This entry is part 17 of 38 in the series 10 ஜூலை 2011

கருநிற மேகமொன்று சற்று
வெளிறிப் போயிருந்தது
அவளது பார்வை
கலைந்து போனதில் நிலைத்து

மேகத்திரையில்
காற்றின் அலைகள்
பிய்த்து போட்டன
கற்பனைகளை

மீண்டும்
ஒன்று கூடிற்று
கலைந்து போனவை
பார்வையின் உஷ்ணம்
தாங்காது

கோர்த்து வைத்தவை
காணாமல் போக
கண்ணீர் வடித்தது வானம் ,
அவள் பார்வையில் பட்டபடி

இடியாகவும்
மின்னலாகவும்
உருமாற்றம் பெற்றன
குரோதம் கொப்பளித்த கணங்கள்

சலனங்கள் ஏதுமற்று
மீண்டும் மீண்டும் வெறித்தபடி
பார்த்துக் கொண்டேயிருக்கின்றன
அவளிரு விழிகள்

ஷம்மி முத்துவேல்

Series Navigationஎதிர் வரும் நிறம்ஸ்வரதாளங்கள்..