Posted in

எங்கிலும் அவன் …

This entry is part 10 of 47 in the series 21 ஆகஸ்ட் 2011

எங்கிலும் அவன் ஒளிந்தே இருக்கிறான்

காலை பொழுதின் கதிரினூடே கிளம்பி
மாலை மயங்கியும் கூட
அவனின் உறக்கங்கள் துவக்கபடவேயில்லை
அடர் வனங்களின் தருவின் இடுக்குகளில்
வீழ்ந்து கிடந்த இலையொன்று
கதைத்து கரைத்தது அவனின் எண்ணற்ற
வெற்றி பொழுதுகளை
சுழன்றடித்த பெருங்காற்று
கிளப்பியது எரிந்து போன சாம்பல் நினைவுகளை
பெருந்தீவின் பாரமென
ஒளிந்து நின்ற பெருங்கனவின்
சார்பை ஒத்தே இருந்தன அந்த
இலையின் ஒரு புறம் ..
மறு புறமோ  எங்கோ வழக்கொழிந்த அவன்
ஒட்டிக்கொண்டு இருக்கிறான்..
மரணமென !…..
ஷம்மி முத்துவேல்
Series Navigationமாற்றுத்திரை குறும்பட ஆவணப்பட விழாமுன்னறிவிப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *