும் முறிந்தால்

என் கதி என்னாவது

சூழ்நிலைக் கைதியாய்

விளையாட்டுப் பொம்மையாய்

விதியின் கைப்பாவையாய்

எத்தனை நாளைக்கு இருப்பது

சதுரங்க விளையாட்டில்

வெட்டுண்ட சிப்பாய்களுக்கு

ராஜாவை காக்க முடியவில்லையே

என்ற கவலை வருமா.

 

 

 

Series Navigationஊரில் மழையாமே?!மனவழிச் சாலை